உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று இயற்கைக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாக்க மரங்களை நடுவரா? மலைகளை பாதுகாப்பாரா? இயற்கையை பாதுகாக்க தவறிய தமிழக அரசு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

அரசியல் உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த இயற்கையை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி?

இன்று ஜூன், ஜூலையில் கூட கொளுத்தும் வெயில்,மக்கள் வெளியில் சென்று வேலை செய்வதற்கு கூட பயப்படும் அளவில் இந்த வெயில் இருக்கிறது. இது சமீபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.இது பற்றி எந்த ஆட்சியாளர்களும் கண்டு கொள்வதில்லை.

மத்தியிலும் சரி,மாநிலத்திலும் சரி,இதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? காடுகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்?மரக்கன்றுகளை நடுவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?சூரிய வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இது சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை என்பதை இயற்கை நமக்கு உணர்த்தி இருக்கிறது.இதிலிருந்து பல்வேறு நோய்கள் உருவாக காரணமாக இருக்கிறது. வெளியில் சென்று வந்தால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மக்களுக்கு இந்த வெயில் வாழ்க்கையின் போராட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும் உழைக்கும் மக்களுக்கு இந்த கொளுத்தும் வெயில் அவர்களை வாட்டி ஒவ்வொரு நாளும் வதைத்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூட இதுவரை சுற்றுச்சூழல் வல்லுநர்களை வைத்து எந்த ஆய்வுக் கூட்டமும் நடத்தியது இல்லை.அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதுதான் மிகப்பெரிய அதிர்ச்சி தரும் தகவல்.மேலும்,

இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், நீர் அவசியம். நீரை பாதுகாக்காமல், நீர்நிலைகளை பாதுகாக்காமல், இயற்கையை எப்படி பாதுகாக்க முடியுமா? இது தவிர,நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்லை. நீரையும், நீர் நிலைகளையும், பாதுகாக்காமல் எப்படி இயற்கையை பாதுகாக்க முடியும்? மேலும்,

ஏரிகளில் மண் எடுத்து வியாபாரம் செய்ய தமிழக அரசு முனைப்பு காட்டுகிறதே ஒழிய, அதே ஏரிகளில் மரக்கன்றுகளை நட்டு, இயற்கையை வளர்த்து அதன் மூலம் மக்களுக்கு இந்த வெயிலின் தாக்கத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை முதல்வர் ஸ்டாலின் செய்வாரா? தவிர,

இப்போது கூட கிராமங்கள் தோறும் லட்சக்கணக்கான மரங்களை நட்டு அதை பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும். இயற்கையை நாம் அழித்தால், இயற்கை நம்மை அழித்துவிடும் இதை மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து எழுதி வரும் செய்தி கட்டுரை. மேலும்,

அரசாங்கம் எதை செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? எது அவசியமானது? எது மக்களை பாதுகாக்க கூடியது? என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அதையெல்லாம் செயல்படுத்தாமல் இந்த அரசாங்கம் இயற்கையை பாதுகாக்க தவறிவிட்டது.தவிர,

மலைகளை பாதுகாக்கவில்லை.காடுகளை பாதுகாக்கவில்லை. காடுகளை உருவாக்கவில்லை. எப்படி நம்மை இயற்கை பாதுகாக்கும்? ஓட்டுக்காக அரசியல் நடத்தினால், நாட்டு மக்களுக்காக எது நன்மை? என்று சிந்திக்க தெரியாது. மக்களுக்காக சிந்திக்கும் அரசியல் நடத்துபவர்கள்,ஓட்டுக்காக அரசியல் நடத்த தெரியாது.

அதனால்,ஸ்டாலின் இயற்கைக்கு வாழ்த்து சொல்ல உங்களுக்கு தகுதி உள்ளதா?என்பது தான் இயற்கையின் கேள்வி? – சமூக ஆர்வலர்களின் கேள்வியும் அதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *