பிஜேபியில் அண்ணாமலை அரசியல் தகுதி என்ன ? தலைமை அரசியல் எப்படி இருக்க வேண்டும்?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பிஜேபியில் அண்ணாமலையின் அரசியல் ஒரு விளம்பர அரசியல்! அதன் மூலம் பிஜேபி கிராமங்களுக்கு சென்றடைந்தது. அதிலும் ஒரு படி மேலே, என்ன நடந்தது? என்றால்,அண்ணாமலை ஏழை மாணவர்களிடம் பேசி கட்டியணைப்பது,தாய்மார்களை கட்டியணைத்து பேசுவது, ஒரு சில கட்சிக்காரர்களின் இழப்புக்கள்,கல்யாணம் போன்றவற்றுக்கு சென்றது, இதுதான் அண்ணாமலையின் அரசியல்.

இதிலே அண்ணாமலை அரசியல்வாதியாக செயல்பட்டார?இல்லை காவல்துறை அதிகாரியாக செயல்பட்டார? இது இரண்டிற்குள் அவருடைய அரசியல் தெளிவற்ற அரசியல்.

நான் அண்ணாமலையை முதன் முதலில் கமலாலயத்தில் மாநில தலைவராக பொறுப்பேற்ற போது சந்திக்கிறேன். அப்போது என்னையும் கட்டியணைத்து போட்டோ எடுத்துக் கொண்டார்.நானும் இந்த போட்டோவை பத்திரிகையிலும் வெளியிட்டேன். அப்போது என்னிடம் சொன்னார். முதல் முறையாக சந்திக்கும் போது, அண்ணே இதை ஒரு 30 ஆயிரம் காப்பிஸ் விற்பனையாகும் அளவுக்கு செஞ்சில்லான்னே! நானும் சந்தோஷத்தில் தான் இருந்தேன். நம்பிக்கையோடவும் இருந்தேன்.

பிறகு அடுத்த முறை வந்து சந்திக்கும் போது நான்கு ஐந்து மணி நேரம் காக்க வேண்டி இருந்தது. கூட்டம் அதிகமாக, அதிகமாக சேர, சேர அவரைப் பார்ப்பதே கடினமாகிவிட்டது. ஒரு அரசியலுக்கு வரக்கூடிய தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும்? எப்படி செயல்பட வேண்டும் சினிமா பாணியில் அரசியலை பார்க்கக் கூடாது.

அதிலும் நாங்கள் எல்லாம் ஒரு பத்திரிக்கையாளர்கள். பத்திரிகை நடத்துகிறோம். எங்களிடமே இதுபோன்ற அரசியல் ஷோ காண்பித்தால், அரசியல் தெரியாத மக்களுக்கு என்ன புரியப்போகிறது? என்ன தெரியப்போகிறது? நான் அப்போதே புரிந்து கொண்டேன். சில நண்பர் சர்க்கிளிலும் இது பற்றி சொல்லிவிட்டேன். அண்ணாமலையின் அரசியல், ஆரோக்கியமான அரசியல் அல்ல. இது சீமான் மாதிரி பேசிட்டு போற அரசியல்.

நேற்று இரவு கூட ஒரு நண்பரிடம் இது பற்றி விளக்கமாக பேசி இருந்தேன். அவரும் பிஜேபியை சார்ந்தவர் தான். தற்போதைய தலைவரின் உறவினர். மேலும், அண்ணாமலைக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு கர்வமும் இருந்தது. அது என்ன என்றால்?

இந்த டேட்டாஸ், அதாவது திமுக ஆட்சியில் எந்தெந்த மந்திரி? எவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறார்கள்? இது பற்றி இவருக்கு உளவுத்துறையில் ஆட்கள் இருக்கலாம். அல்லது வேறு சில திமுகவுக்குள் காட்டிக் கொடுக்கும் ஆட்கள் இருக்கலாம். அதன் மூலம் அந்த புள்ளி விவரங்கள் எடுத்துக்கொண்டு இதை மீடியாவில் பேசுவார்.

எத்தனையோ பிரஸ் மீட்டில் செய்தியாளர்களுக்கும், இவருக்கும் வாய் தகராறுகள் ஏற்பட்டிருக்கிறது. அரசியலில் பெரிய தலைமை பொறுப்பில் இருக்கிறவர்கள், நிச்சயம் நிதானம் அவசியமானது. அதிலும் பத்திரிக்கை விஷயத்தில் யோசித்துப் பேச வேண்டும். தடலடி பேச்சு இருந்தது.

அது என்ன என்றால்? காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அந்த மைண்ட் செட் தான், இவருக்கு அதிகம் இருந்தது. ஒருவருக்கு என்ன தெரியுமோ, அதை தான் அவர்களால் செய்ய முடியும். காவல்துறை பணியை காவல்துறை தான், செய்ய முடியும். அரசியல்வாதி பணியை அரசியல்வாதி தான் செய்ய முடியும்.

