கள்ளத்தனமான மது விற்பனையில், ஏழு மலைவாழ் கிராமங்கள் சீரழியும் நிலைமை ஏன் ?

மது போதைக்கு அடிமையான மக்கள், தமிழ்நாட்டில் வேலை செய்யும்  வலிமையும், திறமையும் அற்றவர்களாக இருப்பதால், வடமாநிலங்களில் இருந்து வேலைக்கு பணியமத்தப்படுகிறார்கள். இதனால், இங்குள்ள தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. இதற்கு காரணம் மது போதைக்கு அடிமையான மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள திமுக கட்சியினர் கள்ள சந்தையை திறந்து வைத்துள்ளார்கள். அதில் ஒரு பாட்டில் விலை 130 என்றால், அவர்கள் விற்பனை செய்வது 210 அல்லது 30 இது போன்று விற்பனை செய்து லாபம் பார்க்கிறார்கள். […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம பொதுமக்கள் .

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் நிலத்திற்கு மேல் கையகப்படுத்தும் திட்டத்திற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்களுடைய எதிர்ப்பை விமான நிலையம் அமைக்க தெரிவித்து வருகின்றனர். விமான நிலையத்தால் பாதிக்கப்படும் கிராமங்களில் 13 கிராமங்கள் தொடர்ந்து 500 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதைப்பற்றி மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல், நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில் குறிக்கோளாக உள்ளது. […]

Continue Reading

தேனி மாவட்டத்தில் தொடரும் கனிம வள கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும், பார்வர்ட் பிளாக் மாவட்ட பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி மாவட்ட ஆட்சியருக்கு புகார்  அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் ?

தேனி மாவட்டத்தில் உள்ள  ஆண்டிப்பட்டி தாலுக்கா மரி குண்டு  ஊராட்சியில்  மலை மண் மற்றும் கிராவல்  எடுக்க கொடுக்கப்பட்ட அனுமதி அளவைவிட மொத்தமாக அப்பகுதியே காலி செய்துள்ளனர். இது எவ்வளவு பெரிய விதிமீறல் என்பது மாவட்ட ஆட்சியருக்கும் ,கனிம வளத்துறை அதிகாரிக்கும் தெரியாததா?  மேலும், இது சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களை கண்டு கொள்ளாமல் ,அதை குப்பையில் தூக்கி போடுகிறார்கள். பொதுமக்கள் எதற்காக புகார் அளிக்கிறார்கள்? என்பது மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரியாததா? மேலும் இந்த கிராவல் மண் […]

Continue Reading

பெரியார் அணைகளில் உள்ள தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு தகுந்த நேரத்தில் தண்ணீர் திறக்காமல் விவசாயிகளை மன வேதனைக்கு உள்ளாக்கம் அரசியல் நோக்கம் என்ன? – தேனி மாவட்ட விவசாய சங்கங்கள்.

பெரியாறு அணையின் கொள்ளளவு 142 கன அடி  to 152 கன அடி கூட நீர்தேக்கலாம் என்கிறார்கள் தேனி மாவட்ட விவசாயிகள் . மேலும், இந்த நீர் தேக்குவதில் பெரியார் அணையில் என்ன பிரச்சனை இருக்கிறது?  மேலும், இதை தேனி மாவட்ட விவசாயிகளுக்கு கொடுக்காமல் ,பிற மாவட்ட விவசாயிகளுக்கு இந்த தண்ணீர் செல்வதில் உள்ள அரசியல் என்ன?  இது தவிர, இந்த தண்ணீர் திறந்து விடும் போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் […]

Continue Reading

தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு, சவுடு மண் கொள்ளைக்கு, மலைகள் கொள்ளைக்கு, மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதா ?

கடந்த அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் மணல் கொள்ளைகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. அதன் விளைவு தற்போது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ தற்போது உள்ளே நுழைந்து விட்டது. இந்த மணல் கொள்ளைக்கு முக்கிய காரணம் அரசியல்.  யார்? ஆளும் கட்சியாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு சாதகமாக மணல் மாபியாக்கள் மாதம் இத்தனை ஆயிரம் கோடி அல்லது வருடத்தில் இத்தனை ஆயிரம் கோடி  என்ற கொடுக்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தில் இந்த மணல் வியாபாரம் ஓடிக்கொண்டு இருந்தது. இந்த பணத்தை […]

Continue Reading

பணம் கொடுத்தால் வருவாய்த் துறையில்  வாரிசு இருந்தும் அவர்கள் இல்லை என்று சான்று தருவார்களா ? இதுகுறித்து பாதிக்கப்பட்ட குமார் மற்றும் சிவா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

