படித்த 10 லட்சம் பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு வேலை கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி ஏமாற்று வேலையா? – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை தருவதாக சொல்லிவிட்டு, தற்போது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை மீண்டும் மறுசுழற்சி முறையில் அவர்களை பணியமத்துவது, படித்த இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவு ஏமாற்றமானது. இதற்கு பாஜக மாநில தலைவர் நான்தான் நாகேந்திரன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்,படித்த பட்டதாரி இளைஞர்கள் டிஎன்பிசி மூலம் தேர்வு செய்யப்பட்டு,அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குங்கள். தவிர, ஓய்வு பெற்றவர்களை வைத்து பணியமத்தினால்,, செலவு குறைவு என்று பணியமர்த்தக் கூடாது. அவர்களுக்கு ஊதியம் கொடுத்து அவர்களுடைய வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும் என்று தான் அரசாங்கத்தின் திட்டமாக இருக்க வேண்டும்.

எது எப்படி இருந்தாலும்,படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது முக்கியத்துவம் ஆனது. தமிழக முதல்வர் அதை தான் சிந்திக்க வேண்டும் ஒழிய, ஓய்வு பெற்றவர்களை பணியமர்த்துவதற்கு சிந்திக்க கூடாது. இதனால் அரசு நிர்வாகத்தின் செலவு அதிகரிக்கிறது என்று கணக்கும் பார்க்கக் கூடாது.

ஒரு குடும்பம் அரசு நிர்வாகத்தில் பிழைக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி எல்லாம் குறுக்கு வழியில் அரசின் நிர்வாகத்தை செயல்படுத்த நினைக்கக் கூடாது.

மேலும் தேர்தல் நேரத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு இப்போது ஓய்வு பெற்றவர்களை பணியமர்த்துவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *