தேசிய நெடுஞ்சாலை 205 வருவதால் எங்கள் கிராமத்திற்கு சுடுகாட்டுக்கு மாற்று பாதை அமைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் எம்எல்ஏ ஏழுமலை கிராம மக்கள் சார்பாக மனு .

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஏப்ரல் 25, 2024 • Makkal Adhikaram

தண்ணீர் குளம் கிராமப் பகுதியில் உள்ள காலனி மக்களுக்கு சுடுகாட்டுக்கு செல்லும் பாதையின்  குறுக்கே தற்போதய என்.எச் .205 தேசிய நெடுஞ்சாலை அப்பகுதியில் போடப்பட்டு வருவதால், காலம், காலமாக அப்பகுதி மக்களுக்கு இருந்து வந்த சுடுகாட்டு பாதைக்கு செல்லும் வழி தடுக்கப்படுகிறது. 

அதனால் அப்பகுதி மக்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இப்பிரச்சனைக்கு தீர்வு காண  முன்னாள் எம்எல்ஏ ஏழுமலை மூலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற மனு அளித்துள்ளனர் . மேலும்,

மாவட்ட ஆட்சியர் தேர்தல் பணி நிமித்தமாக வெளியில் சென்று உள்ளதால், திட்ட அலுவலரிடம் தங்கள் கோரிக்கையை தெரிவித்ததாக முன்னாள் எம்எல்ஏ ஏழுமலை தெரிவித்துள்ளார் . அவரும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் கலந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்று முன்னாள் எம்எல்ஏ ஏழுமலை தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *