மரணத்தை ஜெயித்தவன் எவனோ அவனே இந்த உலகின் வெற்றியாளன் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். ஆனால், இறப்பை வென்றவர்கள் ஞானிகள், சித்தர்கள், மகான்கள் இவர்களும் இந்த ஜீவத்தை தன்னுள் அடக்கி சமாதி நிலையை அடைகிறார்கள் .அதுதான் பிறவா பெருநிலை. இந்த நிலையை அடைவதற்கு பெரும் தவம் புரிந்து இருக்க வேண்டும். புண்ணியம் செய்திருக்க வேண்டும். இறைவனை யார் ஒருவர் தரிசனம் காண்கிறாரோ அவரே இந்நிலையை பெற முடியும் .

போலி சாமியார்கள் சுக வாழ்க்கையில் அல்லது போலி வாழ்க்கையில்  அந்த நிலையை அடைய முடியாது. பல சாமியார்கள் கோடீஸ்வரர்களாக ,சுகபோக வாழ்க்கையில் ,இறைவனை ஒருநாளும் அடைய முடியாது. ஆசைகளை துறந்தவர்கள் தான் ஆண்டவனை அடைய முடியும். ஆசைகளை துறந்தவர்கள் தான் ஞானங்களை பெற முடியும். ஞானங்களை பெற்றால் தான், இறைவனை அடைய முடியும். இது சாதாரண காரியம் அல்ல. வாழ்க்கை போராட்டத்தின் உச்சத்தில் வாழ்பவர்களுக்கு தான் ஞானம் கிடைக்கும். ஞானம் என்பது எளிதானது அல்ல.

 கல்வி வேறு, ஞானம் வேறு, ஒருவன் அடைந்த ஞானத்திற்கு, இறைவன் தான் அதற்கு மார்க்கு போட முடியும். மனிதன் போட முடியாது. அவன் போடும் மார்க் எவ்வளவு? என்று யாரும் பார்க்க முடியாது. இங்கே இந்த நிலையை அடைய யாரும் ஓட்டு போட தேவையில்லை. அவர்கள் போடும் ஓட்டும் செல்லாது .இறைவன் போட்டால் தான் ஓட்டு . இங்கே பணம் கொடுத்து வாங்கும் வாக்குகளை போல் வாங்கி, பதவிக்கு வர முடியாது . இந்த பதவி பல கோடிகளில் ஒருவருக்கு தான் அமையும் .

அப்படிப்பட்டவர்களுக்கு உணவு தேவையற்றது. ஆடம்பரம் தேவையற்றது. இந்த உலகில் எதுவும் விரும்பாத நிலையை ஒருவர் அடையும் போது, அதுதான் மகான்களின் நிலை. அந்த நிலை சாதாரணமாக கிடைக்காது .இங்கே பதவிக்காக பணத்திற்காக, போலி வாழ்க்கைக்காக, எத்தனையோ தவறுகள் செய்து கொண்டு, அதையெல்லாம் அரசியல் கட்சிகளிலும், பதவிகளிலும் மறைத்துக்கொண்டு, வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டம், பாவ கணக்கை அதிகப்படுத்திக் கொண்டு போய் சேருகிறது.

 இது தெரிந்தே செய்கிறார்கள். ஆனால், அவர்கள் சாகும்போது கூட, இந்த உண்மை தெரியாது. இந்த வாழ்க்கையில் எல்லாவற்றையும் ,ஒரு நாள் விட்டு விட்டு தான் செல்ல வேண்டும் .அதுதான் மரணம். மரணத்தைக் கண்டு பயப்படுபவர்கள் அல்லது தனக்கு இப்போது மரணம் வராது என்று நினைப்பதும் ஒரு அறியாமை தான் .இந்த கணக்கு ஆண்டவனின் கணக்கு. இதைப்பற்றி சமூக வலைதளத்தில் வெளியான ஒருவர் பதிவு செய்த வீடியோ  இதற்கு உதாரணமாக அது அமைகிறது. இந்த உண்மையை தெரிந்து கொள்வது மனித இனம். மனிதன் என்ற போர்வையில் மிருகங்கள் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவைகளும் இதைப் படித்தால் இறைவன் திருந்த கொடுக்கும் ஒரு வாய்ப்பு தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *