சமூக அலுவலர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பப்பட்ட மனு,திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று விசாரணை..!

நாமக்கல் மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக பள்ளிபாளையம் பகுதிகளில் அதிகப்படியான குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாகவும், சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பாக,சமூக ஆர்வலர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு 3/9/2024 அன்று, மனு அளித்தனர். மனுவில் கூறியது, நாமக்கல் மற்றும் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகப்படியான குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதால், சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு தெரியப்படுத்தியும், அதற்கான தீர்வு கிடைக்காததாலும், 1.RI, 2.கிராம நிர்வாக அலுவலர், 3. […]

Continue Reading

பள்ளியில் வளைகாப்பு நடத்திய மாணவிகள்!ஆசிரியை பணியிடை நீக்கம். போராட்டத்தை கையில் எடுத்த ஆசிரியர்கள் .

பள்ளியில் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்தி அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்-ஆக மாணவிகள் பதிவிட்டதால் , வகுப்பு ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து போராட்டம் வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களில் கூட்டமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் முதல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரை உள்ள 24 இயக்கங்களை சார்ந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன், […]

Continue Reading

தடகள வீராங்கனையின் கைப்பேசி பறிப்பு: சாலை மறியல்.!

ஈரோட்டில் நடந்து சென்ற தடகள வீராங்கனையிடம் கைப்பேசியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற மா்மநபா்களை கைது செய்யக்கோரி விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினா். இறுதிப்போட்டி நிறைவடைந்ததை அடுத்து வெளிமாவட்டங்களைச் சோ்ந்த வீரா், […]

Continue Reading

திண்டுக்கல் அருகே லாரி ஓட்டுனரை இரும்பு கம்பியால் தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர்.

திண்டுக்கல், மதுரைரோடு தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளையார்நத்தம் பிரிவில் லாரி சாலையை கடந்தது. அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து இடிப்பது போல் அருகாமையில் வந்துள்ளார். இதனால், லாரி டிரைவர் மற்றும் தனியார் பேருந்து டிரைவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந் நிலையில் தனியார் பேருந்து டிரைவர் லாரி டிரைவரை கம்பியால் தாக்கியதில் அவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தோடியது. இதையடுத்து பேருந்து டிரைவர் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் சென்றபோது, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் […]

Continue Reading

முகமூடி கொள்ளையர்கள் கைது – போலீசார் அதிரடி:

உடுமலை, காங்கேயம் மடத்துக் குளம், தாராபுரம் என திருப்பூர் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் முகமூடிக் கொள்ளையர்கள் பல்வேறு வீடுகளில் கொள்ளை அடித்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். திருப்பூர் மாவட்டத்தையே அலற விட்ட இந்த முகமூடி கொள்ளை யர்களை பிடிக்க போலீசார் 3 தனிப்படை அமைத்து துப்பாக்கி முனையில் தேடி வந்தனர். இந்நிலையில் உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி பிரிவில் நான்கு முகமுடி கொள்ளையர் களையும் நேற்று இரவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒரு […]

Continue Reading

ஈரோட்டில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் பென்ஷன் உயர்த்த ஆர்ப்பாட்டம் .

ஈரோடு மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில், தொழிலாளர்களுக்கு பென்ஷன் ரூ. 1,000-ல் இருந்து ரூபாய் 5,000 ஆக உயர்த்த வேண்டும். தொழிலாளர்களின் குடும்பத்தினரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். பஞ்சபடியுடன் கூடிய ஓய்வூதியம், தொழிலாளர்களின் ஊதிய உச்சவரம்பை ரூபாய் 30 ஆயிரம் உயர்த்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை […]

Continue Reading

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் திடீர் பிளவு பொதுமக்கள் அதிர்ச்சி .

கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழ் கிளை வரை கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக சிறுப்பன் ஓடையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வராதால் கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்கு சென்று பார்த்த போது நிலம் இரண்டாக பிளவு பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தற்போது வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்

Continue Reading

நாமக்கல்லில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம் .

நாமக்கல்லில், கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் இரண்டாம் கட்ட ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சரவணன், மாவட்ட அமைப்புச் செயலாளா் பிரபா ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஆா்.லட்சுமி நரசிம்மன், மாவட்ட இணை செயலாளா் குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். அப்போது ‘மற்ற துறை பணிகளை கிராம […]

Continue Reading

நாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி நிவாரணம் கேட்டு விவசாயிகள் உடல்களுடன் போராட்டம் .

ஈரோடு மாவட்டம்.காங்கேயம்: காங்கேயம் நகராட்சி மூன்றாவது வார்டு தொட்டியபட்டி, அம-ராங்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி மோகன்குமார், 62; தனது தோட்டத்தில், 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பட்டியில் ஆடுகளை அடைத்து சென்றார். நேற்று காலை பட்டிக்கு சென்று பார்த்த-போது, 15 ஆடுகள், 15 குட்டிகள் இறந்து கிடந்தன.காங்கேயம் நகராட்சி வருவாய் ஆய்வாளர், கால்நடை மருத்து-வர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பரிசோதித்தார். உயிருக்கு போரா-டிய […]

Continue Reading

திண்டுக்கல்லில் செயல்படும் பிரபல நிறுவனம் (டி-மார்ட் (D Mart))-க்கு Sec 55 படி நோட்டீஸ், ரூ.3000 அபராதம் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

திண்டுக்கல், சீலப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பல்பொருள் அங்காடியான டி-மார்ட் (D Mart) கடை குறித்து whatsapp மூலம் அனுப்பப்பட்ட புகாரின் பேரில் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது உணவு விற்பனை பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கை உரைகள் மற்றும் தலைக்கு மாட்ட கூடிய நெட் கேப் அணியவில்லை எனவும், உணவு பொருள்களின் காலாவதி தேதி குறித்து ஆய்வு செய்யும்போது அதில் காலாவதிகள் தேதி இடம்பெறவில்லை எனவும், உணவுக்கான […]

Continue Reading