
தமிழக அரசு ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் அது தொடர்ந்த 10 மசோதாக்கள் சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆளுநர் அதைக் கிடப்பில் போட்டு, வைக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அதன் மீது வழக்கு தொடர்ந்து நீதிபதிகள் தங்களுடைய அதிகாரத்தால்,( 142) பிரிவு பயன்படுத்தி அதை சட்ட மசோதாவாக மாற்றி தீர்ப்பளித்தார்கள். இது நாடு முழுவதும் இந்த தீர்ப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒருபுறம் இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று பேசினார்கள் மற்றொரு பக்கம் இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று பேசினார்கள்.

இப்படி ப்பட்ட இந்த தீர்ப்பு மீண்டும் ஜனாதிபதி மூர்மு, இது பற்றி 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கு முன் வைத்தார். அந்தக் கேள்விகளுக்கு இன்னும் சட்ட விளக்கம் புரியாமல், பகுத்தறிவு கூட்டம் பேசிக் கொண்டிருக்கிறது.

அதாவது உச்சநீதிமன்றத்தில், ஒரு சட்டத்தின் மசோதா மீது தீர்ப்பு சொல்ல அவர்களுக்கு அதிகாரம் இல்லை. அதாவது மசோதாக்கள் சட்டமாக்கப்படவில்லை.
சட்டம் ஆக்கினால்! அது பற்றி நீதிமன்றங்கள் நல்லதோ, கெட்டதோ, ஏதோ ஒரு தீர்ப்பு சொல்ல முடியும்.
இங்கே என்ன தவறு நடந்துள்ளது?என்றால், குழந்தை வயிற்றிலே இருக்கிறது. அது ஆணா? பெண்ணா?என்று தெரியாமல் தீர்ப்பு சொல்லி விட்டார்கள். இப் பிரச்சனையால், சட்ட சிக்கல் ஏற்பட்டு,இதை நீர்த்து போகும் அளவிற்கு, ஐந்து நீதிபதிகள் கொண்ட பென்ச் தான் இதை முடிவு செய்ய முடியும். அதுவும் தீர்ப்பு சொல்ல முடியாது.

ஏனென்றால், அரசியலமைப்பு சட்டத்தில், இந்த அதிகாரம் கவர்னருக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்து விட்டார்கள். குறுக்கு வழியில் ஆளுநரின் அதிகாரத்தை பறிப்பதற்கு திமுக அரசு பல கோடிகளை உச்ச நீதிமன்றத்தில் செலவு செய்துவிட்டது.
இதில் எவ்வளவு செலவு செய்து இருக்கிறார்கள்? என்பது ஆர்.டி.ஐ யில் கேட்டால் தான் தெரியும். மேலும், உச்சநீதிமன்றத்தில் இது பற்றி ஒரு விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. தவிர,தமிழ்நாட்டில் இங்கே ஆளுநரா? தமிழக முதல்வரா?என்ற போட்டியில் துணைவேந்தர்கள் நியமனம் கல்வித்துறையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டத்தை விட்டு, விட்டு மக்களிடம் இவர்கள் நீதிபதிகளுக்கு ஆர் எஸ் எஸ், பிஜேபி போன்ற சித்தாந்தங்களை அவர்கள் மீது திணிக்கிறார்கள். சட்டப்படி யாராக இருந்தாலும், ஒரு மசோதாவை சட்டமாக்குவதற்கு முன்,அதன் மீது தீர்ப்பு சொல்ல சட்டத்தில் அனுமதி இல்லை. ஆனால் அதன் மீது,
சட்டமாக்கப்பட்ட பிறகு தான் நீதிமன்றத்திற்கு நல்லதோ, கெட்டதோ ஒரு தீர்ப்பு சொல்ல முடியும். இதையெல்லாம் சொல்லக்கூடிய குறைந்தபட்ச சட்ட நிபுணர்களாவது திமுக அரசுக்கு இருக்க வேண்டும். ஆனால் திமுக அரசிடம்,எல்லாமே கட்சி சார்புடைய வழக்கறிஞர்கள் கருத்து இப்போது சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் கட்சி சிபாரிசிலே நீதிபதியானவர்கள்,கட்சி சிபாரிசிலே அரசு வழிக்க வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டவர்கள்,இவர்களுக்கு சட்டத்தின் நிபுணத்துவம் மிக மிகக் குறைவு தான். அதனால் தான்,உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் மெரிட்டில் சட்ட நிபுணர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில் வலியுறுத்துகிறது.

இப்படிப்பட்ட சட்ட சிக்கல்களை,முரண்பாடான தீர்ப்புகளை வழங்கி, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான தீர்ப்புகளையும், அளித்து சட்டத்தின் மாண்பை குறைத்து விடுகிறார்கள்.
எனவே, நீதிமன்றங்கள் வருங்காலத்தில் ஆவது இது போன்ற அரசியல் கட்சிகளின் சிபாரிசுகளை நீதிபதிகள் நியமனத்தில் இருக்கக் கூடாது. அப்படி இருந்ததால் தான் வீரமணி போன்ற ஆட்கள் எல்லாம் நீதித்துறையை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். மேலும் அவர் கூறுவது,

துணை வேந்தரை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கியதை எதிர்த்து,தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக கி.வீரமணி விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.அதில்,
உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தை எதிர்த்து, அவசர வழக்காக எடுத்து விசாரிப்பதுடன், தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.
அதுவும், விடுமுறை காலத்தில் விரைவுபடுத்த வேண்டிய அவசியம் என்ற கேள்வி? கி.வீரமணி, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, உயர்நீதிமன்ற அமர்வு தவறு என்று கூற முடியுமா? இரு வாரத்திற்குள் ஏதாவது தடையாணை போன்று வழங்கலாமா? என்று கருதும் திட்டமோ, என்ற நியாயமான சந்தேகம் எழவே செய்கிறது” என்று கேள்வி?