சோசியல் மீடியாக்களில்! பத்திரிக்கை போர்வையில் பொய் செய்திகள்!மக்களை ஏமாற்றும் கூட்டம் – பொதுமக்கள் உஷார்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

இது என்ன பத்திரிக்கையா? இல்ல அல்லகை எடுப்பா? நிதி எப்படி வந்தா என்ன? மாநிலங்களை மிரட்டுறாங்க? போறாங்க, வராங்க? ஐயா சத்யராஜ் இங்க எல்லாம் கஷ்டப்பட்டு, ஏழை எளிய நடுத்தர மக்கள் இந்த கல்வியால் மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.

(மோடி! ரகசிய கூட்டம் போட்டு, நாட்டு மக்களுக்கு செய்த துரோகம் என்ன? )

மேலும் புதிய கல்விக் கொள்கை காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் அதில் இருக்கிறது. அதையெல்லாம் இந்த மாணவ சமுதாயம் படித்தால் தான் இன்று அவர்கள் சிபிஎஸ்சி மாணவர்களோடு அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் போட்டி போட முடியும். அது மட்டுமல்ல, இந்த கல்விக் கொள்கை பற்றி கல்வியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டது.

மத்திய அரசின் கல்வி திட்டத்தில், மாணவர்களுக்கான பயன் என்ன? நல்லது என்ன? கெட்டது என்ன? அதை சொல்லுங்கள்.

ஆனால்,அதை விட்டுவிட்டு, அல்ல கைகள் போல், எப்படியும் பேசுவது பத்திரிகை அல்ல. அதுமட்டுமின்றி,கட்சிக்காரன் போல பேசிவிட்டு,கல்விக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் பத்திரிகை என்கிறார்கள்..அதிலும் பெரிய பத்திரிக்கை, என்னடா பெரிய பத்திரிகை? நீ எது சொன்னாலும், பெரிய பத்திரிகையா? அதைக் கேட்டுக் கொள்ள முட்டாள்களாக தான் இருக்க வேண்டுமா?

விஷயத்தை சொல்லு,உண்மையை சொல்லு,அது எந்த பத்திரிக்கையாக இருந்தாலும், எது என்று மக்கள் தீர்மானிக்கட்டும்? அதை விட்டு,விட்டு கட்சிக்காரர்கள் போல், பத்திரிகை போர்வையில் அரசியல் பேசி மக்களை குழப்பாதீர்கள். மேலும்,

ஒரு திட்டம் மத்திய அரசு கொண்டு வந்தால், அதை மாநில அரசு எதிர்க்கத் தான் சட்டமா? மத்திய அரசு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லையா? மாநில அரசே மொத்தம் மக்களை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறதா? போலியான அரசியல், போலியான பத்திரிகை பிம்பம், இது எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும்.உண்மை எது?பொய் எது? என்று பேசக்கூடிய தகுதியான பத்திரிகைகள் நாட்டில் இல்லை. மேலும்,

கருத்து சுதந்திரம் என்று சொல்லி பொய்களை சொல்வதற்கு கருத்து சுதந்திரம் தேவையில்லை, மக்களை குழப்புவதற்கு கருத்து சுதந்திரம் தேவையில்லை, ஒரு கட்சி எவ்வளவு ஊழல் செய்தாலும்,எவ்வளவு கொள்ளையடித்தாலும், அது நன்றாக ஆட்சி நடத்துகிறது என்று சொல்ல கருத்து சுதந்திரம் தேவையில்லை.

மோடி எவ்வளவு நாட்டுக்காக நல்லது செய்தாலும், அதை எல்லாம் குறை சொல்வதற்குண்ர கருத்து சுதந்திரம் தேவையில்லை. இதுதான் உங்கள் கருத்து சுதந்திரமா? காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்த ஊழல்கள் எவ்வளவு? காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களுக்கு செய்த துரோக வரலாறு அதை சொல்ல முடியுமா?

மேலும், ஆட்சியில் இருந்து போகும் போது நாட்டில் வைத்து விட்டுப் போன கடன் தொகை எவ்வளவு?அதற்கு இந்தியா எவ்வளவு வட்டிகட்டி இருக்கிறது? இதையெல்லாம் சொல்லத் தகுதி இருக்கிறதா?? இதுவெல்லாம் கருத்து சுதந்திரமா?

(பேங்க்ல போயிட்டு எப்பவாவது லோன் வாங்கி இருக்கியா சத்யராஜ்?பேங்க்ல எவ்வளவு கேள்வி கேட்கிறான்?ஒரு லோன் வாங்க எவ்வளவு டாக்குமெண்ட் கொடுக்கணும்?கோடிக்கணக்கில் லோன் வாங்க? எவனும் லோன் போய் கேட்ட உடனே கொடுத்திட மாட்டான். வங்கிகள் ரைட் அப் பண்ணுகிறது என்றால் அவனிடமிருந்து அசல் தொகையை வாங்கிவிட்டு தான் ரைட் அப் பண்ணி இருக்கும். ஒருவன் வங்கியில் கடன் வாங்கி விட்டால் கடன் தொகை ஒரு லட்சம் என்றால் வட்டி இரண்டு லட்சம் ஆகிவிடும்.அவன் கட்டி முடிப்பதற்குள் இதுதான் வங்கி கடன். இதில் கட்டியது போக கடன் தொகையில் ஓரளவு லாபம் வந்தாலும்,வங்கி தற்போது அதை ரேட் அப் பண்ணுகிறது.பொதுமக்களுக்கு நன்மைதான்.)

நீ எவ்வளவு பொய்களை சொன்னாலும்,அது கருத்து சுதந்திரமா?அதையெல்லாம் முட்டாள் ஜனங்கள் பத்திரிகை என்று வாங்கி படித்துக் கொண்டிருக்க வேண்டும். சோசியல் மீடியா என்று பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் தவிர, பத்திரிக்கை என்பது பொய்களை உண்மை என்று திரித்து பேசுவது, திரித்து சொல்வது பத்திரிகை அல்ல.

மக்களிடம் உண்மையை சொல்பவன் தான் பத்திரிக்கையாளன்.அதுதான் பத்திரிகை. மேலும், மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றால், நீங்கள் தமிழ்நாட்டு மக்களை மத்திய அரசு வஞ்சித்து விட்டது.நிதி கொடுக்காமல் ஏமாற்றுகிறது, மாநிலத்திற்கு சுயாட்சி தேவை, இந்த டயலாக் எல்லாம் பேசி அரசியல் செய்ய நீங்கள் கட்சி மேடையை போட்டுக் கொள்ளுங்கள்.அங்கே ஏறி பேசுங்கள் தப்பில்லை.

ஆனால்,பத்திரிக்கை என்ற போர்வையில் மக்களை ஏமாற்றினால் கண்டிப்பாக எங்களைப் போன்ற சமூக நலன் ஊடகங்கள், பத்திரிக்கை துறையில் நடந்து கொண்டிருக்கும் அவலங்களை வெளிப்படுத்துவோம்.பத்திரிகை போர்வையில் செய்கின்ற அலப்பறைகளை வெளிப்படுத்துவோம்.

மேலும், சோசியல் மீடியாவில் பத்திரிகை என்று எவன் பணம் கொடுக்கிறானோ,அவனுக்காக எப்படியும் பேசுவது பத்திரிக்கை அல்ல.பத்திரிக்கை என்றால் வந்த வரைக்கும் பேசிவிட்டு போவது பத்திரிக்கை அல்ல. அது யார் வேண்டுமானாலும் பேசலாம். அதனால் பத்திரிகை என்றால் அதற்கு அர்த்தம் இருக்க வேண்டும். அதற்கு தகுதி இருக்க வேண்டும்.

இந்த உண்மைகள் தெரியாமல் இருக்கின்ற ஒரு மக்களுக்கும், இனி புரியும் என்று நினைக்கிறேன். இது பத்திரிக்கை உலகத்திற்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *