50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் வேப்பூர் கிராம மக்களின் இடம் எப்படி ஒரே நாளில் வகுப்பு வாரிய சொத்தாகும்?  அதற்கு திமுக எம்எல்ஏ காந்தி துணையா?

சமூகம் தமிழ்நாடு மாவட்டம் ரிசன்ட் போஸ்ட்

வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் பகுதியை ,அந்த தொகுதி எம்எல்ஏ காந்தியின் ஆதரவுடன் முஸ்லிம்களுக்கு பட்டா தர வகுப்பு வாரிய சொத்தாக மாற்றுவது மத மோதலை நிச்சயம் உருவாக்கும். மேலும், ஒரே நாளில் பட்டா மாற்றம் செய்து அப்பாவை மக்களை வருவாய்த் துறை,காவல்துறை ஏமாற்றுகிறதா?

மேலும்,ஐம்பதாண்டு காலமாக குடியிருந்து வரும் ஒரு இடத்தை ,ஒரே நாளில் முஸ்லிம்களிடம் ஒப்படைக்க இந்த மக்கள் அவ்வளவு கேவலமானவர்களா? அல்லது இந்துக்கள் அவ்வளவு கேவலமானவர்களா? திமுகவிற்கு சரியான பாடம் கற்பிக்க இந்துக்களால் முடியும். அது மட்டுமல்ல, இந்தப் பகுதி முழுதும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த மக்கள் தான் வசித்து வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டா, பத்திரம் எல்லாம் வைத்திருக்கும் போது இதை எல்லாம் ஒரே நாளில் எப்படி மாற்றம் செய்கிறார்கள் அதிகாரிகள்?

https://youtu.be/aqsrkklAm84

 மேலும், வன்னிய சமுதாயத்திற்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் டாக்டர் ராமதாஸ் எங்கே காணாமல் போனார் என்பது தெரியவில்லை? ஏனென்றால் இப்படிப்பட்ட தரம் கெட்ட தலைவர்களின் பின்னால் சென்றதன் விளைவு தான் இன்று சமுதாயம் இப்படி எல்லாம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்று அக்கிராமத்தில் பேசி வருகின்றனர் .

https://youtu.be/eqFqXKG3DYk

மேலும், இந்த சமுதாயத்திற்கு தகுதியான தலைவர்கள் இல்லை. இருந்திருந்தால், இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிச்சயம் நடக்காது. ஆளுக்கு ஒரு கட்சி ,ஒரு சங்கம், ஆளுக்கு ஒரு அமைப்பு ஏற்படுத்திக் கொண்டு ,ஒற்றுமை இல்லாத மக்களாக இருக்கும்போது தான், இந்த மாதிரி பிரச்சனைகள் தமிழகமெங்கும் தலை தூக்குகிறது. வன்னியர் சமுதாயம் பெரும்பான்மை இருந்தும், இதற்கு வலுவான சமூக அக்கறை உள்ள தலைவர்கள் இல்லை என்பது தான் வேதனை. இருப்பினும் ஒரு சில சமூக அக்கறை உள்ள நல்லவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். அவர்கள் மூலம் இதற்கு ஒரு தீர்வு இருக்க வேண்டும்.

மேலும் திமுக அரசுக்கு வரும் நாடாளுமன்றத்தில் நிச்சயம் வன்னியர்களின் எதிர்ப்பை காட்டிய தீருவார்கள். ஒரு பக்கம் இட ஒதுக்கீட்டில் செய்த மோசடி. அடுத்த கட்டம் இது போன்ற மத மோதல் சண்டைகள், சொத்து பிரச்சனைகள் உருவாக்கி, ஆங்காங்கே சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் திமுக இறங்கி இருக்கிறது. இந்த மக்கள் ஏமாந்த மக்களாக இருப்பதால், இந்த அரசியல் கட்சி ஏமாற்றுக்காரர்களிடம் ஏமாந்து போகிறார்கள்.மேலும், இந்த விஷயத்தில் அதிகாரிகளும், காவல்துறையும் சட்டத்தை மதித்து நடக்கிறார்களா? அல்லது திமுக அரசின் எடுபிடி வேலை செய்கிறார்களா? என்பது தான் சமூக ஆர்வலர்களின் கேள்வி?

தவிர, அதே பகுதியின்,திமுகவைச் சேர்ந்த முக்கிய புள்ளி துரைமுருகன் அங்கு இருந்தும், இந்த சமுதாய மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்? என்றால், சமுதாயத்தை ஏமாற்றி அரசியல் பிழைப்பு செய்கிறார் என்கிறார்கள் அப் பகுதி மக்கள் .இனியாவது இது போன்ற அரசியல்வாதிகளை இந்த சமுதாயம் எந்த நேரத்திலும் நம்ப கூடாது. மேலும், உங்களுக்காக, உங்கள் நன்மைக்காக வந்து குரல் கொடுக்கின்ற யாராக இருந்தாலும், அவர்களை வரவேற்று அவர்களுக்கு துணை நின்றால் ஆவது இப்பிரச்சனைக்கு எல்லாம் ஒரு தீர்வு ஏற்படும். இனியாவது சமூகம் விழித்துக் கொண்டால் சரி.

https://youtu.be/eqFqXKG3DYk

மேலும் இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சரியான நடவடிக்கை எடுக்காமல், முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்தால் வன்னியர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை நிச்சயம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் .

தவிர ,துரைமுருகன் போன்ற எடுபிடிகள் எவ்வளவு பேர் இருந்தாலும், இனி இந்த சமுதாயம் ஏற்காது. மேலும், இப் பிரச்சனைக்கு இந்து முன்னணி அமைப்பை சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இருப்பினும், இதற்கு சமூக நீதி கிடைக்கவில்லை. அதனால்,

இப்ப பிரச்சனையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில சட்ட பிரிவு செயலாளர் அஸ்வத்தாமன் நேரில் வந்து சமூக நீதி ஏற்படுத்திட வேண்டும் என்று அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *