
வன்னியர் சங்கமாக இருந்து, பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது,வன்னியர் அனைவருக்கும் தெரியும்.
இப்போது அது அன்புமணி மற்றும் ராமதாஸின் கட்சியாக மாறிய பிறகு இருவருக்குள் அப்பன், பிள்ளை தகராறு வந்து,நீ தலைவரா? நான் தலைவரா?என்ற போட்டியில் இருக்கிறது என்றால், தகுதியான வன்னியன் ஒருவன் கூட இதை ஏற்றுக் கொள்ள மாட்டான்.
மேலும், 40 ஆண்டு காலம் இந்த கட்சி வன்னிய சமுதாயத்திற்கு என்ன செய்தது? இட ஒதுக்கீடு என்ற ஒரு போராட்டத்தை வைத்துக்கொண்டு,வாய்ப்பு இருக்கும்போது எல்லாம் அதை இந்த சமுதாயத்திற்கு வாங்கிக் கொடுக்காமலே, ஏமாற்றிவிட்டு, மீண்டும் அதே கதையை பாட்டு பாடிக் கொண்டிருந்தால்,அரசியல் தெரியாதவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
வன்னியர் சமுதாயத்தில் அறிவாளிகளும்,இருக்கிறார்கள்.படித்தவர்கள் இருக்கிறார்கள்,பண்பாளர்கள் இருக்கிறார்கள்,ஒழுக்கமானவர்கள் இருக்கிறார்கள்.நேர்மையானவர்கள் இருக்கிறார்கள்,வெத்து வெட்டுகள் இருக்கிறார்கள்.இது எல்லாம் கலந்த ஒரு கலவைதான் வன்னியர் சமுதாயம்.
அதனால், வன்னியர் சமுதாயம் தொடர்ந்து ஏமாறும் என்று இவர்கள் கனவு கண்டால் ஏமாந்து போவார்கள். உங்களுடைய அறிக்கை,உங்களுடைய அரசியல், இதையெல்லாம் படித்த சமுதாயம் புரிந்து கொண்டது.
ஏன்? பாட்டாளி மக்கள் கட்சியிலிருக்கும்,பொறுப்பாளர்கள் இந்த சமுதாயத்திற்கு செய்த நன்மை என்ன? என்பதை அந்தந்த ஊரிலும்,நகரிலும் இருக்கக்கூடிய வன்னியர் சமுதாயம் சொல்லும்.

மேலும், இந்த சமுதாயத்தை வைத்துக்கொண்டு,பஞ்சாயத்து தலைவராகவும், கவுன்சிலராகவும்,சேர்மன் ஆகவும் வருவதற்காக தான் இந்த கட்சியைப் பிடித்துக் கொண்டு, தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், சமுதாயத்திற்கு அவர்களால் என்ன நன்மை?என்பது மட்டும் சமுதாயமே சொல்லும். அதனால் வன்னியர் சமுதாயத்தை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று கனவு கண்டு,கனவோடவே போய்விட்டார்கள்.

அதற்கு உதாரணம்,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட தர்மபுரியில் அன்புமணியின் மனைவி நின்று கூட ஜெயிக்க முடியவில்லை.வன்னியர் சமுதாயம் வாக்களிக்கவில்லை. அப்படி என்றால்,ஊருக்கு 50 பேர் அல்லது 100 பேர்,இந்த சமுதாயத்தை ஏமாற்றலாம் என்று இந்த கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால்,சமுதாயம் இவர்களிடம் ஏமாந்தால், சமுதாயத்தை குழி தோண்டி புதைத்து விடுவார்கள் என்கின்றனர் சமுதாய பற்றாளர்கள்.மேலும்,சமுதாயம் உழைத்து முன்னேறுவது தான் குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவிர,

சமுதாயமே! சமுதாயத்தை ஏமாற்றி வளர்ந்துக் கொள்ளலாம் என்பது சமுதாயத்தை ஏமாற்றும் வேலை.மேலும்,சமுதாயத்தை வளர்த்து,வளர்ந்தால் கூட பரவாயில்லை ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால், சமுதாயத்தை அழித்து தான் வளரலாம் என்று நினைப்பதை ஒரு காலம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த கட்சியில் உண்மையாக உழைத்தவர்கள் சிதம்பரத்தில் நடுத்தெருவில் நின்றவர்கள் கதை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.
அதனால் ,இவர்களுடைய குடும்ப சண்டைக்கு பின்னாலும்,அந்த கட்சியில் இருந்து கொண்டு, கொடி பிடித்து இவர்கள் அய்யா வாழ்க என்று கத்தி,இந்த சமுதாயத்திற்கு என்ன நன்மை செய்யப் போகிறார்கள்?என்பதை சமுதாயமே சிந்தித்து முடிவு செய்து கொள்ளுங்கள்.