பணத்திற்காக சொந்த கணவனையே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய வைத்து, பணம் பறிக்கும் வேலை எவ்வளவு கொடுமையானது ?

அரசியல் இந்தியா சமூகம் தேசிய செய்தி பிரபலமான செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூலை 28, 2024 • Makkal Adhikaram

செல்போன் ,இணையதளம் ,whatsapp, facebook இதை வைத்து ஒரு பக்கம் ஏமாற்றுகிற கும்பல் என்றால், மறுபக்கம் கஞ்சா, போதை இதையெல்லாம் கொடுத்து ஒரு பெண்ணை நட்பாக்கி ,அவளையே தன் கணவனுக்கு விருந்தாக்கி, அதை வீடியோ எடுத்து அந்தப் பெண்ணிடம் காட்டி, பணம் பறிக்கும் நிலைமை, நாடு எந்த அளவுக்கு பணத்திற்காக மக்களின் எண்ணம் தரம் தாழ்ந்து விட்டது என்பது இச்செயலின் மிகப்பெரிய கொடுமை.

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் வயது 23 இவர் சட்டக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருடன் படிக்கும் பிரணவ் கிருஷ்ணா (வயது 35 )இவருடன் நட்பு ஏற்பட்டு, இருவரும் தோழிகளாக இருந்து வரும் நிலையில், இளம்பெண் ,பிரணவ் கிருஷ்ணா வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது .

அப்படி சென்று வரும் போது பிரணவ் கிருஷ்ணாவின் வீட்டில் இந்த இளம் பெண்ணுக்கு பிரியாணி ,கஞ்சா கொடுத்து வந்துள்ளனர். இந்த பெண் மயக்கமான நிலையில், இந்தப் பெண்ணை தன் கணவரை வைத்து பலாத்காரம் செய்ய அதை வீடியோ எடுத்து, அந்தப் பெண்ணை மிரட்டி பணம் கேட்டுள்ளனர் .அவ்வளவு தொகை என்னிடம் இல்லை என்று அந்த பெண் சொன்னதும், அவளுடைய குடும்பத்திற்கு அந்த வீடியோவை அனுப்பி, மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர்கள் கொடுக்க முடியாத சூழ்நிலையில் காவல்துறையில் புகார் செய்ய இருவரையும் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *