மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பாக்காதது -அரசியல் ஆய்வாளர்கள் .

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 05, 2024 • Makkal Adhikaram

மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள், கருத்துக்கணிப்புகள், ஜோதிட ஆய்வாளர்கள், அனைத்தும் மீறி இந்த கூட்டணி ஆட்சி அமைப்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. பிஜேபி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தது .இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்டிஏ கூட்டணிக்கும் ,இந்தியா கூட்டணிக்கும் போட்டிகள் வலுவாக இல்லை என்று தான் தேர்தல் களத்தில் பேசப்பட்ட உண்மை.

 ஆனால், இதற்கு பின்னால் என்ன நடந்தது  ? மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்பதில் அமெரிக்கா, சைனா போன்ற நாடுகள் திட்டமிட்டு சதி வேலை பார்த்துள்ளது என்பது தற்போதைய தகவல். அது மட்டும் அல்ல இந்தியாவை ஒரு வலுவான நாடாக மாற்றும் ஆற்றல்மிக்க தலைவராக பிரதமர் மோடி இருந்து வந்துள்ளார். இது இந்த நாடுகளுக்கு எல்லாம் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை இந்தியா அதன் வளர்ச்சியில் கொடுத்து வந்துள்ளது. எப்போதும் பிற நாடுகளை சார்ந்திருந்த இந்தியா, இப்போது அதனுடைய வளர்ச்சி கண்டு உலக நாடுகள் பேசப்பட்டது, மோடியின் தலைமையில் தான். 

அதனால், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா வல்லரசாகும் என்பதை தடுக்க காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணிக்கும் மறைமுக வேலைகளை பார்த்துள்ளது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது .சைனாவில் ராகுல் காந்தி  குடும்பம் சுமார் 1500 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. அதேபோல் பா சிதம்பரம் 1500 கோடிக்கு மேல் முதலீடு செய்திருக்கிறார் என்ற தகவல். இப்படி இவர்களுடைய பணம் எங்கெங்கெல்லாம் முதலீடு செய்யப்படுகிறது? அந்த நாடுகள் இவர்களுக்கு ஆதரவு தருகிறது. இப்போது புரிகிறதா? இந்திய மக்களுக்கு !

இவர்கள் கொள்ளை அடித்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் போது, அந்த நாட்டின் தலையீடு இந்தியாவுக்குள் வருகிறது .அதே நிலைமைதான் திமுக லண்டனில் மிகப்பெரிய முதலீடு செய்துள்ளது என்ற தகவல் வெளிவந்துள்ளது. இவை அனைத்தும் இந்திய தேசத்திற்கு இறையாண்மைக்கு எதிரான ஒன்று. ஒரு நாட்டின் தேர்தலுக்குள், வேறு ஒரு நாட்டின் தலையீடு இருக்கிறது என்றால், அப்போது இந்த நாட்டில் வாழுகின்ற மக்களின் நிலைமை என்ன என்பதை மக்கள் இன்னும் சிந்திக்கவில்லை.

இந்த பணத்திற்காக தான் அடிமையாக இவர்கள் இருக்கிறார்களே ஒழிய, நாட்டைப் பற்றி எப்போது சிந்திக்கிறார்களோ, அப்போதுதான் இந்த அந்நிய சக்திகளை ஒழிக்க முடியும் .எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு வாங்கி கொடுத்த சுதந்திரம், இன்று ஊழல்வாதிகளால் அடிமைப்பட்டு மக்கள் கிடக்கிறார்கள். நாட்டு மக்களின் நிலைமை போதைக்கும், பணத்திற்கும், கூலிக்கும் மாரடிக்கும் கூட்டமாக இந்த அம்பேத்கர் செய்த ஒரு கேவலமான வேலை தான் இந்த ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும். பணத்திற்கு வாக்களிக்கும் மக்கள் செய்கின்ற தவறான வேலை.

அடுத்தது அன்றைக்கு இருந்த மக்கள் அவர் எழுதிய சட்டம் செல்லும். இன்றைக்கு இருக்கும் மக்களுக்கு இந்த சட்டம் செல்லாது. இவர்களுடைய மனநிலை வேறு, அந்த மக்களின் மனநிலை வேறு, அவர்கள் மனசாட்சியுடன் வாழ்ந்தார்கள். இவர்கள் மனசாட்சி என்றால் என்ன என்று கேட்கிறார்கள்? மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்கள். 

இப்போது கூட பாரதிய ஜனதா கட்சியில் அந்த வெற்றியை விழாவை கொண்டாடுகிறார்கள். ஆட்டம் போடுகிறார்கள் .கூத்தாடுகிறார்கள். டான்ஸ் ஆடுகிறார்கள். இவை எல்லாம் எதற்கு நீங்கள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய அரசியல் கட்சிக்கு வந்தவர்கள் .ஆனால், கட்சி ஆட்சி பிடித்து விட்டால் ஏன் இவ்வளவு ஆட்டம் போடுகிறீர்கள் ?அதை திமுக, அதிமுக இதே நிலைமைதான். உங்களுக்கு வாக்களிக்கும் மக்கள் பைத்தியக்காரர்களா? எதற்காக வாக்களிக்கிறார்கள்?

தேர்தல் எதற்கு என்று கூட தெரியாத பேசிக் கொண்டிருக்கும் கரை வேஷ்டி முட்டாள்கள் .

 அவர்களுடைய உரிமை, அவர்களுடைய வாழ்வாதாரம், உயர்த்துகின்ற ஒரு பொறுப்பை மக்கள் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அதை வெற்றி பெற்றவுடன் அதை மறந்து விடுகிறார்கள். இவர்கள் வீட்டுக்கு எத்தனை கோடி சம்பாதிக்கலாம்? என்றுதான் தினம், தினம் இவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. அதனால் மக்கள் சிந்திக்க வேண்டும். சிந்திக்கவில்லை என்றால் போதைக்கு அடிமையாகி, வருங்கால சந்ததிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதை மாற்றுக் கருத்து இல்லை .

இந்த நாட்டை ஆண்ட ஆங்கிலேயன் பட்டதாரிகளுக்கும், படித்தவர்களுக்கும் வாக்குரிமை கொடுத்திருந்தான் .இப்போது பணத்திற்கு, மதுவுக்கு, பிரியாணிக்கு, வாக்களிப்பவர்களை அம்பேத்கர் கொடுத்த சட்டம் தேவையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *