குரு பௌர்ணமியில் சித்தர்கள், மகான்கள் அருபமாக கிரிவலம் என்றால் ,பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூலை 21, 2024 • Makkal Adhikaram

திருவண்ணாமலை பல யுகங்களாக இருந்து வரும் மலை என்று மகன்கள் தெரிவிக்கின்றனர் . அதனால் தான் எத்தனையோ சித்தர்கள், எங்கெங்கோ ஜீவ சமாதி அடைந்தாலும், அவர்களும் முக்கிய நாட்களில் அரூமாக வலம் வருவதும், சிலர் கண்களுக்கு தெரிவதுமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இது மலையே சிவன். 

ஜோதியின் பிழம்பு மலையாக மாறியதாக விஞ்ஞானம். ஆனால், மெய்ஞானத்தில் கையிலாயத்திற்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை. இந்த மலையில் எத்தனையோ ஜீவன் முக்தர்கள், சித்தர்கள், மகான்கள், ஐக்கியமான ஒரு இடம்தான் திருவண்ணாமலை. இந்த மலைக்கு நிகர் எந்த மலையும் இருக்க முடியாது. திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தமிழகம் முழுவதும் மட்டுமல்ல, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். 

கிரிவலம் செல்லும்போது, அது ஒரு ஆன்மீக பயணமாக நினைத்து தான் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த மலை ஆன்மீக பக்தர்களுக்கான சொந்தமலை. எத்தனையோ ஆன்மீகவாதிகள் ,வட இந்தியாவில் உள்ள புண்ணிய தலங்களுக்கு யாத்திரை சென்று, அவர்களுடைய ஆன்மீக ஆற்றல் அதிகப்படுத்தி கொண்டாலும், அவர்களுக்கு திருவண்ணாமலை தான் அமைதி, சந்தோஷம் ,நிம்மதி தருகின்ற ஒரு மலையாக உள்ளது. 

இங்கே எத்தனையோ மகான்களின் ஆசிரமம் ரமண மகரிஷி, சேஷாத்திரி மகரிஷி, போன்ற மகான்களின் ஜீவன்கள் அண்ணாமலைக்கு காவலாக இருந்து வருகிறார்கள். அது மட்டும் அல்ல, இந்த மலைக்கு பக்தர்கள் நினைத்தாலே முக்தி தருகின்ற திருவண்ணாமலை, வேண்டுகின்ற கோரிக்கைகள் நிறைவேற்றும் நம்பிக்கை பக்தர்களுக்கு உண்டு. அதனால் தான், ஒவ்வொரு பௌர்ணமியிலும், சாதாரண நாட்களிலும், அமாவாசை நாட்களிலும், கார்த்திகை தீபத்திரு நாட்களிலும், இங்கே திருவண்ணாமலையை பக்தர்கள் சுற்றி வருகின்றனர் . 

இப்படி சுற்றி வரும் இலட்சக்கணக்கான ஆன்மீக பக்தர்கள், ஏன் கோயிலை இடிக்கும் போதும், கோயில் சொத்துக்கள் அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கும் போதும், ஒன்று திரண்டு கேட்க மாட்டார்கள் என்கிறார் ஒரு சன்னியாசி . மேலும், அந்த சன்னியாசி என்னிடம் தெரிவித்தது, கோயிலை இடிக்கும் போதும், கோயிலுக்கு இடையூறுகள் செய்யும் போதும், நமக்காக வரக்கூடியவர்கள் இந்த ஆர்எஸ்எஸ் காரர்களும், விஹெச்பி , இந்து முன்னணி மற்றும் பிஜேபியும் தான் ஓடி வருகிறார்கள் .மற்றவர்கள் வேடிக்கைதான் பார்க்கிறார்கள் . 

அவர்களுக்காவது கடவுள் இதை தட்டி கேட்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை கொடுத்து, இந்த திராவிட அரசியலில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், தர்ம சிந்தனையில் மக்கள் வாழும் போது, இந்த திராவிட அரசியல் அல்லது ஊழல் காங்கிரஸ் அரசியல் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களுக்கு அநியாயம், அதர்மம், சுயநலம், தான் வாழ்ந்தால் போதும், ஊர் என்ன? நாடு என்ன? எக்கேடு கெட்டு போனால் நமக்கு என்ன? நம்ம வீட்டில் மட்டும் விளக்கு எரிகிறதா? இப்படிப்பட்ட மக்கள் இருக்கும்போது, எப்படி நல்லவர்களுக்கு வாக்களிப்பார்கள்? பொதுநலம் கொண்டவர்களுக்கு வாக்களிப்பார்கள்? பணத்திற்காக தான் வாக்களிப்பார்கள்.

இந்த சுயநலம் தான் இவர்களை அழித்துக் கொண்டு இருக்கிறது என்பது இவர்களுக்கு தெரியாத ஒன்று. இந்த சுயநலம் தான் இன்று நாட்டில் ஊழல்களை உருவாக்கி வைத்திருக்கிறது என்பது இவர்களுக்கு தெரியாத ஒன்று. இந்த சுயநலம் தான், கொள்கை என்று ஐஏஎஸ் படித்த சசிகாந் சொல்லிக் கொண்டிருக்கும் கொள்கையா ? என்ன கொள்கை? காங்கிரஸில் இருக்கிறது? என்ன கொள்கை பிஜேபியில் அது இல்லை? இதை இவரால் தெளிவுபடுத்த முடியுமா? முட்டாள்களிடம் எதைப் பேசினாலும் கேட்டுக் கொண்டிருப்பார்கள் .

அதை எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் எந்த கட்சியில் என்ன கொள்கையை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? அப்படி கடைப்பிடிப்பவர்கள் எத்தனை பேர்? இவரால் பதில் சொல்ல முடியுமா? நாட்டில் அரசியல் என்பது தனக்கும், தன் கட்சியினருக்கும், எத்தனை கோடிகளை சேர்த்துக் கொள்ளலாம் ?அதுதான் கொள்கை . கொள்கைப்படி அரசியல்வாதிகள் வாழ்ந்தால்! ஏன் நாட்டில் கொள்ளைகள் நடக்கிறது? ஏன் நாட்டில் கொலைகள் நடக்கிறது? ஏன் நாட்டில் மோசடிகள் நடக்கிறது ?அரசியலில் ஊழல்கள் நடக்கிறது? வெளிநாட்டு முதலீடுகள் நடக்கிறது? 

இவையெல்லாம் படித்து ,பட்டம் பெற்ற மக்கள் வாழுகின்ற காலத்தில் தான் நடக்கிறது. படிப்பறிவு இல்லாத மக்கள் வாழ்ந்த காலத்தில் இவை எதுவுமே நடக்கவில்லை, அது என்ன என்று கூட தெரியாது .அப்படி என்றால் மக்களின் சுயநலம் தான், இதற்கு எல்லாம் முக்கிய காரணமா? மேலும் ,இதற்கெல்லாம் மக்களுக்கு பதில் தெரியாது என்றுதான், இவர்கள் வாய்க்கு வந்தபடி ,ஏதோ பெரிய ஊடகங்கள் ,அந்த ஊடகங்களில் எது பேசினாலும், தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .கடவுளைத் தவிர, எவன் ஒருவனும் பெரிய ஆள் கிடையாது .அவனுக்கு அவன் நிகர் வேறு யாருமில்லை . 

ஒரு பக்கம் ஜாதி, ஜாதியில் எப்படியும் பேசுபவர்கள், உடம்பு பலத்தை காட்டுபவர்கள், இவர்கள் எல்லாம் தன்னை பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் சின்ன ஆள் தான். எப்போது ஒரு மனிதன் தன்னை உணருகிறானோ, தன்னுடைய பிறப்பு எதற்கு ?என்பதை உணருகிறாரனோ, அவனே பெரிய ஆள். அதனால், அரசியலில் பல கோடிகளை சட்டத்தை ஏமாற்றி, கொள்ளையடித்துக் கொண்டு, நான் இத்தனை கோடி சொத்துக்களை சம்பாதித்து விட்டேன். 

கையில், காலில் நகைகளை பூட்டிக் கொண்டேன். காரில் வலம் வருகிறேன். என்னை சுற்றி 100 அடி ஆட்கள் இருக்கிறார்கள். அரசியல் ,அதிகாரம் இருக்கிறது. எல்லாம் தான் இருக்கும். ஆனால், கடவுள் நினைத்தால் உனக்கு எதுவும் இருக்காது. ஒருவேளை உணவு கூட இருக்காது. அதுதான் நோய் என்ற ஒரு கர்மா, அதுதான் சொந்த பந்தம் என்ற ஒரு கர்மா, அதுதான் யாரெல்லாம் உன்னை வாழ்த்தினார்களோ, யாரெல்லாம் உன்னை புகழ்ந்தார்களோ, அவர்களே உன்னை வெறுத்து, தூற்றும் அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுவான் இறைவன் . 

நான் தான் பெரிய ரவுடி என்றால், உனக்கு மேல் ஒரு ரவுடியை உருவாக்கி உன்னை போட்டு தள்ளி விடுவான் அதனால், அவனிடத்தில் யாருமே இவர்களால் நெருங்க முடியாது. நல்ல மனம், தர்ம சிந்தனை, பேராசையற்ற வாழ்க்கை, இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்பவர்கள், அவர்கள் தான் இறைவனை நெருங்க முடியும். நீங்கள் எவ்வளவுதான் தின்னு அழித்தாலும், எத்தனை கோடி சொத்துகளை அனுபவித்தாலும், எவ்வளவு பேர் இருந்தாலும் , உங்களுடன் யாருமே இந்த உலக விட்டுப் போகும்போது, வர மாட்டார்கள். உங்களுடைய பணத்தையோ, சொத்தையோ, எடுத்துக் கொண்டு போக முடியாது. இருக்கும் வரை மனிதன் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு, இறைவனை அடைகிறானோ ,அவனே இந்த உலகத்தில் மிகப்பெரியவன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *