
இந்தியாவின் தற்போதைய சிந்துர் ஆபரேஷன் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு, திறமை,ராணுவத்தின் வலிமை ,,உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் கல்வியின் தரம்,குறைந்திருப்பதால், இங்கு டாக்டர் பட்டம் பெற்று வெளியில் வருபவர்களின் கல்வியின் தரம் தகுதி குறைந்து இருப்பதாக டி.நகரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி இதை தெரிவித்துள்ளார். தவிர ஆண்டுக்கு 7000 பேர் பிஹெச்டி பேர் பட்டம் பெற்று வெளியில் வருகிறார்கள். அவர்களின் பி எச் டி பட்டம், கல்வி தகுதி குறைந்து காணப்படுகிறது.

அதாவது,அவர் சொல்ல வந்த கருத்து என்னவென்றால், நாட்டில் பிஎச்டி பட்டம் பெற்று வெளியில் வரக்கூடிய ஒருவரின் கல்வித் தகுதி,அந்த துறையில் அவர்கள் வல்லுனர்களாக இருக்க வேண்டும். அதற்கு தான் பிஎச்டி பட்டம்.
ஆனால், அதற்கான தகுதி இல்லாமலே கல்லூரிகளில் இந்த பிஹெச்டி பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. உண்மைதான். சில இடங்களில் பணத்தை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். இதைவிட ஒரு கொடுமை 25,000,ஐம்பதாயிரத்திற்கு எல்லாம் இந்த டாக்டர் பட்டம், கொடுக்கக்கூடிய பல்கலைக்கழகங்களும் உள்ளது.
அதனால் அதற்கு அர்த்தம் தெரியாதவர்கள் கூட இப்போது டாக்டர் பட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை வியாபாரமாகவே கூட சில தனியார் அமைப்புகள் இந்தப் பட்டத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை ஒரு பக்கம் சமூக சேவைக்காக கொடுக்கிறோம் என்கிறார்கள். ஆனால், அந்தப் பட்டம் கூட பணத்திற்காக தான் கொடுக்கப்படுகிறது. இப்படி டாக்டர் பட்டம் என்பது எவ்வளவு மலிவாகி இருக்கிறது?

மேலும், அவர்,
தேசிய கல்விக் கொள்கை (NEP) பற்றியும், அதன் முக்கியத்துவத்தை பற்றியும் சுட்டிக்காட்டிய ஆளுநர் ஆர். என். ரவி,அது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் முக்கியமானது என்றார். மேலும்,
2021 முதல் இந்தியாவின் செயல் திட்டங்களை பாராட்டிய ஆளுநர் ரவி, 140 கோடி மக்களை தனது பலமாகக் கொண்டு இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. அதற்கு நாட்டின் தேசிய கல்விக் கொள்கை மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி அது பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்.
மேலும்,ஐ.ஐ.டி. மெட்ராஸ் மட்டும் 400 காப்புரிமைகளைப் பெற்றுள்ளது, இது இந்தியாவின் கண்டுபிடிப்புத் திறனுக்கு கிடைத்த சான்று மட்டுமல்ல, இது தான் மாணவர்களின்,கல்வித்திறனில் கிடைத்த கண்டுபிடிப்பு.
மேலும்,இந்தியாவின் வலிமை,திறமையை சர்வதேச சமூகம் பாராட்டியுள்ள நிலையில், நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் விமர்சனங்களையும்,குறைகளையும், இழப்புகளையும், பற்றி அரசியலுக்காக பேசி வருவது,நாட்டு மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.
தவிர, போரில் சில இழப்புகள் தவிர்க்க முடியாதது. அதை நாம் கடந்து தான் செல்ல வேண்டும். இவ்வாறு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.