சமூக நலனில் அக்கறை இல்லாத அரசியல் கட்சிகளின் பொய்களை நம்பியோ, பணத்திற்காகவோ, வாக்களித்தால் மீண்டும் ஊழல்வாதிகள் ,தேர்வு செய்யப்பட்டு எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதை சிந்தித்து வாக்களியுங்கள் .

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஏப்ரல் 17, 2024 • Makkal Adhikaram

தேர்தல் நேரத்தில், முன்னாள் நிதி அமைச்சர் பா .சிதம்பரம் ரூபா நோட்டுகள் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு பெற்றது மிகப்பெரிய துரோகம் என்று மக்கள் அதிகாரத்தின் இணையதளத்தில் செய்தியாக டிசம்பர் 21, 2022 ல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆனால், பிஜேபியின் ஒரே நாடு பத்திரிக்கை ஆசிரியர் இப்போதுதான் அதை தெரிவிக்கிறார். இதற்கு முன்னர் இச் செய்தியை இரண்டு மூன்று தடவை மக்கள் அதிகாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இது இந்தியாவுக்கு பா. சிதம்பரம் செய்த மிகப்பெரிய அரசியல் துரோகம் .இதுவே துபாய் போன்ற நாடுகள் ஆனால் ,அவரை சுட்டு தள்ளி இருப்பார்கள் . பாகிஸ்தானுக்கு இவர் சர்டிபிகேட் கொடுக்கிறார் .நல்லவர்கள் என்று எதற்கு? இங்கு கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஏற்படுத்துவதற்காகவா? அல்லது தீவிரவாதி செயலை செய்வதற்காகவா? எனவே,

பா. சிதம்பரம் போன்ற ஆட்கள் எல்லாம் அரசியலில் இருப்பதற்கு தகுதி இல்லை,மேலும் ,பா.சிதம்பரம் இந்த ரூபாய் நோட்டை அடிக்கும் மெஷினை பாகிஸ்தானுக்கு விற்ற பிறகுதான், இந்தியாவில் கள்ள நோட்டு பழக்கம் அதிகரித்தது. தீவிரவாதம் அதிகரித்தது. இதையெல்லாம் சமூக நலன் பத்திரிகைகள் மக்களிடம் இந்த உண்மைகளை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது .

இதை அரசியல் ஆதாயத்திற்காக, இச்செய்தியை வெளியிடவில்லை. மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்று தான் இச்செய்தியை வெளியிடுகிறேன்.மேலும்,பா. சிதம்பரம் போன்ற கேடுகெட்ட அரசியல் ஊழல்வாதிகள் கூட்டம் தமிழ்நாட்டில் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளில் தான் அரசியல் செய்ய முடியும் .எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளில் அரசியல் செய்ய முடியாது .

தவிர,அரசியல் கட்சி பத்திரிகைகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே, ஒருவரை பற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.ஆனால்,நடுநிலையான சமூக நலன் பத்திரிகைகள் அவ்வாறு தெரிவிக்க முடியாது. எது உண்மையோ அதை தான் மக்களிடம் இந்த பத்திரிகைகள் தெரிவித்து வருகின்றன. அதுவே எங்கே என்று தேட வேண்டி இருக்கிறது? அதனால், வருங்காலத்தில் மக்களுக்கான ஊடகங்கள் எது என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்? இப்போது எவ்வளவு பொய்கள்?

ஒருவரைப் பற்றி ஒருவர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பொய்களையும், இந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அவர் பேசினார். இவர் பேசினார் என்று சகிக்க முடியாமல் அரசியல் தெரிந்தவர்கள் புலம்பித் தவிக்கிறார்கள். மேலும், ஆட்சி என்பது, அரசியல் என்பது, வாய் வித்தை காட்டுவதற்கு அல்ல .மைக்கை பிடித்துக் கொண்டு நீ பேசுவது எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க மக்கள் அனைவரும் முட்டாள்கள் அல்ல. மேலும்,

மக்கள் ஏமாந்து இவர்களுடைய பேச்சுக்களில், உண்மை தெரியாமல், அரசியல் தெரியாமல், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், பணத்திற்காக வாக்களிக்கும் போது தான், இது போன்ற அரசியல் கட்சிகள், அந்த கட்சிகளில் இருக்கக்கூடிய ஊழல்வாதிகள் மீண்டும், மீண்டும் தேர்வு செய்யப் பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் ,இவர்களுடைய நிர்வாக ஊழல், தடையாக, எதிராக உள்ளது என்பதை புரிந்து வாக்களியுங்கள்.

அதுதான் உங்கள் வருங்கால சந்ததிகளை வாழ வைக்க நீங்கள் அளிக்கும் வாக்கு என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்.அரசியல் கட்சிகளிடம் காசு வாங்கி உங்கள் வாழ்க்கையை ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். வளமாக வாழ்வதற்கே அரசியல் தேர்வு என்பதை புரிந்து வாக்களியுங்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *