
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் வெற்றி விழாவிற்கு சென்ற இளைஞர்கள் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கட்டுக்கடங்காத கூட்டம் சேரும்போதே அறிவுள்ளவர்கள் வெளியேறி விடுவார்கள். அவர்களுக்கு தெரியும் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப்போகிறது. ஆனால், கல்வியறிவு வேற, இறைஞானம் வேற, இந்த இறை ஞானம் உள்ள குழந்தைகள் நிச்சயம் அந்த இடத்திலிருந்து வெளியேறி இருப்பார்கள்.

அவர்கள் இந்த கேளிக்கை, போலியான மகிழ்ச்சி, இதில் எல்லாம் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அவர்களுடைய சிந்தனை எல்லாம் வேறு. இவர்களுடைய சிந்தனை வேறு. இவர்களுடைய பெற்றோர்கள், உறவினர்கள் உயிரிழப்புகளை தாங்க முடியாமல் வேதனை தெரிவிக்கும்போது, அது எல்லோருக்குமே ஒரு மன கஷ்டம் தான். மேலும்,
இந்தக் கூட்டத்தை கூட்டுவதற்கு அரசாங்கம் அதற்கான திட்டமிட்டு செயல்படுத்தி இருக்க வேண்டும். திடீரென்று கூட்ட நெரிசலை அரசாங்கம் கூட சமாளிக்க முடியாது. எந்த காவல்துறையாலும், அதை கட்டுப்படுத்த முடியாது. அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, எவ்வளவு பேர் வருவார்கள் ? எத்தனை போலீஸ் அதற்கு பந்தோ பஸ்த் போடப்பட வேண்டும்?வருகின்ற வழி? எப்படி போகின்ற வழி? அங்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால்,அதற்கான வழிமுறைகள் என்ன? இப்படி பல திட்டம் வகுத்து தான் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி இருக்க வேண்டும்.

இது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் தவறு. அரசியல் என்பது விளையாட்டை வைத்து, இளைஞர்களிடம் அரசியல் செய்வது,அவர்களுக்கு விளையாட்டினால் மிகப்பெரிய சந்தோஷம் என்பதை உணர்ந்து அதற்குள் அரசியல் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதுதான் இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. இதையெல்லாம் ஏழை,நடுத்தர குடும்பங்கள் 75% பார்ப்பதில்லை ஏனென்றால் அந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மைதானத்திற்குள் நுழைவதற்கே ஆயிரக்கணக்கில் டிக்கெட் வாங்க வேண்டி இருக்கிறது. ஓரளவுக்கு வசதி வாய்ப்புகள் இருக்கிறவர்கள் தான் அங்கே இதையெல்லாம் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் இன்றும் வாழ்க்கையின் போராட்டத்திலிருந்து,வறுமையின் போராட்டத்திலிருந்து வாழ்ந்து,கொண்டிருக்கும் மக்களுக்கு இது எப்படி சந்தோஷத்தை தரும்? மேலும், இது சம்பந்தமாக கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாவட்ட ஆட்சியர், கிரிக்கெட் நிர்வாகிகள், காவல் ஆணையர் உள்ளிட்ட பலரை விளக்கம் கேட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.