தமிழ்நாட்டின் 2026 தேர்தல் கணிக்க முடியாத தேர்தல்!இதில் கருத்துக்கணிப்பு என்பது ஒரு பொய்யான தகவல்.

தமிழ்நாட்டின் 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு கணிக்க முடியாத தேர்தல் கருத்துக்கணிப்பு. இதில் பல ஊடகங்களும்,தனியார் நிறுவனங்களும், கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இவர்களுடைய கருத்துக்கணிப்பு எப்படி என்றால்?கூட்டணி அரசியல் கட்சிகளை வைத்து கருத்து கணிப்பு நடத்தி பார்க்கிறார்கள். இங்கே கூட்டணி கட்சிகளுக்கு, அந்தந்த கூட்டணியில் இருக்கக்கூடிய அந்தந்த கட்சி உறுப்பினர்களும்,,நிர்வாகிகளும் அவர்களுடைய குடும்பங்களும் தான் அதிக அளவில் அதற்கு வாக்கு வங்கியாக இருக்கும். என்னதான் தலைகீழாக நின்றாலும் இந்த கூட்டணி கட்சிகளுக்கு வாக்காளர்கள் வாக்களிப்பது கடினம். இது கொஞ்சம் […]

Continue Reading

காஷ்மீரில் கேபிள் ரயில் பாலத்தை முதன்முதலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து, வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

473 மீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இது புயல், காற்று நில அதிர்வு,போன்ற இயற்கை சம்பவங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் வலிமையானதாக அமைக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த பாலத்தின் வழியே செல்லும் வந்தே பாரத் தரையிலே பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும், இந்த ரயில்வே துறையில் இப் பணியினை மேற்கொண்ட பொறியாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள், நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து அவர்களை பாராட்டி,வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continue Reading

பிஜேபியில் அண்ணாமலை அரசியல் தகுதி என்ன ? தலைமை அரசியல் எப்படி இருக்க வேண்டும்?

பிஜேபியில் அண்ணாமலையின் அரசியல் ஒரு விளம்பர அரசியல்! அதன் மூலம் பிஜேபி கிராமங்களுக்கு சென்றடைந்தது. அதிலும் ஒரு படி மேலே, என்ன நடந்தது? என்றால்,அண்ணாமலை ஏழை மாணவர்களிடம் பேசி கட்டியணைப்பது,தாய்மார்களை கட்டியணைத்து பேசுவது, ஒரு சில கட்சிக்காரர்களின் இழப்புக்கள்,கல்யாணம் போன்றவற்றுக்கு சென்றது, இதுதான் அண்ணாமலையின் அரசியல். இதிலே அண்ணாமலை அரசியல்வாதியாக செயல்பட்டார?இல்லை காவல்துறை அதிகாரியாக செயல்பட்டார? இது இரண்டிற்குள் அவருடைய அரசியல் தெளிவற்ற அரசியல். நான் அண்ணாமலையை முதன் முதலில் கமலாலயத்தில் மாநில தலைவராக பொறுப்பேற்ற போது […]

Continue Reading

தமிழக அரசு! கிராம உதவியாளர்களை தேர்வு செய்ய புதிய விதிமுறைகள் கொண்டு வந்துள்ள அரசாணை.

இதுகுறித்து வருவாய்த்துறை செயலாளர் அமுதா நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வருவாய்த்துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, கல்வித்தகுதியில், எஸ்.எஸ்.எல்.சியில் தமிழ் ஒரு பாடமாக கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் எஸ்.எஸ்.எல்.சியில் […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சி வன்னிய சமூக மக்களுக்கு நன்மை செய்யப் போகிறதா? இது ராமதாஸின் குடும்ப சொத்தா? அல்லது சமூக நோக்கத்திற்கானதா? சமூகம் சிந்திக்குமா ?

