தமிழ்நாட்டில் தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் பாயும் – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram

நாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியிருப்பு நல சங்கங்கள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள்,தொழிற் சங்கங்கள், கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாக தகவல் வெளிவந்து.

 அது உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்திருந்தார் . மேலும், தேசிய கொடி ஏற்றும் போது காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வழக்கறிஞர் விடுத்திருந்தார்.

 அதற்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுத்தால், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். 

மேலும். தேசியக்கொடி ஏற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் என்றும், கொடியேற்றுவதை யாரும் தடுக்க முடியாது என்றும், அப்படி தடுப்போர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க விட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *