
ஸ்டாலின் குற்றவாளிகளுக்கு சரியான தீர்ப்பு என்று அறிக்கை விடுகிறார்.

இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி நான் சிபிஐக்கு இந்த வழக்கை உத்தரவிட்டதால் தான், சிபிஐ சரியான விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது என்கிறார்.

த.வெ.க தலைவர் விஜய் ஒரு பக்கம் பெண்களின் பாதுகாப்புக்கு கிடைத்த வெற்றி என்று அறிக்கை விடுகிறார். ஆக கூடி இவருடைய அரசியல் அறிக்கைகள் உத்தமர்கள் வேஷம் என்றாகி விட்டது. இதற்கு காரணம் இவர்களுடைய அரசியல் பேச்சுக்கள்.

தற்போது நாட்டில் எந்த அரசியல் கட்சிகளிலும் தகுதியானவர்கள் இல்லை. கட்சிக்கு, கட்சி சதவீத வித்தியாசம் இருக்கலாம். ஆனால், பெரும்பாலும்,ஊர் தாலி இருக்கிறவன், சட்டத்தை ஏமாற்றுகிறவன், ஊழல் செய்பவன், மோசடி பேர்வழிகள்,இவர்கள்தான் இன்று அரசியல் கட்சிகளின் புகலிடமாக இருக்கிறார்கள்.

இது அரசியல் தெரியாத மக்களிடம் இவர்கள் நல்லவர்கள் வேஷம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை நாளைக்கு இந்த நல்லவர்கள் வேஷம் எடுபட போகிறதோ தெரியவில்லை. கடவுள் இந்த மக்களுக்கு அல்லது இந்த பிரபஞ்சம் இந்த மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால், ஒருத்தன் கூட இந்த அரசியல் கட்சிகளில் இருக்க மாட்டான். கையெடுத்து கும்பிட்டு விட்டு இந்த பக்கமே தலை வைத்து படுக்க மாட்டான். இதுதான் உண்மை.

காரணம் இவர்களை கேள்வி கேட்டு நோண்ட ஆரம்பித்து விட்டால் ஒருத்தன் கூட மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அரசியலுக்கு வர மாட்டார்கள்.. அதனால்தான் அடாவடி பேர்வழி குடிகாரன் ஊர் தாலியா இருக்கிறவன் அவர்களாக பார்த்து இவர்கள் கட்சியில் பொறுப்பை கொடுத்து விட்டு நாட்டில் குற்ற சம்பவங்கள் நடக்கிறது மோசடிகள் நடக்கிறது என்றால் என்ன நடக்கும் அவனுக்கு என்ன தெரியுமா அதுதான் அவன் செய்து கொண்டிருப்பான். அவ மேல தப்பு இல்லை தவறு எல்லாம் அரசியல் கட்சி நடத்தக்கூடிய தலைவர்களும் மக்களும் தான் அதற்கு முக்கிய பொறுப்பு.

மேலும்,அதேபோல் இந்த உண்மையை சொல்லக்கூடிய பத்திரிகைகள் நாட்டில் இல்லை. இவர்களுடைய பொய்யை சொல்லிக்கொண்டு, அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு,அவர்களை நல்லவர்களாகவே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நாட்டில் குற்றங்கள் நடக்காமல், கற்பழிப்புகள் நடக்காமல், கொலைகள் நடக்காமல், ஊழல் நடக்காமல் என்ன நடக்கும்? அதுதான் நடக்கும்.

இன்று மக்களுக்கு அரசியல் கட்சிகார்களால் தான் பிரச்சனைகளே, ஒரு பக்கம் கட்ட பஞ்சாயத்து,, இன்னொரு பக்கம் வீடு கட்டும் போது கூட மாமுல் கேட்கிறார்கள். அவன் ஏதோ கஷ்டப்பட்டு கடன் வாங்கி வீடு கட்டுகிறான். அவனைக் கூட இந்த கவுன்சிலர்கள் யோவ் இங்க மணல் வைக்க கூடாது.இங்கே கல்லு வைக்க கூடாது. என்னமோ அந்த ஏரியாவே வேலைக்கு வாங்கி விட்டவர்கள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல இப்படிப்பட்ட நாய்களுக்கு எல்லாம் காசு வாங்கி ஓட்டு போடும் நாய்கள் திருந்தாத ஜென்மங்களாக இருக்கிற வரை, இந்த அடியாள் கூட்டம் இப்படி தான் இருக்கும். அது மட்டுமா?