பத்திரிக்கை பணியை பத்திரிகையாளர்கள் தான் செய்ய முடியும். இதில் பிஜேபி கொஞ்சம் வித்தியாசமாக இவரை கொண்டு வந்து மாநில பொறுப்பில் சேர்த்தது. அது திருடனையும், கொள்ளையனையும் பிடிப்பவர்கள் காவல்துறை. அதை எதுக்கு பயன்படுத்த முடியும்? என்றால், திமுகவின் ஊழலை வெளிப்படுத்த அண்ணாமலை இருந்தது தான் பிஜேபியின் அரசியல் வளர்ச்சி. தவிர,

மற்றபடிக்கு அண்ணாமலை மக்களுக்கான அரசியல் எது?என்று அவர் செய்யவில்லை. அதற்கு பதிலாக சோசியல் மீடியாவில் மக்கள் பணியை செய்வது போல், விளம்பரப்படுத்திக் கொண்டார். அடுத்தது, அப்பவும் சில செய்திகளை சொன்னேன் பிஜேபி இன்னும் மக்களை நெருங்கவில்லை.நிர்வாகிகள் மக்களை நெருங்கி அரசியல் செய்யும் அளவிற்கு தகுதியான நிர்வாகிகளை, பிஜேபி தேர்வு செய்ய வேண்டும்.

அப்போதுதான் அந்தப் பகுதியில் அவர்களுடைய அரசியல் என்ன? என்பது மக்களுக்கு தெரியும். அடுத்தது அண்ணாமலை இருந்த காலத்திலும், தற்போது வரை எந்த நிர்வாகிகளும் எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் போன் செய்தாலும்,பாமர மக்கள் போன் செய்தாலும்,போனை எடுக்க மாட்டார்கள். என்ன? என்று கூட கேட்க மாட்டார்கள்.எப்படி பிஜேபி தமிழ்நாட்டில் வளர்ந்து விடும் ? மோடி செய்கிறார், அமித்ஷா செய்கிறார்.இதை சொல்லி எல்லாம் ஓட்டுக்களை தமிழ்நாட்டில் வாங்க முடியாது.

அவர்கள் செய்வதை சொல்லலாம். அதை சொல்லிவிட்டு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? அதுதான் இங்கே அரசியல்? மேலும், அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவருடைய சொத்து மதிப்பு அதிக அளவில் உயர்ந்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படும் செய்தி. இது பற்றி உண்மையான தகவல் ஆதாரத்தோடு எனக்கு கிடைக்கவில்லை என்றாலும், இது ஒரு புகைச்சல் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இது தவிர, பில்டப், பந்தா, அண்ணாமலை இடம் அது மிக ஓவராக இருந்தது. ஒரு மாநிலத் தலைவர் எளிமையாக அரசியல் கட்சியினரும்,பொது மக்களும் அணுக வேண்டும். அது மட்டுமல்ல,அவருடைய அணுகுமுறை கட்சிக்காரர்களை வேலை வாங்குவது,கட்சிக்காக அவர்கள் பணியாற்ற சொல்வதிலும்,, ஒரு நயம் இருக்க வேண்டும். அது அண்ணாமலை இடம் கிடையாது.இது கட்சி வட்டாரத்தில் பேசப்பட்ட உண்மை.

அது மட்டுமல்ல, பல பேருடைய ரகசியங்கள்,ரகசிய கேமராக்கள் வைத்து வெளியில் வந்தது. கட்சியில் மாநில பொறுப்பாளர்களாக இருந்தவர்களுடைய ரகசியங்களே வெளி வந்தது. அது மிகப்பெரிய தவறு.

ஒருவருடைய பர்சனல் விஷயங்கள் ஆயிரம் இருக்கும். அதில் தலையிடுவது நாகரீகமானது அல்ல. இதில் தான் பல பேருடைய வெறுப்பை அண்ணாமலை சம்பாதித்தார். அதற்கு காரணம் என்னவென்றால்? அவர் இருந்த காவல்துறை பொறுப்பு. மேலும் அவர், நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் மாநில தலைவராக நியமித்தும் கூட,அவருடைய காவல்துறையின் மைண்ட் செட் அவரை விட்டு அகல வில்லை.

இது மட்டுமல்ல, கட்சியில் தன்னை மீறி ஒருவரும் வந்துவிடக்கூடாது. தான் ஒருவரே பிஜேபி. என்று அதிகமாக வெளிப்படுத்திக் கொண்டார். இந்த விளம்பர அரசியல் தான் அவருடைய குறுகிய கால அரசியல். மேலும்,அண்ணாமலையை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து பிஜேபி மேலிடும் தூக்கியது எடப்பாடி சொல்லி தான் 100% நடந்தது என்று இல்லை. எடப்பாடி சொல்லி இருக்கலாம்.

அடுத்தது, தமிழக மாநில நிர்வாகிகள் அண்ணாமலை மீது ஒரு பெரிய பைலே கொடுத்திருப்பதாக தகவல். இதையெல்லாம் விட அமித்ஷா அண்ணாமலை மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் என்ன? என்பதை எல்லாவற்றையும் ஆய்வு செய்த பிறகு தான், அண்ணாமலையை மாநில பொறுப்பில் இருந்து தூக்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *