நாட்டில் அரசியல் கட்சி! மற்றும் கட்சியினரின் தகுதியை மக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டால்! தகுதியற்ற அரசியல் கட்சி கூட்டம் காணாமல் போய்விடும்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் அரசியல் கட்சிகள் மக்கள் பிரச்சனைகளையும், மக்களின் தேவைகளையும், கேட்டு எந்த பொதுக்குழுவோ,செயற்குழுவோ கூடவில்லை.

ஆனால், இன்றுbகட்சிக்கு உதவாத கூட்டங்களை கூட்டி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் தான் அதிகம். மேலும்,
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் என்றால், தன்னுடைய தேவைக்கு கட்சியாக்கிவிட்டார்கள். அதாவது,

தன்னுடைய பதவிக்கு, அதிகாரத்திற்கு, சுயநலத்திற்கு இன்றைய அரசியல் கட்சிகள் செயல்படுவதால், மக்கள் இந்த அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். இதற்கு காரணம் கட்சி என்பதே இவர்களுடைய வருமானத்தை பார்த்துக் கொள்ளவும்,பதவிக்கு வந்து கோடிகளை பார்க்கவும், ஒரு பத்து தலைமுறைக்கு சொத்துக்களை சேர்த்துக் கொள்ளவும்,இருக்கிற ஒரு வாய்ப்பாக நினைத்துக் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு காரணம் மக்களுக்கு அரசியல் என்றால் என்ன?அரசியல் கட்சி என்றால் என்ன? எதுவுமே தெரியாது. இது தெரியாத இருக்கும் வரை, நாட்டில் இப்படிப்பட்ட அடியாள் கூட்டத்தை எல்லாம் தொண்டன் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். இந்த அடியாள் கூட்டத்தை சமூக சேவக தொண்டனாக பல பத்திரிகை தொலைக்காட்சிகள் மக்களிடம் இதுதான் அரசியல் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனையோ பத்திரிக்கைகள் தொலைக்காட்சிகள் தன்னை பெரிய பத்திரிக்கையாக காட்டிக்கொண்டாலும் எந்த உண்மை மக்களுக்கு போய் சேர வேண்டுமோ அது இன்றும் சேர்க்காமல் தான் அடித்தட்டு மக்களுக்கு இருந்து வருகிறது. அவர்களுக்கு இதுதான் அரசியல்! இதுதான் கட்சி என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது இந்த அரசியல் கட்சியினர் தண்ணி வரவில்லை என்றால் லைட் எரியவில்லை என்றால் அந்த நேரத்தில் காட்டும் பந்தவை பார்த்து, இன்றும் மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏதோ ஒரு பெரிய வேலையை சாதித்தது போல அந்த மக்களிடம் அரசியல் பந்தா காட்டினால், அந்தப் பகுதி மக்களோ அல்லது கிராம மக்களோ இதுதான் அரசியல் சேவகன் என்று ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அடித்தட்டு மக்கள் அவர்கள் குடும்பத்தின் இழப்புகளுக்கும் சுப காரியங்களுக்கும் இன்று மொழி எழுதி விட்டால் அவரை கொண்டாடுகிறார்கள்.

மக்கள் இப்படி அரசியல் தெரியாமல் ஏமாறும் வரை தமிழ்நாட்டில் அவர்கள் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்ப்பது தான் அரசியலில் அவர்களுடைய லட்சியமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஐம்பது சதவீதத்திற்கு கூட தியாகத்தை செய்யாத ஒருவர் இன்று சேவாக்களாகவும் தியாகியாகவும் அரசியல் கட்சி பந்தா காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட கொடுமை பல அரசியல் கட்சிகள் இன்று,

தொண்டனுக்கும், அடியாளுக்கும் வித்தியாசம் தெரியாமல் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றி பொய்யான செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது தொண்டன் என்றால் அந்த பகுதி மக்களுக்காவது நல்லது செய்து இருக்க வேண்டும் இல்லை ஒரு சமூக சேவகராகவாவது இருக்க வேண்டும் எதுவுமே இல்லாமல் அடியாட்களுக்கு தகுதியானவர்களை கொண்டு வந்து கொண்டு வந்து காட்டி கட்சி என்று அந்த பகுதியில் இவருடைய போட்டோக்களை டிஜிட்டல் பேனர் வைத்து அல்லது போஸ்டர் அடித்து மக்களிடம் விளம்பரப்படுத்துவது தொண்டனாகி விட முடியுமா?

இது எப்படி இருக்கிறது என்றால், இன்றைய பத்திரிகைகளில் செய்தி எழுதத் தெரியாதவர்கள், அந்த பத்திரிக்கை,அது எங்கே என்று மக்கள் தேடும் அளவில் இருக்கும்போது கூட,

அந்த பத்திரிகைகளுக்கு நிருபர்களை போட்டு, அந்த நிருபர்கள் மூலமாக வசூல் செய்து, பத்திரிகை என்று ஓட்டிக் கொண்டிருக்கும் கூட்டம் போல, நானும் நிருபர், நானும் பிரஸ் அதுதான்,இந்த தொண்டனுக்கும்,அடியாளுக்கும் உள்ள வித்தியாசம் அதுதான்.

மேலும், மக்கள் கட்சி என்பது ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும்,அதற்கான தகுதி அவர்களிடம் இருக்கிறதா?என்பதை இந்த உண்மைகளை எல்லாம் படித்துப் பார்த்து தெரிந்து செயல்பட்டால், நிச்சயம் அரசியல் கட்சிகள் தகுதியானது மட்டும்தான் நிலைத்து நிற்க முடியும்.தகுதியற்றவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

நாட்டில் தகுதியான அரசியல் கட்சிகள்,அரசியல் கட்சியினருக்கு வாய்ப்பளித்தால் அது மக்களின் முன்னேற்றமாகவும் நாட்டின் முன்னேற்றமாகவும் சமூகத்தின் முன்னேற்றமாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பணத்தைக் கொண்டு வந்து கொடுக்கும்போதும்,இலவசத்தை கொண்டு வந்து கொடுக்கும் போது, தகுதி என்பது அங்கே அடிபட்டு போய் விடுகிறது.. தகுதியானவர்கள் எதற்காக பணத்தை கொடுப்பார்கள்? ஏன் கொடுப்பார்கள்?என்பதை மக்கள் சிந்திப்பார்களா? மக்கள் சிந்தித்து வாக்களித்தால், ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப முடியும். ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்த முடியும். மக்கள் செய்யும் தவறு மக்கள் தலையிலே! மக்கள் ஒரு முறைக்கு 100 முறை சிந்தியுங்கள்.

மேலும்,தகுதியான அரசியல் கட்சியினரும், தகுதியான அரசியல் கட்சிகளும், ஒருபோதும் பணத்தை கொடுக்காது. அவர்களுடைய உழைப்பை கொடுத்தால் போதும்,அவர்களுடைய தியாகத்தை கொடுத்தால் போதும். இது பற்றி தமிழக மக்களும், இளைய தலைமுறைகளும், மாணவ சமுதாயமும் சிந்திக்குமா?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *