போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.55,000/- அபராதமும் பெற்றுத் தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நத்தம் N.கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி செல்வம்(26) என்பவரை நத்தம் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின் படி நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.தங்க முனியசாமி அவர்கள், நீதிமன்ற இரண்டாம் நிலை காவலர் திருமதி.கவிதா அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி. மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் (20.09.2024) இன்று திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாள
குற்றவாளி பாண்டி செல்வம் என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய மூன்று ஆண்டுகள் சிறை தண்டனைமற்றும் 55 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *