நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் ,கோவை சரவணம்பட்டி சமஷ்டி சர்வதேச பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் ரிசன்ட் போஸ்ட் விளையாட்டு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு இப்பள்ளியில் தனியார் சர்வதேச பள்ளி ஒன்றில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில், மாணவ மாணவிகள் சிறப்புடன் செயல்பட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும்,பள்ளியின் முதல்வர் தீபா தேவி தலைமையில் நடைபெற்ற விழாவில் அதன் நிர்வாக இயக்குநர்கள் நவீன் மேதா,மீரா பந்தாரி அரோரா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றதோடு,தொடர்ந்து பள்ளி சிறுவர் சிறுமியர் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

சிறப்பு விருந்தினர்களுக்கு அணி வகுப்பு மரியாதையில் தடை ஓட்டம்,ஓட்ட பந்தயம் என நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாணவ மாணவியர் சிறப்புடன் தங்களது திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *