இட ஒதுக்கீட்டு பிரச்சனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்தப் போகிறதா ?

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் ரிசன்ட் போஸ்ட்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பட்டியலினத்தில் மதம் மாறிய கிறிஸ்துவ, முஸ்லிம்களுக்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது இந்து பட்டியலின சமூகத்திற்கு செய்கின்ற மறைமுக துரோகம். அந்த துரோகத்தை எதிர்த்து போராட இந்து பட்டியல் இன சமுதாயம் போராட ஆரம்பித்து விட்டது.

தவிர, இது திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது. ஒரு பக்கம் வன்னியர் சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டிய 10.5% கொடுக்காமல் இருட்டடிப்பு செய்யும் வேலை. மறுபக்கம், இந்து பட்டியலின சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் கை வைக்கும் வேலை தான், இந்த மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், சட்டப்பேரவையில் சலுகை வழங்க மத்திய அரசு வலியுறுத்தி நிறைவேற்றிய தீர்மானம், இதற்கு இந்து முன்னணி அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும்,

இந்து பட்டியலின சமுதாயத்திற்கு செய்யும் துரோகம் என திமுக அரசை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியத்தின் கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டபேரவையில் கிறித்துவர்களாக மதம் மாறிய பட்டியலினத்தவர்களுக்கும், இட ஒதுக்கீடு சலுகை வழங்க சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என அறிவித்திருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.மேலும்,

அண்ணல் அம்பேத்கர் இட ஒதுக்கீடு குறித்து, தெளிவான கண்ணோட்டத்தை தந்துள்ளார். சமூக நீதிக்கான சலுகையை மதமாற தூண்டும் சதிகளுக்கு துணைபோக தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உயர்ந்த சிந்தனைக்கு செய்யும் துரோகம். தவிர,திமுக அரசு பதவியேற்றதில் இருந்து அப்பட்டமாக கிறித்துவ, முஸ்லிம்களின் ஊதுகுழலாக செயல்படுகிறது.

இந்துக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது.கிறித்துவ கல்வி நிறுவனங்கள் மக்களின் வரி பணத்தில் நடத்தப்படுகிறது. ஆனாலும், மாநில அரசின் இட ஒதுக்கீடுகள் அமல்படுத்துவது இல்லையே ஏன்?  கிறித்துவ கல்வி நிறுவனங்கள் அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த மசோதா கொண்டுவருவாரா தமிழக முதல்வர்?

சமூகத்தில் தாங்கள் முன்னோர்கள் பட்ட அவமானங்கள், கஷ்டங்களை ஏற்று இந்துவாக தன்மானத்தோடு வாழ்ந்த பட்டியலின முன்னோர்களின் தியாகத்திற்கு தரும் சலுகை பட்டியலினம் இழந்து விடக்கூடாது. தமிழக அரசின் தவறான போக்கை கண்டித்து போராட பட்டியிலின சமூக மக்களும் அமைப்புக்களும் முன்வர இந்து முன்னணி அறைகூவல் விடுக்கிறது.

சட்டரீதியாகவும், பொதுமக்களின் கருத்துக்களை திரட்டி, ஜனநாயக ரீதியில் போராடியும், இந்து முன்னணி மதம்மாறிய கிறித்துர்களுக்கு, தமிழக அரசு கொண்டு வரும் மசோதாவை முறியடிக்க தயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதுக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *