
அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ஊழல் விவகாரம் உச்சநீதிமன்றம் ஒரு பக்கம், தடை விதித்துள்ளது. மற்றொரு பக்கம் மோடிக்கு யாரையெல்லாம் சிபாரிசு செய்து அதை நீர்த்துப் போக திமுகவின் அரசியல், சாணக்கியத்தனம் என்று சொல்வதா? அல்லது சாஷ்டாங்கமாக காலில் விழுந்து காப்பாற்ற வழி தேடிக் கொண்டதா? அல்லது அதானி போன்ற ஆட்கள் மூலம் மோடியை சமாதானம் செய்து விட்டார்களா?இப்படியெல்லாம் பொதுமக்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும் பேச்சு.

இருப்பினும்,எது எப்படியோ, மத்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் கோடி ஊழல் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்வது அல்லது நடவடிக்கை எடுக்காமல் நீர்த்துப் போக செய்வது, வாக்களித்த மக்களுக்கு மத்திய, மாநில அரசாங்கம் செய்கின்ற மிகப் பெரிய துரோகம்.

மேலும்,அமலாக்கத் துறையின் இணை இயக்குனரான பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் இருவரும்
வருமான வரித்துறைக்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தகவல்.

தவிர, டாஸ்மாக் ஊழல் விவகாரம்,கனிம வளத்துறை ஊழல் விவகாரம் நேர்மையான முறையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து நாட்டு மக்களுக்கு குற்றவாளிகளை அடையாளம் காண்பிப்பார்கள் என்ற நம்பிக்கை வீணாகிவிடுமா?
மேலும், நாட்டில் ஊழலுக்கு எதிரான ஒரு கட்சியாக பிஜேபி இருக்கிறது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் அது இழக்குமா? இப்படி பல கேள்விகளுக்கு பிஜேபியும்,திமுகவும் பதில் சொல்ல வேண்டிய காலகட்டத்தில் தான் இருக்கிறது இப் பிரச்சனை.

தவிர,மக்கள் இது பற்றி பெரிதாக எடுத்துக் கொள்வார்களா? அல்லது இதை தூக்கி போட்டு விடுவார்களா? இதை தூக்கி போட்டு விட்டாலும்,எதிர்கட்சிகள் தேர்தல் நேரத்தில் இதை வைத்து நிச்சயம் பாஜகவையும், திமுகவையும் அரசியல் செய்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.