அடித்தட்டு படித்த மாணவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும், மத்திய – மாநில அரசின் வேலை வாய்ப்பு எட்டா கனியானது ஏன்? அரசு பணியாளர்கள் வேலையை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தது ஏன்?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் அரசு பணிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் விடுவது படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளை சிதைக்கும் வேலையா?

தொழிற்சங்கங்கள் இப்படிப்பட்ட சட்டத்தை எதிர்க்காமல் எப்படி ஆதரவு தெரிவித்தது? இது தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு எதிரான சட்டங்கள் அல்லவா?மத்திய அரசு பணிகளிலும்,இதுபோன்ற நிலையை அனுமதிக்க கூடாது.

தமிழ்நாட்டில் அரசு பணிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் விடுவது ஏன்?
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சி முதல் அரசு பணிகளை தனியார் கம்பெனிகளை வைத்து ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை வாங்குவது நாட்டில் அரசு வேலைகளுக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது மிகப் பெரிய மோசடி வேலை.

மேலும்,இதையெல்லாம் அரசாங்கம் உடனடியாக இந்த ஒப்பந்த தொழிலாளர்களின் பணிகளை அரசு பணியாளர்களாக மாற்ற வேண்டும். மேலும், யாரோ ஒரு தனி நபர் மக்களின் வரிப்பணத்தை சாப்பிட்டுக்கொண்டு, அவர் பார்த்து பத்தாயிரம் 15,000,சம்பளம் கொடுத்து அரசு பணியினை வேலை வாங்கும் படித்த இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்பு கனவை சிதைக்கும் திட்டம். மேலும் இந்த சட்டத்தை ஆட்சியாளர்கள் வளைத்திருக்கிறார்கள்.

அதாவது, எம்ஜிஆர் காலத்தில் வரை இந்த சட்டம் போடப்படவில்லை. அதன் பிறகு போடப்பட்ட இந்த சட்டம் காண்ட்ராக்டில் ஊழல் செய்வதற்கும், அரசு பணியாளர்களுக்கு பதிலாக தனியார் துறை நிறுவனங்களை கொண்டு வந்து உள்ளே புகுத்து ஆட்சியாளர்கள் கமிஷன் சம்பாதிப்பதற்கும், பெரும் பணத்தை கொள்ளையடிப்பதற்கும்,மாற்றப்பட்ட இந்த சட்டம் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

இந்த சட்டத்தால் பல லட்சக்கணக்கான பணியாளர்கள் அரசு வேலைக்கு செல்ல முடியாமல், இவர்கள் கொடுக்கும் கூலியை வைத்துக்கொண்டு எப்படி குடும்பம் நடத்துவார்கள்? அரசு அதைப்பற்றி சிந்திக்கவில்லை. எந்த திட்டத்தில் கொள்ளையடிக்கலாம் என்பது மட்டும் சிந்திக்கிறதா? படித்த இளைஞர்களுக்கு டிஎன்பிசி மட்டுமே அரசு பணியாளர் தேர்வை நிர்ணயிக்க வேண்டுமா?

அந்த காலத்தில் என். எம். ஆர் ஆக இருந்து இன்று பதவியை பெற்றவர்கள் எவ்வளவு பேர்? அதிகாரிகளாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்? பல துறைகளில் இன்று அப்படி உள்ளே வந்தவர்கள். தங்களுடைய படிப்பும் அனுபவமும்,அவர்களை உயர் பதவியில் இன்று அமர்த்தி இருக்கிறது. அதாவது அடிமட்டத்திலிருந்து வருகின்ற பணியாளர்கள் அரசுத் துறையில் உயர் பதவியை அடைந்தவர்கள் இருக்கிறார்கள்.

இன்று அந்த என்.எம்.ஆர் ( NMR )என்ற அரசு தினக்கூலி பணியாளர்கள் நியமனம் கூட நியமிக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் எந்த அடிப்படையில் தீர்ப்பு கொடுக்கிறது?என்பது தெரியவில்லை. இப்படிப்பட்ட தீர்ப்பு அடித்தட்டு மக்களுக்கும்,நடுத்தர மக்களுக்கும் எதிரானது. அவர்களுடைய அரசு வேலை கனவுக்கு எதிரான இந்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று சமூக,நலன் ஆர்வலர்கள்,சமூக நலன் அமைப்புகள், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.

அரசு பணிகளை தனியார் நிறுவனங்கள் எதற்காக இந்தப் பணிகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது?
நகராட்சி,பேரூராட்சி, சிப்காட், சிலம் போர்டு, நெடுஞ்சாலைத்துறை போன்ற பல்வேறு துறைகளில் அரசு பணிகளை எதற்காக தனியார் இடம் வேலை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது?

இந்த ஒப்பந்தம் போடப்பட்ட தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் கடந்த அதிமுக ஆட்சியில் மந்திரிகளின் பினாமி என்கிறார்கள். இப்படி இவர்கள் பினாமி பெயரில் அரசு பணிகளை குத்தகை எடுக்க யார்? இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது? இதைப் பற்றி தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சி கூட வாய் திறக்காதது ஏன்? இவர்கள் மக்களுக்காக அரசியல் கட்சி நடத்துகிறார்களா? அல்லது இவர்கள் வளமாக்கிக் கொள்ள அரசியல் கட்சியில் நடத்துகிறார்களா? மேலும்,

இப்போது திமுக ஆட்சியில்,அதேபோல் இந்த திட்டத்தை பயன்படுத்தி பினாமி பெயரில் துப்புரவு பணியாளர்கள் வரை இந்த பினாமி தேவையா? இதைதான் நீதிமன்றம் அங்கீகரிக்கிறதா? நாட்டில் வேலையில்லா இளைஞர்களின் கனவுகள் ஓட்டு போட்ட மக்களாலே இவர்கள் மூலம் சிதைக்கப்படும் வேலை தான் இந்த தனியார் நிறுவனங்கள் அரசு பணியில் வேலை வாங்குவது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று படித்த இளைஞர்கள் கோரிக்கை.அது மட்டுமல்ல, இந்த சட்டம் உடனடியாக மத்திய மாநில அரசுகள் அகற்றவில்லை என்றால், இதற்கு சமூக நலன் அமைப்புகள், தொழிற்சங்கங்கள்,சமூக ஆர்வலர்கள்,பொதுநல வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *