காலத்தின் மாற்றங்களில், மனித வாழ்க்கை எப்படி மாறுகிறது ?

Uncategorized

மனித வாழ்க்கை! கால மாற்றங்களில் வாழ்க்கையும் மாறிக்கொண்டே இருக்கிறது .மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. கற்காலத்தில் வாழ்ந்த மனித வாழ்க்கையில் இருந்து, தற்போது சுமார் 50 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, இப்போது எவ்வளவு மாற்றங்களை கண்டுள்ளது?

இனி வரும் காலங்களில், மனித வாழ்க்கை உழைப்பு என்பதை உதாசீனமாக்கி, அறிவு என்ற ஒரு ஆதிக்கத்தின் சக்தியாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த அறிவு விஞ்ஞானத்தின் வளர்ச்சியாக இருக்கலாம். விஞ்ஞானம் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைகிறதோ, அந்த அளவிற்கு மனித வாழ்க்கையின் நிம்மதி ,சந்தோஷம் எல்லாம் மனிதனிடமிருந்து விலகி நிற்கிறது.

 அக் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், (சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித வாழ்க்கை) வறுமையில் வாழ்ந்தாலும், துன்பத்தில் வாழ்ந்தாலும், நிம்மதியும், சந்தோஷமும் அவர்களிடம் நிலைத்திருந்தது. ஏழை ,பணக்காரன் என்ற வித்தியாசம் இருந்தாலும், ஜாதி வேற்றுமைகள் இருந்தாலும், மத வேற்றுமைகள் இருந்தாலும், வாழ்க்கையின் ஒற்றுமை ,மனித பிமானம், கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், பழக்க வழக்கங்கள், எல்லாம் இயற்கையோடும், இறைவனோடும் சார்ந்து இருந்தது .

அந்த நம்பிக்கையை உடைத்தது தி .க என்ற ஒரு திராவிட கழகம், இன்று வரை அது ஒரு எப்படியும் வாழலாம் , எப்படியும் பேசலாம் , என்ற கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் உருவாக்கியது. ஆனால், அதனுடைய கொள்கை தோற்றாலும், இன்று வரை இந்த திராவிட கட்சிகள் மீசை மீது மண் ஒட்டவில்லை என்ற தத்துவத்தை தான் மக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறது.

இனிவரும் காலங்களில் மனித வாழ்க்கை எப்படி இருக்கும்? தொழில்கள் எப்படி இருக்கும்? என்னென்ன தொழில்கள் இருக்கும்? எந்தெந்த தொழில்கள் மாற்றங்களை முன்னெடுக்கும்? அதற்கு உதாரணம் 10 வருடங்களுக்கு முன் இருந்த தொழில் இன்று காணாமல் போய்விட்டது . இன்று அதே தொழில் புதிய மாற்றங்களை மக்களிடம் உருமாறி உள்ளது. அதேபோல் தான், இந்த மாற்றங்கள் எப்படி மாறும்? என்பதை நோக்கி இளைஞர்கள், வருங்கால இளைய தலைமுறைகள் ,அதற்கு ஏற்றவாறு மாறி வாழ்ந்து காட்டுங்கள்.

GOLDEN AGE COMING SOON? 2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்? என்னென்ன தொழில்கள் இருக்காது ? 1998 ல தொடங்கின Kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட அமோக வரவேற்பை மக்களிடம் பெற்றது. இன்று அப்படி ஒரு நிறுவனமே இல்ல…!

வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்க முடியும் என்கிற நிலைமை இப்படி பல தொழில்கள் 10 ஆண்டுகளுக்கு முன் இருந்தது காணாமல் போய்விட்டது . மேலும்,

தெருவுக்கு, தெரு PCO, STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர், வாக்மேன், டிவிடி பிளேயர் என சொல்லி கொண்டே போகலாம். தவிர ,குண்டு பல்பும், டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்ப LED பல்பு தான்.எதனால ? இப்படி?டெக்னிகலா சொல்லனும்னா

   Artificial Intelligence…! சிம்பிளா சொல்லனும்னா ‘Software’ என்கிற மென்பொருள்…!மனுஷ மூளையைவிட திறமையா செயல்படும் . இதன் ஆதிக்கம் தான் அதிகமாக இனி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து. மேலும், உதாரணத்துக்கு சொல்லணும்னா..சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, ‘Bharat Matrimony’ வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது…கமிஷனோட…! மேலும்,

Uber’ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது..!இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்…!உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது…என்ன பண்றதுனு தெரியலையா? என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க…!சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு அவருடைய Fees வாங்குவாரு..!

இல்லையா?

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் விரைவாகவும் மலிவாகவும் செய்து கொடுத்தால் எப்படி இருக்கும்………. ? உங்களோட சிக்கல் என்னனு ?சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே, Section-னோட சரியான விவரங்கள Probabilities- சுடன் அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா? சில  நாட்களில் பெரும்பாலான வக்கீல்கள் ,தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்…!வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் தெளிவாக சொல்லும்…IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்ட சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது..!

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..!அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ? இது ஒரு உதாரணம்தான்.ஆடிட்டர்கள் வேலையை cleartax, taxman போன்ற இணையதளம்!…டாக்டர்கள் வேலையை Ada app!…ப்ரோக்கர்கள் வேலையை magic bricks, quickr, 99acres, இணையதளம்!..கார் விற்பனையை carwale, cars24 இணையதளம் !.என சேவை இலவசமாக தருகின்றன.மேலும்,

UBER OLA வந்தபிறகு சொந்தகார் தேவையில்லை. தவிர,ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணிவரை கிடைப்பதால் ,ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்.நெட்பிளிக்ஸ் வந்தபின் மேற்கத்திய நாடுகளில் தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை…இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS app மூலம் எடுத்து கொள்ளலாம்…80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை…கம்ப்யூட்டரே பாத்துக்கும்…’Subject Matter Experts’னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்..!

2025 ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.2023 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது.அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா,ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்!.அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்.யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது.’Driving License’ என்ற ஒன்று காணாமல் போயிருக்கும்,பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா…உங்க செல்லில் இருந்து.. ஒரு மிஸ் கால்.. இல்ல..SMS…!அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய இடத்துக்கு கொண்டு போய் விட்டுடும்.கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.இதனால என்னவாகும்ன்னா…?

அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம்.’Accident’ ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில ‘கார் பார்க்கிங்’காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் கனரக வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்…Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும்…

எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம்தான். இப்போதே கூகுளுக்கு நீங்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை, நீங்கள் எடுக்கும் முடிவுகளை தீர்மானம் செய்வது கூகுள்தான்.எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10 -15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்…இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..?உங்க நினைப்பை மாத்திக்குங்க.இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்.

குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா?

சரி, மேலும்,என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?முக்கியமா ‘Banking’ எனப்படும் வங்கி சேவைகள். ‘BitCoin’ னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா?இல்லனா கூகுளை கேளுங்க…!அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.அப்புறம், ‘Insurance’ எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்.

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும்.சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும்.வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.விவசாயம்,இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள்.நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.

இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும்.விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு மாத்திரை தான் உணவு.காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ..!Moodies’ ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது…

2022 ல நீங்க பொய் சொல்றீங்களா, இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும்…!யாராலயும் ஏமாத்த முடியாது.இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளை செய்கிறது.இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012 ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க…

Tricoder – X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்டுக்கு வருது. உங்க செல்போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும்.உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சுக் காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும்.அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் சுலபம் அல்லவா? டாக்டர்கள் Clinic வைக்கத் தேவையில்லாம, Online -ல யே ஒரு Op – ய Treat பண்ண முடியும். In-patient-க்குத்தான் Hospital.

மாற்றத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும். மேலும் ,படித்த பின் வேலைக்கு சென்று சம்பாதிக்க இப்போதைய இளைய தலைமுறைகள் படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்.கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்.சந்திக்க தயாராவோம். மாற்றங்களை நோக்கி மனித வாழ்க்கை.எதிர்காலம் நம் கையில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *