டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மாவின், வீட்டில் 100 கோடிக்கு மேல் பணம் இருந்தது உச்சநீதிமன்ற நீதிபதியின் விசாரணையில் உறுதியானதால், அவர் மீது நாடாளுமன்றத்தில் நடவடிக்கை உறுதி.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள்

நாட்டில் நீதிபதிகள் ஊழலுக்கு எதிரானவர்களாக இருக்க வேண்டும். ஊழல்வாதிகளோடு கைகோர்த்துக்கொண்டு, தீர்ப்புகளை அவர்களுக்கு சாதகமாக சொல்லிக் கொண்டிருந்தால், நீதித்துறைக்கு அர்த்தமில்லாமல் ஆகிவிடும். சட்டம் கேலிக்கூத்தாகிவிடும். 140 கோடி மக்களின் உணர்வுகள், கேவலப்படுத்தப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது நீதிபதிகளின் தீர்ப்பு தேச நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் எதிர்காலம்,பொருளாதார முன்னேற்றம்,வருங்கால இளைய தலைமுறைகளின் வளர்ச்சி,அவர்களது கனவு, எல்லாமே இதில் அடங்குகிறது.

இப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நீதித்துறையின் தீர்ப்புகள் ஊழல் பின்னணி கொண்டிருந்தால் நாடு மிக மிக மோசமான விளைவுகளை சந்திக்கும். ரஆதனால் நாடாளுமன்றம் இவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுதான் நீதித்துறையில், சட்டத்தை தங்கள் இஷ்டம்போல் தீர்ப்பு சொல்வதும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக தீர்ப்பு சொல்வதும் தங்களுடைய அதிகாரத்தை எந்த வழக்கிற்கு பயன்படுத்த வேண்டும் என்பது கூட தெரியாமல் தீர்ப்பு சொல்வதும், நீதிமன்றங்களின் மாண்பை குறைப்பது ஆகும்.

அதனால், நீதித்துறையில் இருக்கக்கூடிய கருப்பாடுகள் மீது நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் இந்திய பெரும்பான்மை மக்களின் முக்கிய கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *