நாட்டில் பெருகி வரும் படித்த இளைஞர்களின் வேலையில்லா நிலையை கட்டுப்படுத்த அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை அளிக்க தமிழக மக்கள் கோரிக்கை .

Uncategorized

ஜூலை 12, 2024 • Makkal Adhikaram

நாட்டில் பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் மிகவும் அவசியம். ஆனால், எடப்பாடி ஆட்சியில் அதை மத்திய பிஜேபி அரசின் பேச்சைக் கேட்டு தளர்த்தி விட்டார். அது தவறு .

எந்த மாநிலமாக இருந்தாலும், அந்தந்த மாநில மக்களுக்கு மாநிலத்தில் உள்ள மாநில அரசு வேலையானாலும்,மத்திய அரசு வேலை ஆனாலும், தனியார் வேலை ஆனாலும், அவர்களுக்குத்தான் முக்கியத்துவம், முதல் உரிமை அளிக்க வேண்டும்.

இல்லாத பட்சத்தில் வேண்டுமானால் கொடுக்கலாம் தவறு இல்லை. ஆனால் அந்த சட்டத்தையே இல்லாமல் ஆக்கிவிட்டார். அது தவறு. இனியாவது பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை அரசு கட்டுப்படுத்தவில்லை என்றால், இளைஞர்கள் தவறான வழியில் போவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

 அதனால், தனியார் நிறுவனங்களும் சரி, அரசு வேலை வாய்ப்புகளும் சரி, முதலில் தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தமிழக மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *