எந்த ஒரு நாட்டிற்கும் மக்கள் நிம்மதியாக வாழ ! தீவிரவாதம், வன்முறை அதற்கு தீர்வாகாது என்பது ஹமாஸ்- இஸ்ரேல் போர்.

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் உச்சகட்ட ஆதிகத்தால் அங்கிருந்து பல நாடுகளுக்கு, இந்த ஹமாஸ் முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் தலைமை தாங்கியது. அதனுடைய எதிரொலி தான், சமீபத்தில், கேரளாவில் உள்ள ஒரு சர்ச்சில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு ,வெடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது என்று ரகசிய தகவல் வெளியாகி உள்ளது.

 மேலும், ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் போர் என்று வந்துவிட்டால், இரு நாடுகளுக்குள்ளும் மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அங்கு உயிர் சேதம், பொருட்சேதம் ,மக்கள் உயிருக்கு பயம், மன உளைச்சல், வாழ்க்கையே போராட்டத்தின் நிலைக்கு கொண்டு செல்கிறது. அங்கே நேர்மையாக நிம்மதியாக வாழ்ந்த மக்கள் கூட பாதிக்கப்படுகிறார்கள். அதனால், இப்படிப்பட்ட தீவிரவாத செயல்கள் மக்களின் அழிவு பாதைக்கு வழி வகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மேலும்,இதனால், எந்த ஒரு முஸ்லிம் நாடுகளும் நிம்மதியாக வாழ முடியாது. எந்த ஒரு கிறிஸ்துவ தேசமும் நிம்மதியாக வாழ முடியாது.  இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போரால் ,எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள், மக்களின் துன்பங்கள், துயரங்கள் அங்கே வாழ்க்கையாகி விட்டது. அதனால், அந்த இடத்தில் போரை நிறுத்த அனைத்து நாடுகளும் அறிவிக்க வேண்டுமே ஒழிய ,தீவிரவாத கும்பல்கள் சொல்லும் பேச்சைக் கேட்டு முஸ்லிம் நாடுகள் ஒருபக்கமும், கிருத்துவ நாடுகள் ஒரு பக்கமும் நின்று போரிட்டால் இரண்டு பக்கமும் அழிவு தான் மிஞ்சும்.

அதனால் போரை நிறுத்தி அந் நாட்டை  தீவிரவாத இயக்கங்களிடம் இருந்து காப்பாற்றுவது தான் முக்கியமானது. மேலும்; இரு நாடுகளிலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் , அதைப் புரிந்து உலக நாடுகள் செயல்படுவது அனைத்து நாடுகளுக்கும் நல்லது.தவிர,அவர்களுக்காக உலக நாடுகள் உதவுங்கள் என்று ,இந்த முஸ்லிம் ஹமாஸ் தீவிரவாத அமைப்புகள் கோரிக்கை வைக்கின்றன.

 அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் அட்வைஸ் .

இது மூன்றாம் உலகப் போர் ஏற்படுத்த திட்டம் தீட்டுகிறார்களா? சண்டையில் தான் பலசாலி ,என்னைவிட மிஞ்சுபவர்கள் யாரும் இல்லை என்று காட்டிக் கொள்வதால், அந்த நாடு பெரிய நாடு ,சிறந்தது என்று பேசிக் கொள்வதில் அர்த்தம் இல்லை. ஒருவன் மற்றொருவனை அழித்து, தான் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்வதில் எந்த பெருமையும் இல்லை. ஒருவன் பிறரை வாழவைத்து ,தன்னை பெரிய ஆள் என்று காட்டிக் கொள்வதில் தான் பெருமை இருக்கிறது.

அது போலத்தான் உலக நாடுகள் இருக்க வேண்டுமே ஒழிய, தன்னிடம் அணுகுண்டு இருக்கிறது, வலிமையான ஆயுதங்கள் இருக்கிறது, நான் தான் இந்த உலக நாடுகளுக்கு எல்லாம் தலைவன் என்றால், அதனால் எந்த நாட்டுக்கும் எந்த பயனும் இருக்காது. எந்த நாடு ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உதவி செய்து வாழ வைக்க முடியுமா? அதுதான் உலக நாடுகளில் உயர்ந்தது, சிறந்தது ,தான் அழிக்கும் கருவிகளை வைத்துக்கொண்டு ,அதை விற்பனை செய்து கொண்டு, தன்னை வல்லரசு என்று காட்டிக் கொள்வதில் எந்த பெருமையும் இல்லை.மேலும்,

மகாபாரதத்தில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு ஏதாவது உபதேசம் செய்யும்போது கிருஷ்ணன் சொல்கிறார். நீ இவர்களையெல்லாம் அழிக்கவில்லை என்றால், ஒரு நாள் பிறப்பு எடுத்த அத்தனை உயிர்களும் ,அவை மாண்டு தான் போகும். அதனால், தர்மத்தை நிலை நாட்ட ,அதர்மத்தை அழி என்று அர்ஜுனனுக்கு உபதேசம் செய்கிறார். இதில் எந்த நாடுகளில் அதர்மம் தலை தூக்குகிறதோ, எங்கே மக்கள் தர்ம சிந்தனைகளில் வாழவில்லையோ ,அங்கே அழிவு நிச்சயம். அதுதான் இந்த முஸ்லிம் நாடுகளில், தீவிரவாதத்தை வளர்த்து விரைவில் அழிவைத் தேடிக் கொள்கிறார்கள். தீவிரவாத அச்சுறுத்தல்,  தேசத்திற்கு ஆபத்தானது.

 அதை ஆரம்பத்திலே ஆட்சியாளர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் .இந்தியாவில் தீவிரவாதம் மற்றும் தீவிரவாத செயல்கள் ஆரம்பித்தது காங்கிரஸ் ஆட்சியில் தான் .அப்போதுதான் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர்களுடைய ஆட்சியில் தான் தீவிரவாதிகள், வலுப்பெற்றார்கள் .அவர்களுக்கு பொருளாதார உதவி, ஆயுதங்கள் சப்ளை இவையெல்லாம் தாராளமாக கிடைத்தது.

இது மக்களுக்கு தெரியாது என்று காங்கிரஸ் கட்சியினரும், காங்கிரஸ் கட்சியும், நாட்டில் தன்னை தியாகி என்று பேசிக் கொள்வதில் அர்த்தம் இல்லை . இந்த உண்மையை மறைக்கும் ஊடகங்களா? அல்லது பொய்யை மக்களிடம் பரப்பும் ஊடகங்களா?  எது உண்மை? எது பொய்?  என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *