ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள் இருக்கும் வரை மெரினாவில் நடந்த உயிர் இழப்பு சம்பவங்கள் போல் பல நடந்துள்ளது. சுயநலமும், ஊழலும் மட்டுமே ஸ்டாலின் ஆட்சி …! என்பது இது எடுத்துக்காட்டு -மக்கள் உண்மை, நேர்மையின் முக்கியத்துவம் உணராத வரை இதுதான் ஆட்சி நிர்வாகம் .

அக்டோபர் 08, 2024 • Makkal Adhikaram ராணுவ விமானங்களின் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற மெரினாவில் சுமார் பத்து லட்சம் பேர் கூட்டம்! நெருக்கடியில் 10 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர். தமிழக அரசு இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தும் போது மக்களின் கூட்டத்திற்கு, அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் . இது முதல் தவறு.  அடுத்தது மக்கள் இவ்வளவு கூட்டம் கூடும்போது, ஏதாவது ஒரு பிரச்சனையோ, அசம்பாவிதமோ ஏற்பட்டால், திடீரென்று வெளிவர […]

Continue Reading

As long as there are people who take money for votes, there have been many incidents of loss of life in Marina. Stalin’s rule is only selfishness and corruption. This is an example – as long as people do not realize the importance of truth and honesty, this is governance.

October 08, 2024 • Makkal Adhikaram Nearly 10 lakh people throng Marina to watch military aircraft’s adventure show Ten people died in the crisis. More than 100 people are in hospital. When the Tamil Nadu government conducts such an event, it should have made security arrangements for the crowd accordingly. This is the first mistake. Next, […]

Continue Reading

தூய்மை பணியாளர்களின் பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ பணத்தை அவர்கள் கணக்கில் செலுத்தாமல் JP VINCIPLE ஒப்பந்த நிறுவனம் தூய்மை பணியாளர்களை ஏமாற்றுகிறதா ? இதற்கு நகராட்சி அதிகாரிகள் உடந்தையா?

அக்டோபர் 07, 2024 • Makkal Adhikaram ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கஸ்பா புதுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் இந்துமதி, இவர் தூய்மை பணியாளராக ஆற்காடு நகராட்சியில் பணியாற்றி வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பது, JP VINCIPLE ஒப்பந்த நிறுவனம் தூய்மை பணியாளர்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ செலுத்தாமல் ஏமாற்றுகிறது .இதற்கு நகராட்சி அதிகாரிகள் துணையுடன் நகராட்சியில் போலி பில் தயார் செய்து எங்களை ஏமாற்றி வருகிறார்கள்.மேலும்,அவர் […]

Continue Reading

கொல்லிமலை அடிவாரத்தில் சேலம் சரக டிஐஜி உமா தலைமையில் கள்ளச்சாராய தேடுதல் வேட்டை!

அக்டோபர் 06, 2024 • Makkal Adhikaram நாமக்கல் :ராசிபுரம், கொல்லிமலை அடிவாரப் பகுதியில் சேலம் சரக டிஐஜி உமாஅவர்கள் தலைமையிலான போலீஸாா் கள்ளச்சாராய தேடுதல் பணியில் ஈடுபட்டனா். ராசிபுரம் அருகேயுள்ள பேளுக்குறிச்சி, பழனியப்பா் கோயில் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து கள்ளச்சாராயம் உற்பத்தி தடுப்பு நடவடிக்கையாக பழனியப்பா் கோயில் மலைப்பகுதியில் சேலம் சரக டிஐஜி உமா, நாமக்கல் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் சாராய […]

Continue Reading

நாமக்கல்லில் பிடிபட்ட பங்களாதேஷ் பிரஜைகள்…! தீவிரவாத கும்பலுடன் தொடர்பா? NIA விசாரணை!

அக்டோபர் 06, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்ட டவுன் காவல் நிலைய எல்லையில் நேற்று பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் ரகசிய தகவலின் அடிப்படையில் பிடித்துள்ளனர்.இதில், பிடிப்பட்டவர்களிடம் ஒருவரிடம் மட்டும் முறையாக பாஸ்போர்ட், விசா இருந்துள்ளது. மற்றவர்களிடம் இல்லாததால் அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “கடந்த 9 மாதங்களாக நாமக்கல் டவுன் காவல் நிலைய எல்லையான விசாணம் பகுதியில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மொகமது முல்லா, அனிக்ஷ் […]

Continue Reading

போதையில் மயங்கிய +1 மாணவி! பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சித்தவர் கைது “

அக்டோபர் 05, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம்:மதுபோதையில் சாலையோரம் கிடந்த மாணவியை மீட்டு விசாரித்ததில் பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சித்தது தெரியவந்துள்ளது. சேலம் மாநகரம் அழகாபுரம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர்,மது போதையால் மயங்கிய நிலையில் சாலையோரம் கிடந்துள்ளார்.இதனை அவ்வழியாக நடந்து சென்று பொதுமக்கள் பார்த்து அந்த பள்ளி மாணவியை உடனடியாக மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் உதவியுடன் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பள்ளி […]

Continue Reading

சிறையில் இருந்து வெளிவந்ததும் மகாவிஷ்ணுவின் காலில் விழுந்த சிறுமிகள்..? இன்னும் பல உயிர்களுக்கு சேவை செய்வோம் என உறுதி..!

அக்டோபர் 05, 2024 • Makkal Adhikaram பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய அவர், கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே மகாவிஷ்ணுவை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.  தொடர்ந்து […]

Continue Reading

நாமக்கல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா எண்

அக்டோபர் 05, 2024 • Makkal Adhikaram நாமக்கல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் இணைய வழி முகவரி வெளியிடப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச சட்ட உதவிக்கு, ‘15100’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இணைய வழி முகவரி ஆகியவற்றை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.  நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான […]

Continue Reading

தமிழகத்தில் இரவு 10 மணி வரை, 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை, 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில், இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Continue Reading

உப்பாறு அணைக்கு நீர் வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள, உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள், பெண்களுடன் வந்து பி.ஏ.பி., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறியதாவது: உப்பாறு அணைக்கு சட்டப்படி 1.3 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். இதன் வாயிலாக நேரடியாக, 6,060 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக, 10 ஆயிரம் நிலங்களும் பயன்பெறுகின்றன. மேலும், 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உப்பாறு அணை உள்ளது.தற்போது, பிஏ.பி., தொகுப்பு […]

Continue Reading