அண்ணா சாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தேசிய அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற உள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய அரசு செய்திகள் ரிசன்ட் போஸ்ட்

சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில், 2023 என்ற தேசிய அஞ்சல்தலை கண்காட்சி நடைபெறவுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக சிறிய அளவிலான அஞ்சல் தலை கண்காட்சி அஞ்சல்தலை அருங்காட்சி பணியகத்தில் 26.01.2023 முதல் 28.01.2023 வரை நடைபெறவுள்ளது. மேலும் அங்கு,

புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளிட்டோரின், புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறைகளும், இந்திய சர்வதேச உறவுகள் தொடர்பான அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறைகளும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. மேலும்,

பல்வேறு அஞ்சல் தலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட துணை பொருட்களும், இந்த கண்காட்சியில் வெளியிடப்பட உள்ளன. மேலும், பள்ளிக் குழந்தைகளுக்கான அஞ்சல்தலை சேகரிப்பு தொடர்பான போட்டிகளும், நடத்தப்பட உள்ளன. தபால்தலை சேகரிப்பாளர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறைகளை வாங்கிப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *