படைவீரர்களுக்கு சென்னை படைப்பாளிகள் சங்கம் பாராட்டு விழா !

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

படைப்பாளிகளின் வாழ்க்கைத் தோல்வியை வெற்றியாக்கும் போது தான், படைப்பாளிகளின் படைப்பு,திறமை உலகிற்கு தெரிய வரும்..

இந்தப் படைப்பாளி சங்கத்தில் சினிமா கதாசிரியர், எழுத்தாளர்கள், பதிப்பக வெளியீட்டாளர்கள்,வந்திருந்தார்கள்.

மேலும்,படைப்பாளியின் மனம் விரிந்தது. இது காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. திரைத்துறை எம்ஜிஆர்,சிவாஜி காலத்தில் இருந்த கலையின் ரசனை, ரஜினி,கமல் படங்களில் 2 கட்டமாகத் தான் தெரிகிறது.

எம்ஜிஆர், சிவாஜி கலை உலகில் அவர்களின் நடிப்பு,அவர்களுக்காக எழுதப்பட்ட பாடல்கள்,திரைக்கதை, வசனம்,அத்தனையுமே 60 ஆண்டுகளுக்கு மேலாகியும்,இன்றும் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது.

இன்றைய திரைத்துறை தற்போது அந்தப் படங்களை எல்லாம் ரசிக்கும்படியாகவே இல்லை. அந்த காலம் படங்களில் உயிரோட்டம் இருந்தது.உண்மை இருந்தது.

இப்போது காலத்திற்கு ஏற்ப மாறுபாடுகள் இருந்தாலும்,ஏதோ ஒரு சில படங்களில் மட்டும் தான்,அந்த உயிரோட்டம் அந்தப் படங்களில் தெரிகிறது. நான் இன்றைய திரைப்படங்களை பார்ப்பதும் இல்லை.

ஏனென்றால், எனக்கு அதன் மீது ஈர்ப்பு இல்லை..கலை என்றாலே ஒரு ஈர்ப்பு இருக்க வேண்டும். அந்த ஈர்ப்பு இன்றைய திரைப்படங்கள், மக்கள் ஹோட்டல் உணவு போல எதை தயாரித்தாலும், எதைப் போட்டாலும், அவர்கள் ருசித்து சாப்பிடுகிறார்களா ? இல்லை,பசிக்காக எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. மேலும்,

நான் பல இடங்களுக்கு சென்று இருக்கிறேன்.பல ஓட்டல்களில் உணவு அருந்தி இருக்கிறேன். நேற்றைய படைப்பாளிகள் சங்கத்தின் விருந்து ஹோட்டல் ரமடா பிளாசாவில் மிக,மிக அருமையாக இருந்தது. இதை ஏன்?சொல்ல வருகிறேன் என்றால்,நானும் படைப்பாளியாக சில காலம் திரைத்துறைக்கு வந்து, இன்று பத்திரிக்கையாளனாக என்னுடைய அங்கீகாரம் அங்கே நிற்கிறது.மேலும்,

காலம் தான் படைப்பாளியின் படைப்பை தீர்மானிக்கிறது. எத்தனையோ படைப்பாளிகள் வெளியில் தெரியாமல்,அவர்களுடைய திறமை வெளிவராமல் போய்விடுகிறது. காலம் அந்த வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே,படைப்பாளியின் படைப்பு உலகுக்கு தெரியவரும்.

அப்படிப்பட்ட ஒரு படைப்பு சமுதாயம் படை வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தியது, மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அங்கே பத்திரிக்கையாளர்கள் யாரும் வரவில்லை. நான் ஒருவன் தான் பத்திரிகையாளனாக அங்கே சென்று இருக்கிறேன். அந்த வாய்ப்பை ஒரே நாடு பத்திரிகை ஆசிரியர் நம்பி நராயணன் எனக்கு கொடுத்ததற்கு நன்றி. இதற்கு முக்கிய காரணமாக இருந்த நண்பர் முன்னாள் மத்திய பத்திரிக்கை துறையின் (PIB) இணை இயக்குனர் மாரியப்பன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.மேலும்,

இந்தப் படைப்பு சமூகம் பல கருத்துக்களை வெளிப்படுத்தியது,அதில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியாரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.மேலும்,அவருடைய தலைமையை ஏற்று இந்த படைப்பாளர்கள் சமூகம்,இந்த பாராட்டு விழாவை நடத்தியது.

இதில் எனக்கு இவர்களுடைய அறிமுகம் அதிகம் இல்லை என்றாலும், இந்த படைப்பாளிகளின் உணர்வு நன்றாக தெரிந்தது.அவர்கள் இந்த தேசத்திற்காக அவர்களுடைய படைப்பு வெளிப்பட்டது. இவர்கள் இந்த தேச உணர்வாளர்களாக இருக்கிறார்கள். ஆப்ரேஷன் சிந்தூர் நாட்டு மக்களிடையே எப்படிப்பட்ட தாக்கத்தை அது ஏற்படுத்தியது? தமிழ்நாட்டில் உள்ள பிரிவினைவாத அரசியல் கட்சிகள் என்ன பேசினார்கள்?என்பதை எல்லாம் அவர்களுடைய உணர்வு வெளிப்பட்டது.மேலும்,

இந்த படைப்பாளிகள் சமூகம் என்ன? கருத்தை வெளிப்படுத்தியதோ, அதே கருத்தை தான் மக்கள் அதிகாரத்தில் இந்த ஆப்ரேஷன் சிந்தூர் ஆரம்பித்த நாள் முதல், தொடர்ந்து இந்த பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வந்த பத்திரிகைகளில் மக்கள் அதிகாரமும் ஒன்று.

இது தவிர ,எந்தெந்த பத்திரிகைகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது?அல்லது அதற்கு மறைமுக ஆதரவு கொடுத்து செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளையும் எதிர்த்து செய்திகளை,வெளியிட்ட பத்திரிகை மக்கள் அதிகாரம். இதை செய்திகளை இல்லை என்று நான் மறுக்க முடியாது என்னுடைய இணையதளத்தில் சென்று பார்த்தல், தங்களுக்கு அது புரியும்.

நான் திருமாவளவன், சீமானையும் NIA விசாரிக்க வேண்டும் என்று சொல்லி எழுதி இருக்கிறேன் . தவிர, மத்திய அரசு இந்த தேசத்தை காப்பாற்றக்கூடிய நேரத்தில் கூட,மக்கள் அதற்கு ஆதரவாக பேசினார்கள்.ஆனால் சில அரசியல் கட்சிகள்,முஸ்லிம் மதவாத சக்திகள்,காங்கிரஸ்,திமுக போன்ற நாட்டின் எதிர்க்கட்சிகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள்.

என்ன அநியாயம்? நமக்காக இந்த படை வீரர்கள், அவர்களுடைய உயிரை பணையம் வைத்து போரில் ஈடுபடுகிறார்கள்.. இந்த நிலையில், நாட்டையும்,இந்த நாட்டு மண்ணையும்,காப்பாற்ற தங்கள் உயிரை பணையம் வைக்கிறார்கள்.அப்படிப்பட்ட தியாக உள்ளத்திற்கு மனசாட்சி உள்ளவர்கள் எதிரான கருத்தை பேச முடியுமா?

அரசியல் கட்சி என்பது தமிழ்நாட்டில் வெத்து வெட்டு கூட்டம் எல்லாம் சேர்ந்துக் கொண்டு,கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கட்சிக்கும் அர்த்தம் தெரியாது அரசியலுக்கும் அர்த்தம் தெரியாது.

ஆனால், அவர்களெல்லாம்,ரவுடிசம் தான் அரசியல் என்று ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இன்றைய அரசியல் கட்சிகள் கூட்டத்திற்கு ஆட்களை கொண்டு வந்து மாநாடு நடத்துகிறார்கள். பாவம் கூலி வேலைக்கு செல்பவர்கள், அன்றைய பொழுது போனால் போதும் என்று ,இவர்கள் கொடுக்கும் கூலிக்கும் ,சாப்பாட்டுக்கும் வண்டிகளில் ஏறி வருகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு இந்த தேசத்தின் அருமை எப்படி தெரியும்? மேலும்:,இந்த தேசத்திற்காக,உண்மையாக தியாகம் செய்யக்கூடிய அந்த ராணுவ வீரர்களின் உணர்வு என்ன என்று தெரியுமா? அவர்களும் குடும்ப உறவுகளை விட்டுவிட்டு தங்களுடைய ஆசா, பாசங்களை விட்டு,விட்டு இந்த நாட்டை காக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இருக்கக்கூடிய அவர்களின் தியாகம் நாட்டு மக்களால் ஈடு செய்ய முடியுமா?

இப்படி ஈடு செய்ய முடியாத ராணுவ வீரர்களின் தியாகத்தை தமிழ்நாட்டின் தூண்டு அரசியல் கட்சிகள் மற்றும் பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாத ஒரு கூட்டங்கள்,அவர்களை கொச்சைப்படுத்தலாமா? இவர்களையே மதிக்கத் தெரியாத நீங்கள், இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், என்ன செய்வீர்கள்? மேலும்,

இன்றைய காலகட்டத்தில் பத்திரிக்கை என்றால் என்ன?என்று தெரியாதவன் எல்லாம் பத்திரிகை என்று சொல்லிக் கொண்டிருப்பது போல, இவர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது எப்படி என்றால்,ஐடி கார்டு இருந்தால் நான் ஒரு பத்திரிக்கையாளர். அப்படித்தான் ஒரு ஆட்டோ ஓட்டுனர், ஆட்டோவில் பயணித்த போது,நானும் பத்திரிக்கை என்று சொன்னார். அவருடைய ஐடி கார்டையும் காண்பித்தார். அதை அவர் 3000 கொடுத்து அந்த ஐடி கார்டை வாங்கி உள்ளார்.மேலும்,

இப்படி தகுதியற்றவர்கள் பத்திரிக்கை என்று சொல்வது போல, இவர்களும் கட்சிக்காரன், அரசியல்வாதி என்று சொல்லிக் கொண்டு,நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய தகுதி அடியாட்களுக்கு ஆன தகுதி. மேலும்,அரசியல்வாதிக்கான தகுதி என்றால், என்ன தியாகம் செய்தார்கள்?சமூகத்தில் இவர்களுடைய பங்களிப்பு என்ன? அவன் தான் அரசியல்வாதி.

அடியாட்களுக்கு தகுதியானவர்கள் எல்லாம் அரசியல் கட்சி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் மக்களுக்கு அரசியல் தெரியாது. அது இவர்களுக்கு சாதகம் தானே. இதை பலமுறை மக்கள் அதிகாரத்தில் நான் எழுதி இருக்கிறேன்.

மேலும் படைப்பாளர்கள் சங்கம் படை வீரர்களுக்கு சிறப்பான முறையில் கௌரவித்து,பொன்னாடை போர்த்தி,,விருதுகளை கொடுத்தார்கள். அது படை வீரர்களின் தியாகத்திற்கு, இந்த படைப்பாளிகள் சமூகம் நன்றியும்,பாராட்டும் தெரிவித்து,கௌரவித்தது. இந்த i சிறப்பான முறையில் நடத்தி முடித்த பெருமைக்கும், பாராட்டுக்கும் உரியவர் தடாக மலர் பதிப்பக உரிமையாளர் ஜவகர் வெங்கடசாமி.மேலும், இந்த விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட

அனைவருக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் எமது மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றியும் தேச உணர்வாளர்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

மேலும்,இதுபோன்ற தேச உணர்வாளர்கள் மேடையிலே ஒருவர் பேசினார்.நம் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அது வாக்காக மாற வேண்டும் என்றார்.

மத்திய அரசு அதற்கு வாய்ப்பு கொடுத்தால், படைப்பாளிகள் சங்கமும், பத்திரிகையாளர்கள் சங்கமும்,இணைந்து, உண்மையின் எதார்த்த மக்களுக்கு புரிய வைத்து, அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு கொடுத்து, தேசத்தின் ஒற்றுமையே வளமான, வலிமையான பாரதம்.

ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *