மரணத்தை ஜெயித்தவன் எவனோ அவனே இந்த உலகின் வெற்றியாளன் .

உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். ஆனால், இறப்பை வென்றவர்கள் ஞானிகள், சித்தர்கள், மகான்கள் இவர்களும் இந்த ஜீவத்தை தன்னுள் அடக்கி சமாதி நிலையை அடைகிறார்கள் .அதுதான் பிறவா பெருநிலை. இந்த நிலையை அடைவதற்கு பெரும் தவம் புரிந்து இருக்க வேண்டும். புண்ணியம் செய்திருக்க வேண்டும். இறைவனை யார் ஒருவர் தரிசனம் காண்கிறாரோ அவரே இந்நிலையை பெற முடியும் . போலி சாமியார்கள் சுக வாழ்க்கையில் அல்லது போலி வாழ்க்கையில்  அந்த […]

Continue Reading

தமிழ்நாட்டு அரசியலில், இலவசம் என்பது மக்களை ஓட்டுக்காக கவரும் ஏமாற்று வேலை .

காமராஜர் காலத்தில் மக்களுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது ஒருவேளை சோறு சாப்பிடுபவர்கள் மிகவும் குறைவு .படிப்பதற்கு செல்லும் மாணவர்கள் பசியால் வாடியது அந்த காலம். இந்த காலம் அப்படி அல்ல. இந்த காலத்தில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி  கொடுக்கிறார்கள். அதனால், யாரும் பட்டினியாக இல்லை. அப்போது கொடுத்தது உண்மையிலே அந்த மக்களுக்கு தேவையான ஒன்று. அதன் பிறகு மக்களின் வயிற்று தேவைகள் இல்லை. அப்போதெல்லாம் கேட்டுக் கூட வாங்கி சாப்பிடுவார்கள். ஒரு […]

Continue Reading

நடிகை விஜயலட்சுமி ஆல் சீமானின் அரசியல் பொது வாழ்க்கை கேள்விக்குறியாகுமா ?

சீமான் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். பொதுவெளியில் ஊடகங்களில் பேசும்போது, ஊழல் குற்றச்சாட்டுகளை எடுத்து வைக்கிறார். ஒருவரைப் பற்றி ஊழல் குற்றச்சாட்டை எடுத்து வைக்கும் போது இவர் நேர்மையானவராக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கருத்து . சீமானுக்கு பணம் எப்படி வருகிறது? எங்கிருந்து வருகிறது ?அரசியல் கட்சி நடத்துவது என்பது சாதாரண வேலை அல்ல. மேலும், விஜயலட்சுமி, சீமான் விஷயம் அவர்களுடைய தனிப்பட்ட சொந்த விஷயம் என்றாலும், இந்த விஷயம் பொதுவெளிக்கு வந்துவிட்டது. […]

Continue Reading

சமூக அக்கறையில்லாமல் செயல்படும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மீது நடவடிக்கை எடுப்பாரா ? தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின்- திருவாரூர் மாவட்ட மக்கள்.

திருவாரூர் மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக இருந்து வரும் சுரேஷ்குமார் சமூக அக்கறை இன்றி செயல்படுவதால், இவர் வந்த காலத்திலிருந்து இது நாள் வரை, இந்த மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அதிகரித்த வண்ணம் உள்ளது என பொதுமக்கள் குற்றச்சாட்டு.  இது தவிர, ரவுடி கேங்குகளில் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ற போட்டி. அதிலும், சாதிய தொடர்பான ரவுடிகள், அரசியல் கட்சி ரவுடிகள், இப்படி போட்டி, போட்டு மக்களுக்கு பிரச்சனைகளும், வெறுப்புக்களும், ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், காவல்துறை […]

Continue Reading

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபை குமார் சிங்க்கு ! விடையூர் கிராம மக்கள் பாராட்டு.

நாட்டில் தற்போது நீதிமன்றமும், லஞ்ச ஒழிப்பு துறையும் தான் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், அரசியல் நிர்வாகம் மிக மோசமாக உள்ளது. பொதுமக்கள் யாரிடம் சொல்வார்கள்? ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரி, அல்லது மாவட்ட ஆட்சியர், இவர்களிடம் தான் பொதுமக்களின் பிரச்சனைகளையும், குறைகளையும் முதலில் சொல்வார்கள்.  ஆனால், அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியர்களில்,  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பின் ஜான்வர்கீசும் ஒருவர். அப்படி விடையூர் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் […]

Continue Reading

சாமானிய மக்களின் ரியல் எஸ்டேட் துறையை கார்ப்பரேட் நிறுவனங்களின் துறையாக மாற்றிய அதிமுக, திமுக அரசு.

கடந்த காலங்களில் ரியல் எஸ்டேட் துறையில் சாமானியர்கள் சம்பாதித்து பல கோடிகளை ஈட்டியுள்ளனர். இதில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அறிய அதிக அளவில் மீடியேட்டர் இருந்துள்ளனர். இந்தத் துறையில், அதாவது ஜெயலலிதா ஆட்சிக்குப் பிறகு ரியல் எஸ்டேட் துறை சாமானிய மக்களுக்கு எதிராக பல சட்ட விதிகளை மாற்றி விட்டனர் . எடப்பாடி ஆட்சியிலிருந்து பலமுறை விதிமுறைகளை மாற்றி கார்ப்பரேட் நிறுவன கம்பெனிகளுக்கு சாதகமாக டிடிசிபி அப்ரூவல், இல்லாமல் வீட்டு மனைகளை விற்க முடியாது. அந்த நிலைமைக்கு […]

Continue Reading

சனாதன தர்மத்தை எதிர்ப்பதால் இந்து கடவுள்கள் கேவலப்படுத்தப்படுகிறார்களா ? அதனால், அரசியல்  லாபம் அடைந்து விடுவாரா? – உதயநிதி ஸ்டாலின்.

அரசியலுக்கு வந்து அரசியலில் என்ன செய்ய வேண்டும்? எதை செய்ய வேண்டும்? மக்களின் தேவைகள் என்ன? பிரச்சனைகள் என்ன? இதையெல்லாம் செய்வதற்கு நாதி இல்லாமல், சனாதனத்தையும், இந்து மதத்தையும் ,இந்துக்களையும் ,இழிவு படுத்தும் விதமாக அரசியல் ஆக்கிக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு  இந்தியாவில் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது . எந்த பேச்சால் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை அல்லலாம் என்று நினைத்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியை இழப்பது உறுதி. மேலும், […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நீட் தேர்வில் அரசியல் செய்வது மாணவர்களின் நலன் முக்கியமா? அல்லது இவர்களின் அரசியல் ஆதாயம் முக்கியமா ?

நீட் தேர்வு வைத்து தமிழக மாணவர்களிடம் அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் யாருக்கு லாபம்?  யாருக்கு அதனால் நஷ்டம்?  இதுதான் முக்கிய கருத்து. அதாவது தேர்தல் அறிக்கையில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னது. ஆனால் இதனால் வரை அந்த நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை .அதன்பிறகு மத்திய அரசை குறை சொல்லி அரசியல் செய்து கொண்டிருக்கிறது. மேலும், இதை வைத்து அதிமுக, பாமக, பாஜக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, […]

Continue Reading