மார்ச் 16, 2025 • Makkal Adhikaram

போளூரில் வசிக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைகளின் வீடுகளுக்கு 50 வருடமாகியும், பட்டா வழங்காமல், வினோத் குமார்( ஜெயின் ஜுவல்லரிக்கு ) பட்டா வழங்கிய வட்டாட்சியர் வெங்கடேசன் ,அதுவும் நகரின் மையப் பகுதியில் சிந்தாதிரிப்பேட்டை தெரு புல எண் : 1389/12 ல், மேற்படி புல எண் 1389/12, அரசின் பொது வழியை பட்டா வழங்க வேண்டிய அவசியம் என்ன? என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுந்துள்ளனர்.
மேலும், அவர்கள் தெரிவிக்கும் கருத்து என்னவென்றால்? அரசு பொது வழியை எப்படி வட்டாட்சியர் பட்டா வழங்கியுள்ளார்? அந்த இடம் கோடிக்கணக்கான மதிப்பீட்டில் உள்ள பொது இடம், இப்படிப்பட்ட இடத்தை இந்த வினோத்குமார் ஜெயினுக்கு பட்டா வழங்கிய காரணம் என்ன? அதற்காக எவ்வளவு பணம் கை மாறி உள்ளது?

மேற்படி பட்டா குறித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மேற்படி பட்டாவை ரத்து செய்து, மேற்படி பொது இடத்தை அரசின் பயன்பாட்டிற்கும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி போஸ்டரே அடித்து மக்களின் கவனத்திற்கு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் செய்தி தமிழக அரசின் கவனத்திற்கும், மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும், உடனடி நடவடிக்கை தேவை என்பதே போளூர் பொதுமக்களின் முக்கிய வேண்டுகோள்.