மத சம்பந்தப்பட்ட விஷயங்களில், கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களில், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு, பட்டா என்பது தவறான முடிவு. இதை மறுபரிசலனை செய்வாரா? – தமிழக முதல்வர் விஜய் .

இந்து கோயில் சொத்துக்கள், அந்த காலத்தில் வாழ்ந்த மிராசுதார்கள், மன்னர்கள், ஜமீன்தார்கள், எழுதி வைத்துவிட்டு போன சொத்துக்கள் .இந்த சொத்துக்களை அவர்களுடைய பரம்பரை வம்ச வழிகள் கூட அனுபவிக்க முடியாது . ஆனால்,அந்த நிலத்தில் வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு ,அந்த கோயிலுக்கு பராமரிப்பது, அதற்கான செலவுகளை பார்த்துக் கொள்வது, இதற்காக அவர்கள் எழுதி வைத்துவிட்டு போனார்கள் . ஆனால், இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள 3000 ஏக்கர் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நான் பட்டா போட்டு தருகிறேன் […]

Continue Reading

தனுஷ் அரசியலுக்கு வருவது உறுதி ஆகிவிட்டதா? புலம்பும் தமிழக அரசியல் கட்சிகள்.

எம்ஜிஆர் தனது ரசிகர்களை வைத்து எப்படி அரசியலுக்கு வந்தாரோ, அதை பின்பற்றி விஜய் அரசியலுக்கு வந்தார். அதே பணியில் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களை வைத்து அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளார் என்பது அரசியல் வட்டார தகவல். மேலும்,இப்போது தனுஷ் அரசியலுக்கு வந்து விட்டால், ஒருவேளை தனுஷ் மற்றும் விஜய் போட்டியாக தான் இருக்குமா? அல்லது அரசியல் அதிகார கனவில் இருக்கின்ற அரசியல் கட்சியினர், தனக்கு போட்டியாக இன்னொரு அரசியல் கட்சி வரும்போதே அவர்களுக்கு ஒரு வயிற்றெரிச்சல் […]

Continue Reading

கோயில்களில் விரைவில் தரிசனம் செய்ய உத்தரவு – தமிழக முதல்வர் விஜய் .

தமிழக முதல்வர் விஜய் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ,திருத்தணி போன்ற முருகனின் ஆறுபடை வீடுகளிலும், பெருமாள் கோயில்களிலும், தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்துக் கொண்டிருக்க வேண்டிய இருப்பதால், பக்தர்கள் ஆனாலும் நான்கு மணி நேரம், 5 மணி நேரம் நின்று சாமி கும்பிடும் போது, வயதானவர்கள் முதல் குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் ,அந்த வேதனையை இறைவன் மீது வைத்து விட்டு, நின்று கொண்டிருக்கிறார்கள். அந்த நிலையை மாற்றி பொது மக்கள் விரைவு […]

Continue Reading

கரூரில் விஜய் மாநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்த போதே தவறான முடிவு – மக்கள் அதிகாரம் மீடியா .

தமிழக முதல்வர் விஜய் கரூர் மாநாட்டில் இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தின் சார்பாக ஒருவருக்கு வேலை வாய்ப்பை கொடுக்க உத்தரவு வழங்கி அதற்கான அரசாணையும் பிறப்பித்தார். அப்போதே எமது பத்திரிகை செய்தியில் இது தவறான முடிவு என்று செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும்,இப்பிரச்சனை உச்ச நீதிமன்றம் வரை கூட செல்ல வாய்ப்புள்ளது என்று கூட தெரிவித்து இருந்தோம்.தவிர, தற்போது மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசாணையை ரத்து செய்துள்ளது. இதில் நீதிமன்றம் மயிரிழையில் தீர்ப்பில் தப்பித்து இருக்கிறது. முதலில் தற்காலிக பணி […]

Continue Reading

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மற்றும் ஸ்திரமான அரசியல், அமெரிக்காவுக்கு அது வீழ்ச்சியை ஏற்படுத்துகிறதா? – சமூக வலைதளங்களில் இது உளவுத்துறை ரிப்போர்ட்டா?

சமூக வலைதளங்களில் உளவுத்துறை ரிப்போர்ட் போல தான் தெரிகிறது ‌.அது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை தீயிட்டு ,கொளுத்தி அரசாங்கத்தை கவிழ்க்க ,அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும்,இது உண்மையிலேயே 100% நாடு ஆபத்தை இந்தியாவுக்குள்ளே மதக் கலவரங்களை, ஜாதி கலவரங்களை ஏற்படுத்தி, இந்தியாவை அழிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு உறுதுணையாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ,அடிக்கடி அமெரிக்கா ,துருக்கி, பங்களாதேஷ் இப்படி இவருடைய பயணம் ரகசிய பயணமாகவே இருந்து வருகிறது. […]

Continue Reading

ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக செயல்படும்,தேச விரோத சக்திகளுடன் மறைமுக கூட்டு வைத்திருப்பதால்!தமிழக வெற்றி கழகம், இந்த கூட்டணியை மறுபரிசீலனை செய்யுமா?

ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடு செல்வது, இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, இது எல்லாம் தேச விரோத சக்தியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவு கூட்டணியை மறு பரிசீலனை செய்வது நல்லது. காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பதும் ,தேச விரத சக்திகள் உடன் கூட்டணி வைப்பதும், இரண்டும் ஒன்றுதான். மேலும், அதனுடைய ஒரு சிறிய வெளிப்பாடுதான், டெல்லியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் உளவுத்துறை ரிப்போர்ட் […]

Continue Reading

இன்றைய அரசியல் கட்சியின் தலைவர்கள் முதல் திரைத் துறை சம்பந்தப்பட்டவர்கள் வரை நீட் தேர்வு வைத்து அரசியல் செய்யும் இவர்களுக்கு பிராக்டிகல் மற்றும் நடைமுறை உண்மைகள் என்னவென்று தெரியுமா ?

நீட் தேர்வு பற்றி இவ்வளவு பேசுகின்ற திரை துறையினர் ,அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏன் ? நீங்கள் உங்கள் உடலுக்கும் அல்லது உங்க குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், உடல் நிலை பாதிக்கப்படும்போது, அரசு மருத்துவமனைகளில் ஏன்? மருத்துவம் செய்து கொள்வதில்லை? அங்கே அனுபவமுள்ள டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். மேலும், அங்கே உயர்நிலை மருத்துவம் கிடைக்காது என்று நினைத்து தான் எல்லோரும் தனியார் மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள். அது மட்டுமா? உண்மை நிலை என்ன தெரியுமா? இன்று […]

Continue Reading

ஒரு ஒரு சாமானியன் நீதிபதியாகி, அவரின் வாழ்க்கை! “நீதியின் நிழலாக” திரைப்படம் விரைவில்…!

நீதித்துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த நீதியரசர் முன்னாள் கற்பக விநாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு நீதியின் நிழலாக வெளிவர உள்ளது. மேலும்,அவர் நீதி அரசர் என்பதற்கும் மேலாக மனித நேயம் மிக்க ஒரு மாமனிதர். இவர் எத்தனையோ மேடைகளில் தன்னுடைய வாழ்க்கையை ,மாணவர்களுக்கு தான் அனுபவித்த சோக கதைகளை எல்லாம் சொல்லி, ஊக்கிவிப்பார். மேலும்,நடுத்தர மக்கள் வாழ்க்கை போராட்டத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்று அதற்காக குரல் கொடுத்தவர். தவிர,நீதித்துறையில் குற்றவாளிகளை திருத்தியவர். அதுமட்டுமல்ல, […]

Continue Reading