ஜூன் 01, 2025 • Makkal Adhikaram

இந்து மதம் இறப்புக்குப் பின் அதனதன் கர்மாவுக்கு தகுந்தவாறு அதன் நிலை. அதாவது மனித வாழ்க்கையில் இறந்த பிறகு ஆத்மா! அது எங்கே செல்கிறது? ஆத்மா அழிவற்றது.அதனுடைய நிலை என்ன? மரணம் எல்லோருக்கும் இறுதியானது. அதில் ஒன்றும் மாற்றமே இல்லை.
அப்படி இருக்கும்போது, இந்த மனித உடல்! அது இறந்த பிறகு,ஆன்மா எங்கு செல்கிறது ?அதனுடைய செயல்பாடு என்ன? இது ஒரு மிக முக்கியமான, அவசியமான தெரிந்து கொள்ளக்கூடிய உண்மை.

இந்த உண்மையும் அறிந்து கொள்வதற்கு அல்லது தெரிந்து கொள்வதற்கு ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் இதை உணர முடியாது. சொன்னாலும் அது புரியாது. அலட்சியமாக நினைக்கத் தோன்றும். இது எப்படி என்றால்? ஒரு மனிதன் பிறந்தது முதல், அவன் செய்யும் நற்காரியங்கள்!ஒரு மனிதன் பிறந்தது முதல் அவன் செய்யக்கூடிய பாவக் காரியங்கள்! இது எதுவும் தெரியாமல் பதவி, அதிகாரம், சொத்து சுகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு கூட்டம் தான், இறந்த பிறகு அவனுடைய நிலை என்ன? என்பது அவனுக்கே தெரியாது. இதுதான் அவர்களின் நிலை.

ஆனால், இந்த பூமியில் நாம் எதற்காக பிறந்தோம்? எதற்காக வாழ்கின்றோம்? இறந்த பிறகு நம்முடைய நிலை என்னவாக இருக்கும்? என்பதை தீர்மானிக்கக்கூடிய ஒரு ஆற்றல் ஆன்மாவுக்கு இருக்கிறது. அதுதான் நல்ல கர்மாவும், கெட்ட கர்மாவும் அதை தீர்மானிக்கிறது. கர்மாவை மீறி யாரும் எதுவும் செய்து விட முடியாது. அது அங்கே வந்து நின்று கொண்டு, அதுதான் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒருவன் அரசியலிலோ, ஆன்மீகத்திலோ, பத்திரிகையிலோ, சினிமாவிலோ, புகழ் ,பணம் சம்பாதித்து பெருமை அடைகிறான், சந்தோஷம் கொள்கிறான். கல்வியால் உயர் வேலைக்குச் சென்று கௌரவம், பணமும், பதவியும் அடைகிறான். இது அத்தனையுமே, ஒருவனுக்கு தீர்மானிக்கப்பட்ட கர்மா.

பிறக்கும்போது ஒருவன் கொண்டு வந்த நல்வினை தீவினை பயன்களின் கர்மா. அதுதான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அதன் பிறகு இவன் ஒவ்வொரு செயலுக்கும், இறுதி வடிவத்தின் பலன் நல்லதோ, கெட்டதோ அது தீர்மானிக்கிறது. இப்படிப்பட்ட கர்மா+ (பிளஸ்) வினை சேர்ந்து, அது உயிர்களுக்கு நல்லதா? கெட்டதா? என்பதை பொறுத்து, இதன் இறுதி தீர்ப்பு. தான் பாவகர்மாவும், புண்ணிய கர்மாவும், மனிதன் இறந்த பிறகு, இந்த உலகத்தில் உறவுகளின் பந்தங்களை பிரியும்போது, அது வேதனையிலும், துக்கத்திலும் ஆழ்ந்திருக்கிறது.

அப்போது தன்னுடைய உறவுகளின் வேதனைகளை அவர்களிடம் சொல்லி புரிய வைக்க முயற்சித்தாலும், அது அவர்களால் முடியாது. ஆனால், மகான்கள், சித்தர்கள் அவர்களால் அது முடியும். அது அழிவற்ற ஆன்மா நிலை அடைகிறது. அவர்கள் தன்னை உணர்ந்து தெய்வ நிலை அடைந்தவர்கள். இந்த நிலை அடைவதற்கு தான் மனித பிறப்பு தேவை என்பது ஒவ்வொரு பிறவியிலும், அதற்காகத்தான் பிறவி எடுத்து இந்த பூமியில் பிறக்கிறோம். ஆனால், அது ஏமாற்ற நிலையாகவே அவரவர் வினையும், கர்மாவும், அவர்களை அழைத்துச் செல்கிறது.

அதிலும் கெட்ட கர்மாவை செய்தவர்கள் எமலோகத்தில், அவர்களுடைய தண்டனை மோசமானது. உலகத்தில் எத்தனை விஞ்ஞானங்கள், மனிதனுக்கு சுகங்களை கொடுத்தாலும், அந்த சுகங்கள் நிரந்தரமானது அல்ல. நிலையானதும் அல்ல. நிலைத்திருக்கக் கூடியது தெய்வத்தின் அருள் நிலையே. இது அடைவது என்பது பல பிறவிகளில் புண்ணியம் செய்து, நல்ல கர்மாக்கள் செய்து, தான தர்மங்கள் செய்து, இறை சிந்தனையில் வாழ்பவர்களுக்கு மட்டும்தான், அவர்களுடைய ஆத்மா தெய்வ நிலை அடைய முடியும். அல்லது தெய்வங்கள் வாழக்கூடிய பகுதியில் இந்த ஆத்மா சென்றடையும்.

மீதி எல்லாம் செய்த கர்மாவின் கணக்கிற்கு தகுந்தபடி எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், எவ்வளவு சொத்து, சுகங்கள் அனுபவித்தாலும், அதை எல்லாம் இங்கே அவர்கள் செய்த கர்மாவின் கணக்கின் அடிப்படையில் கணக்கு சேர்க்கப்பட்டு, அதற்கு தகுந்தவாறு அந்த ஆன்மா, பித்ருலோகங்களையும், எமலோகங்களையும், பூமியில் மிருகமாகவோ, அல்லது மனிதனாகவோ, மரம், செடி, கொடிகளாகவோ, அவர்களுடைய பிறவி தீர்மானிக்கிறது.
.jpg)
மனிதப் பிறவி ஒரு உயர்வான, உன்னதமான நிலையை அடைவதற்கு தான் மனித பிறவி, இந்தப் பிறவியில் நல்வினையும், நற்கருமாவும் செய்து, தெய்வ நிலையை அடையாமல், போகின்ற ஆத்மாக்களுக்கு இந்த பிறவி என்பது அவர்களுக்கு தோல்விதான்.
இதையெல்லாம் தெரிந்து கொள்ளவும், தெய்வ அருளும், புண்ணிய கர்மாவும் செய்து இருந்தால் மட்டுமே, இதையும் இந்த உண்மைகளை உணர்வதற்கு அறிவை ஆண்டவன் அவர்களுக்கு கொடுப்பான். கடவுளே இல்லை, அது கல், அவன் எங்கே இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? இது எல்லாம் அவர்களுடைய பாவ கணக்கில் இருக்கக்கூடிய கருத்துக்கள். அவன் எங்கே இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? என்பதை அறிவது தான் ஆண்டவன்.

இதைதான் ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும், மறைமுகமாக எழுதி வைத்துவிட்டு செல்கிறார்கள்.பூஜ்யத்துக்குள்ளே ஒரு! ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு, புரியாமலே இருப்பான், அவனை புரிந்து கொண்டால், அவன் தான் இறைவன். இது அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய கண்ணதாசனின் பாடல் வரிகள் .மேலும்,
அறிவால் அறிந்தவர்கள், அறிவைக் கொண்டு அறிய வேண்டியதை அறியாமல், அதுவும் உனக்கு அரசியல் என்றால்,பகுத்தறிவு முட்டாள்களுக்கு புரிய வைக்க முடியாது. உன்னுடைய பதவிபோதை, அதிகார போதை, சொத்து சுகபோதை, இதில் கடவுளை காண முடியாது.
ஒழுக்கம், தூய மனம், நல்ல சிந்தனை, நல்ல மனம் இதிலே தான் இறை சிந்தனை வருமே ஒழிய, இதற்கு எதிராக இருக்கக்கூடிய மனங்களில் இறை செய்தனை வராது. சுருக்கமாக சொன்னால், ஒரு நெல்லை கூட நல்ல நிலத்தில் உழுது விதைத்தால், அது நல்ல விளைச்சல் கிடைக்கும்.
ஆனால், அதுவே உவர் நிலத்தில் விதைத்தால்! அது பயனற்று போகும். அப்படிப்பட்ட மனிதர்களாக இருப்பவர்களுக்கு, அவர்களுடைய கர்மாவும், விணையும் இறை சிந்தனையை ஏற்படுத்தாது. விஞ்ஞானம் வேற, மெய்ஞானம் வேற, விஞ்ஞானம் அழியக்கூடியது. மெய்ஞானம் அழிவற்றது. இதற்கு அர்த்தம் தெரிந்தால், பகுத்தறிவு முட்டாள்களுக்கு உண்மை புரியும்.