
இந்தியாவுக்கு கள்ள நோட்டும் கருப்பு பணமும் ஏழை நடுத்தர மக்களை பாதிக்கக்கூடிய கொரோனா வைரஸ் விட மிகக் கொடுமையானது.
ஏனென்றால்,அதைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தான் தெரியும். கருப்பு பணம், அரசியலில் ஊழல் செய்த பணத்தை கணக்கு காட்டாமல் பதுக்க வைக்கும் பணம் தான், கருப்பு பணம். அது சுயநலத்தின் பேராசை, அரசியலில் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி பணத்தை தனக்கும், தன் குடும்பத்திற்கும்,சேர்த்து வைக்கக்கூடிய இந்த கருப்பு பணம், வெளிநாடுகளில் முதலீடாக பல கம்பெனிகளில் கொண்டு போய் சேர்க்கிறார்கள்.

பிறகு அதுவே, இங்கே கொண்டு வருகிறார்கள். இது தவிர,இந்த நாட்டில் கருப்பு பணம்,ரியல் எஸ்டேட்,கன்ஸ்ட்ரக்சன், சினிமா, பைனான்ஸ்,பத்திரிக்கை, தொலைக்காட்சி, போன்ற துறைகளில் இந்த கருப்பு பணம் வெள்ளை ஆக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட பிளாக் மணியை வைத்துக்கொண்டு பத்திரிகையும்,தொலைக்காட்சியும், நடத்தக்கூடிய பத்திரிக்கை,தொலைக்காட்சியின் தகுதி,தரம்,எப்படி இருக்கும் என்று நாட்டு மக்கள் தான் சிந்திக்க வேண்டும்?

100 கோடி,200 கோடி,500 கோடி, முதலீடு பெரிய பத்திரிக்கை,தொலைக்காட்சி நிறுவனமாக இருக்கலாம். அதனால்,மக்களுக்கு என்ன பயன்? ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக, அல்லது ஆட்சியாளர்களின் ஆதரவாக, இவர்கள் செயல்படும்போது, மக்களுக்கான பொது நலன் கேள்விக்குறியாகிறது?அப்படி இருந்தால் தான் அரசு சலுகை,விளம்பரங்கள் கிடைக்கிறது என்று மக்களுடைய வரிப்பணத்தில் இன்று வரை மக்களுக்கு அரசியல் என்றால் என்ன?என்று தெரியாமல், புரியாமல், முட்டாளாக்கி மக்களை ஏமாற்றி வியாபாரம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,சந்திரபாபு நாயுடு நாட்டில் 500 ரூபாய் நோட்டு கருப்பு பணம் மட்டுமல்ல,கள்ள நோட்டுகளும் இருக்கலாம் என்ற ஒரு கருத்து அதிக அளவில் இருக்கிறது. இந்த கருப்பு பணமும், கள்ள நோட்டும், நாட்டில் நேர்மையான அரசியலை உருவாக்காது. அதனால், மீண்டும் பணமதிப்பிழப்பீடு கொண்டு வருவது, மத்திய அரசுக்கு அவர் வைத்த ஒரு முக்கிய கோரிக்கை.

அது மட்டுமல்ல, அவர்,டிஜிட்டல் கரன்சி திட்டம் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.அது பண பரிமாற்றம் இல்லாமல்,ஆன்லைன் மூலம் இந்த பரிவர்த்தனைகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கிறார். அது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. அப்படி டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையில் எல்லாமே கொண்டு வந்தால் ஒருவருடைய வருமானம் எவ்வளவு செலவு எவ்வளவு என்று வெளிப்படையாக தெரியும். வரி ஏய்ப்புக்கு வேலையில்லை. கள்ள நோட்டுக்கு வேலையில்லை. மக்கள் சட்டத்தை ஏமாற்ற முடியாது.

அரசியல்வாதிகள் சட்டத்தை ஏமாற்ற முடியாது.ஆட்சியாளர்கள் சட்டத்தை ஏமாற்ற முடியாது. உழைக்காமல் அரசியலில் கொள்ளை அடிக்க முடியாது. இவ்வளவு நன்மைகள் இந்த டிஜிட்டல் கரன்சி திட்டத்தில் இருக்கிறது.
இந்த டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை கொண்டு வந்தால் நாட்டில் கருப்பு பணத்திற்கு வேலை இல்லை, கள்ள நோட்டுக்கு வேலையில்லை,ஊழலுக்கும் வேலையில்லை, பிளாக் மணியால் அரசியல் கட்சிகள் நடத்த முடியாது. தவிர,நீதிமன்றங்களில் இவ்வளவு ஊழல் வழக்குகள், வராது. அதற்கு சட்டத்தின் காலத்தை நீதிமன்றங்களில் வீணடிக்க தேவையில்லை.மேலும்,
மக்களுக்கு பல பயன்கள், நன்மைகள் இதன் மூலம் கிடைக்கும். அதனால்தான், சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

பிரதமர் மோடி, இதை நாட்டு மக்கள் நலன் கருதி அவசியம் கொண்டு வர வேண்டும். மேலும், நாட்டில்
கருப்பு பணத்தை ஒழித்தாலே ஹவாலப் பண மோசடிகள் ஒழித்து விடும். குற்றம், குறைகள், மோசடிகள், வன்முறைகள் மக்களிடம் தானாகவே குறையும். உழைப்பை நம்பி மக்கள் வாழ ஆரம்பிப்பார்கள். அரசியல் என்பது கொள்ளையடிக்கும் திட்டத்திலிருந்து நேர்மையான,நல்லாட்சி மக்களுக்கு கிடைக்கும். இவை அத்தனைக்கும் முக்கிய காரணம், இந்த பிளாக் மணி.

கருப்பு பணத்தை ஒழித்தால், நாட்டில் தகுதியானவர்கள் மட்டுமே,நேர்மையானவர்கள் மட்டுமே,அரசியலில் நிற்க முடியும்.வர முடியும். இதுதான் மக்களாட்சி. இதுதான் மக்களின் எண்ணம்.