அண்ணா பல்கலைக் கழகத்தில்! தற்காலிக விரிவுரையாளர்களை பணி நியமனம் செய்யாமல், பணத்திற்காக, ஆசிரியர்கள் தேர்வாணையத்தின் மூலம் நியமனம் செய்த (பொறுப்பு) பதிவாளர் குமரேசனின் மிகப் பெரிய ஊழல் ? லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிடுவாரா ? – அண்ணா பல்கலைக்கழக தற்காலிக ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை .
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல், இது போன்ற திமுகவின் அரசியல் பின்னணியில் பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்ட குமரேசன் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் . மேலும்,இந்த 200க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள், தொடங்கப்பட்ட நாளிலிருந்து இவர்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்கள். மேலும்,இந்த 15 ஆண்டுகளில் ,இந்த விரிவுரையாளர்களிடம் பயின்ற பொறியியல் பட்டதாரிகள், உலகம் முழுதும் இன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும், […]



