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவிய நோக்கம் என்ன? அதுவாவது இந்த மக்கள் சிந்திப்பார்களா? இல்லை சமுதாயத்தையே தாங்குகிறார் போல் பேசுவதையும், நடிப்பதையும் பார்த்து 40 ஆண்டு காலத்திற்கு மேல் ஏமாந்தது போதாதா? இனியும் தொடர்ந்து ஏமாறும் கூட்டம் சமூக நலனுக்காக அவர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய சொந்த நலனுக்காகவும், அவர்களை இந்த சமுதாயத்தை ஏமாற்றி ஓட்டு வாங்கி,தங்களை பொருளாதாரத்தில் உயர்த்திக் கொள்ள இருப்பார்களே ஒழிய,இந்த வன்னிய சமுதாய மக்களுக்காக இருக்க மாட்டார்கள். இப்படி இந்த இட ஒதுக்கீடை […]

Continue Reading

இளமையின் வேகம்! அறிவை அலட்சியம் செய்யும்.இது ஒரு புறம் என்றால்,அரசாங்கம் இந்த கூட்டத்திற்கு செயல்திட்டம் வகுக்காமல் நடத்தியது தான் ,பெங்களூரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த உயிரிழப்பு.

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் வெற்றி விழாவிற்கு சென்ற இளைஞர்கள் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம் சேரும்போதே அறிவுள்ளவர்கள் வெளியேறி விடுவார்கள். அவர்களுக்கு தெரியும் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப்போகிறது. ஆனால், கல்வியறிவு வேற, இறைஞானம் வேற, இந்த இறை ஞானம் உள்ள குழந்தைகள் நிச்சயம் அந்த இடத்திலிருந்து வெளியேறி இருப்பார்கள். அவர்கள் இந்த கேளிக்கை, போலியான மகிழ்ச்சி, இதில் எல்லாம் ஆர்வம் காட்ட மாட்டார்கள். […]

Continue Reading

உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று இயற்கைக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாக்க மரங்களை நடுவரா? மலைகளை பாதுகாப்பாரா? இயற்கையை பாதுகாக்க தவறிய தமிழக அரசு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த இயற்கையை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? இன்று ஜூன், ஜூலையில் கூட கொளுத்தும் வெயில்,மக்கள் வெளியில் சென்று வேலை செய்வதற்கு கூட பயப்படும் அளவில் இந்த வெயில் இருக்கிறது. இது சமீபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.இது பற்றி எந்த ஆட்சியாளர்களும் கண்டு […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலினின் இன்று முக்கிய ஆலோசனை! இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா?

பரந்தோர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அது சம்பந்தமான முக்கிய அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், இதற்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், திமுக அரசு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அதானி, இந்த விமான நிலையத்தை அமைப்பதில் முக்கியத்துவமானவர். ஒருவேளை திமுகவின் டீல் அமலாக்க துறையின் டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணை நீர்த்துப் […]

Continue Reading

அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ஊழல் விவகாரம் நீர்த்து போகுமா ? அல்லது திமுக மீது நடவடிக்கை பாயுமா? – தமிழக மக்கள்.

அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ஊழல் விவகாரம் உச்சநீதிமன்றம் ஒரு பக்கம், தடை விதித்துள்ளது. மற்றொரு பக்கம் மோடிக்கு யாரையெல்லாம் சிபாரிசு செய்து அதை நீர்த்துப் போக திமுகவின் அரசியல், சாணக்கியத்தனம் என்று சொல்வதா? அல்லது சாஷ்டாங்கமாக காலில் விழுந்து காப்பாற்ற வழி தேடிக் கொண்டதா? அல்லது அதானி போன்ற ஆட்கள் மூலம் மோடியை சமாதானம் செய்து விட்டார்களா?இப்படியெல்லாம் பொதுமக்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும் பேச்சு. இருப்பினும்,எது எப்படியோ, மத்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் […]

Continue Reading

தமிழ்நாட்டில் தலையாரிகளை சொந்த ஊரில் இல்லாமல், 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பணியமர்த்தி மூன்று வருடத்திற்கு ஒருமுறை தமிழக அரசு அவர்களை மாற்றுமா? – தமிழக கிராம பொதுமக்கள் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

கிராமங்களில் தலையாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் செய்யக்கூடிய திரை மறைவு வேலைகளால் இன்று ஒவ்வொரு தாலுக்கா மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் ஒரு நாளைக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இதனால், கோட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்,தாலுகா அலுவலகத்திலும்,அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக இருப்பதில்லை. அதற்கு பொதுமக்கள் மாதக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிறது. என்ன விஷயம் என்று ஒவ்வொன்றாக பார்ப்போம். பெரும்பாலும் பட்டா பெயர் மாற்றம்,ஒருவருடைய சொத்தில் இன்னொருவர் தள்ளி கல்லை போட்டு […]

Continue Reading