திருவள்ளூர் மாவட்டம், அதிக அளவில் அரசியல் கட்சி பிராடுகள், மோசடி பேர்வழிகள், கிரிமினல்கள், தீவிரவாத கும்பல்கள், ஓட்டு மொத்த புகலிடமாக உள்ளது. மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள் பணம் கொடுத்தால் பட்டாவை மாற்றி போடுவார்கள். வாரிசு இருந்தும் இல்லாமல் செய்து விடுவார்கள். ஏனென்றால், இவர்களுக்கு பக்க பலமாக சங்கம் ஒன்று அமைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருப்பார்கள். அந்தப் போராட்டத்திற்கு பயந்து, மாவட்ட ஆட்சியர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவார்கள். இது என்ன அரசியல் கட்சியா? இவர்கள் போராடுவதற்கு? […]

Continue Reading

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாமல் இருப்பது திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் அலட்சியமா ? மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நடவடிக்கை எடுப்பாரா?- பொதுமக்கள்.

கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள மணவாள நகர், பேரம்பாக்கம் போன்ற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது, இதை ஆரம்பத்திலே தடுக்காமல், இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளின் அலட்சியமா? மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்கிறார்களா ? டெங்கு ஒழிப்பிற்காக மத்திய – மாநில அரசும் கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கிறது. ஆனால் ,அது முறையாக இத்திட்டத்திற்கு போய் சேருகிறதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி? மேலும், இம் மாவட்டத்தின் சுகாதாரத்துறை […]

Continue Reading

இருட்டில் பட்டுக்கோட்டை நகராட்சி ! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

பட்டுக்கோட்டை நகராட்சி இருட்டில் மூழ்கி இருப்பதால் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தவிர ,குற்றவியல் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், இரவு நேர பிட் பாக்கட்கள், இவர்களுக்கு இந்த இருட்டு சாதகமாக இருக்கிறது.  மேலும் ,பட்டுக்கோட்டை நகரின் காட்டாற்று பாலம் புறவழிச் சாலை, தஞ்சாவூர் சாலை மணி குண்டு முதல் பேருந்து நிலையம் வரை எல்லா இடங்களிலும் தெருவிளக்குகள் எரிவதே இல்லை. தவிர, கடைகளில் போடப்பட்டுள்ள விளக்குகள் தான் நகருக்கு வெளிச்சம் தருகின்றன. மக்களின் வரிப்பணம் […]

Continue Reading

என்னடா இது ! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு வந்த சோதனை ?

சமூக வலைத்தளத்தில் இந்து முன்னணி அமைப்பினர் பேசுகின்ற பேச்சு . ஈரோடு பகுதியில் உள்ள சென்னிமல, முருகன் கோயிலுக்கு சொந்தமானது. இதை கிருத்துவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வந்தபோது, இந்து முன்னணியினர் 25,000 மேற்பட்ட மக்கள் அங்கே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வளவு மக்கள் தொகையை குறைந்து மதிப்பிட்டு சொன்ன தினத்தந்தி தொலைக்காட்சியை, இந்து முன்னணி அமைப்பினர் வசைப்பாடி இருக்கிறார்கள். அப்படி ஒரு செய்தியை போடாமலே நீங்கள் இருக்கலாம். ஒருவரை உயர்த்தி, மற்றொருவரை தாழ்த்தி போடும் பத்திரிகை வேலை […]

Continue Reading

தமிழ்நாட்டில் கருவேல மரங்களை அகற்ற ஆர்வம் காட்டும்  தமிழக அரசும், ,சென்னை உயர்நீதிமன்றமும் ,அதில்  கோடிக்கணக்கான வருமானம் அரசுக்கு இழப்பு ஏற்படுவத்துவது தமிழக அரசுக்கும், உயர்நீதிமன்றத்திற்கும், தெரியாதது ஏன்…….?

தமிழ்நாட்டில் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .அதன் அடிப்படையில் தமிழக அரசு தற்போது மாவட்டம் தோறும் அதற்கு கமிட்டி அமைத்து, கருவேல மரங்களை அகற்ற ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், இந்த கருவேல மரம் கோடிக்கணக்கான மதிப்புடையது என்பது தமிழக அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் இதுவரை தெரியாமல் இருப்பது தான் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கருவேல மரத்தின் மதிப்பு சுமார் ஒரு டன் 4500 ரூபாய் […]

Continue Reading