இவர்களை இந்த பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள், பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதாவது இவனுடைய கட்சி வளர்ச்சிக்கு ஒரு பத்திரிக்கை, தொலைக்காட்சி ஆரம்பித்துவிட்டு, அதுவும் பத்திரிக்கை என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

பத்திரிக்கை என்றால், ஒன்றும் தெரியாத மக்களை ஏமாற்றலாம்.ஆனால், எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களையும் பத்திரிகைகளையும் பத்திரிக்கை துறையையும் அல்லவா?ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நான் நிருபராக இருக்கும் போது, இப்போதும் கந்துவட்டி வீட்டுக்கு கொண்டு தினகரன் பத்திரிகையில் ஒருவன், இந்த கட்சிக்காரர்களை பார்த்து, அந்த கட்சி செய்தியை போட்டுவிட்டு,நான் நாலு காலம் செய்தி, எட்டு காலம் செய்தி,இதையெல்லாம் பெருமையாக பீத்திக் கொள்வது தான் நிருபர்கள் வேலையா? இது தவிர, அரசியல் கட்சிகள் சார்பாக ஏஜென்ட்களை போல்

சோசியல் மீடியாக்களில் ஆளாளுக்கு ஒரு மூத்த பத்திரிகையாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள்,, என்று பேசிக்கொண்டு இவர்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பத்திரிகை என்று சொல்வதற்கு தகுதி இல்லை.அதைவிட கரை வேஷ்டி கட்டிக்கொண்டு,பேசிக்கொண்டு இருக்கலாம் தவறில்லை.

இதை ஏன் சொல்ல வேண்டிய அவசியம் என்றால் அரசியல் கட்சி வேறு, பத்திரிக்கை வேறு, கட்சிக்காரனாகவும் இருந்து கொண்டு நான் பத்திரிக்கையாகவும் இருக்கிறேன் என்று சொன்னால், இதை ஏற்றுக் கொள்பவர்கள், பத்திரிக்கை என்றால் என்ன என்று தெரியாத முட்டாள்கள், பத்திரிகையின் அடையாள அட்டை மட்டுமே பத்திரிகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. தவிர, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது,

கட்சிக்காரனாக இருக்கட்டும், எவனாக இருக்கட்டும், தப்பு செய்தால், தூக்கி வை,அது ஜெயலலிதா ஒருத்தருக்கு தான் அந்த தகுதி. மந்திரி என்று கூட பார்க்க மாட்டார்கள். அந்த விஷயத்தில் ஜெயலலிதாவை ரொம்பவே பாராட்ட வேண்டும். அந்த அளவிற்கு எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் இல்லை. தற்போது, தமிழ்நாட்டில் இல்லை. ஜெயலலிதா நம்பி கெட்டார்கள். விதியும் சதி செய்தது. அரசியல் துரோகமானது. அதனால், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பாலியல் குற்றவாளிகளுக்கு,ஒன்பது பேருக்கும் நீதி மன்ற தீர்ப்பால் தண்டனை கிடைத்து விட்டது என்று அரசியல் ஆதாயம் தேடுவதை இனியாவது அரசியல் கட்சிகள் அதை தவிர்ப்பார்களா?இது அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி? மேலும்,

காலையில் தான் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். குற்ற சம்பவங்கள்,ஊழல் சம்பவங்கள்,அனைத்தும் அரசியல் கட்சிகள் பின்புறத்தில் தான் நடக்கிறது. அதனால் மத்திய அரசு எத்தனையோ சட்டங்கள் மாற்றிக் கொண்டு வருவது போல அரசியல் கட்சிகளுக்கு என்று தனி சட்டத்தை இக்காலத்திற்கு ஏற்ப கொண்டு வர வேண்டும்.