குற்ற செயலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டினால் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டால் நடவடிக்கை பாயும் .

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 14, 2024 • Makkal Adhikaram

 தமிழக முதல்வரின் தனிப்பிரிவு தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் நடவடிக்கை பாயும் – முதல்வரின் அறிவிப்பு .

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் நடக்கின்ற குற்ற செயல்களில் ஈடுபடும் பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள் ,ரவுடிகள் ,அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள், பணம் கேட்டு தொந்தரவு செய்தால், உடனடியாக முதலமைச்சர் தனிப்பிரிவு எங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதாவது வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும், வீட்டை புதுப்பிக்கும் போதும், புதிய குடிநீர், கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்படும் போதும், பிளாட்பார்ம் கடைகளில் வியாபாரம் செய்பவர்களிடம் பணம் வசூலிப்பதும், வீடுகளை காலி செய்ய ரவுடிகளை அனுப்புவதும், கட்ட பஞ்சாயத்து செய்து பணம் கேட்பதும், அதற்கு துணை போகும் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் ,அரசு துறை அதிகாரிகளாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட கீழ்க்கண்ட எண்களை முதலமைச்சர் எண் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ள பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

044 – 25672345,044 – 25672283 .

முதலமைச்சரின் எண் :

9443146857 .

Fax No : 044 – 25670930,044 – 25671441 .

 இவ்வாறு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொது மக்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *