
திமுகவின் ஐந்தாண்டு அரசியல் பற்றிய ஆய்வு செய்தால் உண்மையான (ஜர்னலிஸ்ட் Journalists) என்று சொல்லக்கூடிய பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே இது புரிந்த உண்மை.

மேலும்,தற்போது தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், பிஜேபி தவிர, மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஓட்டுக்காக, அரசியல் செய்கிற அரசியல் கட்சிகள். அதுவும் நான் தமிழ்நாட்டில் இருக்கிற பிஜேபியை நூறு சதவீதம் சொல்ல முடியாது. இங்கே திராவிட பிஜேபி போல், இது செயல்பட்டு கொண்டிருக்கிறது. நான் சொல்வது மோடி மற்றும் அமித்ஷா இவர்களுடைய அரசியல் நோக்கம் நாட்டுக்கான, நாட்டு மக்களுக்கானது.

மேலும்,இன்று அரசு ஊழியர்களும், ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் சங்கமும், வரும் ஆறாம் தேதி நடத்த இருந்த காலவரையற்ற போராட்டத்தை வாபஸ் பெற்றதாக அறிவித்தார்கள். அது என்ன ?என்றால், 50 சதவீதம் கடைசி நேரத்தில் வாங்குகின்ற சம்பளத்தின் அடிப்படையில் பென்ஷன் கொடுப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த தொகை அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 13,000 கோடி செலவிடப்பட வேண்டிய தொகை என்று வெளிவரும் தகவல்.தவிர, ஏற்கனவே, சம்பளத்திற்கு வருகின்ற வருமானத்தில் 90% செலவிடப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்து இருந்தார். இப்போது இதையும் சேர்த்தால், வருகின்ற வருமானம் மொத்தமே அரசு ஊழியர்களுக்கு போதாது என்ற நிலைமை தான் இருக்கும்.

மேலும், பென்ஷன் என்பது, ஓட்டுக்காக திமுக தேர்தல் அறிக்கையில், தேர்தல் வாக்குறுதியாக சொல்லிவிட்டது. ஆனால், அது நடைமுறைப்படுத்துவது மிகவும் கஷ்டமானது. இப்போதும் சொல்கிறேன், இவர்களே, மறுபடியும் ஜெயித்து வந்தால் கூட, அதை செய்ய மாட்டார்கள்.

மேலும்,அரசு துறையில் உள்ள பணியாளர்களை நியமனம் செய்வதற்கு கூட ,சம்பளம் போட வேண்டுமே, என்று போடாமலே காலத்தை தள்ளிவிட்டார்கள். இப்படிப்பட்ட திமுக ஆட்சி !இவர்களுக்கு பென்ஷன் சொன்னபடி செய்வார்களா?

மேலும்,கடந்த ஐந்து ஆண்டுகளில் உள்ள தேர்தல் வாக்குறுதியில் உருப்படியாக எதுவுமே செய்யவில்லை. வாயிலே சொல்வார்கள், அதை அவர்களுடைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் பெரிய அளவில் பிரமாதமாக செய்திகளை வெளியிடுவார்கள். மக்கள் அதை படித்துப் பார்த்து அந்த நேரத்துக்கு ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்.

அதனால், வாயில் சொல்வது, சுலபமான வேலை. இவர்களால் செயல்படுத்த முடியாது. மக்கள் கடந்த முறை தேர்தல் வாக்குறுதியை நம்பி, ஏமாந்து வாக்களித்தார்கள். அதனுடைய பலனை 5 வருடம் அனுபவித்து விட்டார்கள். இதை ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் அரசியல் தெரிந்தவர்கள் வரை புலம்புகிறார்கள்.
எனவே, இப்போதும் திமுக இந்த அறிவிப்பு ஒரு கண்துடைப்பு என்பதை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் புரிந்து கொண்டால் சரி .