தந்தை, மகளை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் துணிகர கொள்ளை .

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram

ஈரோடு மாவட்டம், அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்த தம்பதி விஸ்வநாதன் – சின்னம்மாள். இவர்களின் மகன் கோகுல கிருஷ்ணன். மகள் ரம்யா. மகளுக்கான திருமண பத்திரிகையை குலதெய்வ கோவிலில், வைத்து தரிசனம் செய்ய, தாயுடன் கோகுல கிருஷ்ணன் நேற்று கோவிலுக்கு சென்றார். வீட்டில் விஸ்வநாதன், ரம்யா இருந்தனர்.

முகமூடி அணிந்த மூவர், 11:00 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்து, தந்தை, மகளை கத்தியை காட்டி மிரட்டி, கட்டிப் போட்டனர். பின், பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். கோவிலுக்கு சென்ற கோகுலகிருஷ்ணன், தாயுடன் வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்றபோது தந்தை, சகோதரி கட்டிப்போடப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இருவரும் நடந்த சம்பவங்களை கூறினர்.

சென்னிமலை போலீசார் விசாரித்தனர். பீரோவில், 5 லட்சம் ரூபாய் வைத்திருந்ததாக, விஸ்வ நாதன் போலீசிடம் கூறினார். திருமண செலவுக்கு பணம் வைத்திருப்பதை தெரிந்தே சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *