மக்கள் அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட நிருபர்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி சமூகத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

மக்கள் அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட நிருபர்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி சமூகத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், மக்கள் அதிகாரத்தில் நிருபர்களாக சேர்ந்தவர்கள். இதுவரை எந்த ஒரு செய்தியும் கொடுக்காமல், நாங்கள் தொடர்பு கொண்டாலும் பேச மறுப்பதும், பத்திரிகை விதிமுறைக்கு எதிரான ஒன்று.  இவர்கள் எல்லாம் பத்திரிகையின் அடையாள அட்டை தான் பத்திரிகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது எதற்காக கொடுக்கப்பட்டது? ஏன் கொடுக்கப்பட்டது? அதற்கு அர்த்தம் தெரியுமா? என்று கூட தெரியவில்லை. இவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து ஒரு மாதம் கூட ஒரு படியாக வேலை செய்யவில்லை அதனால் இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி எந்த ஒரு பத்திரிகையிலும் இவர்களை தகுதியானவர்கள் என்று ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதனால், கீழ்க்கண்ட நபர்களை இப் பத்திரிகையின் அடையாள அட்டைக்கு தகுதியற்றவர்கள் என்றும், பத்திரிகைக்கும் ,இவர்களுக்கும் எழுத சம்பந்தமும் இல்லை என்றும்,  நிருபர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  மேலும், இந்த பத்திரிகை அடையாள அட்டையை காண்பித்து, இவர்கள் சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை எமது  பத்திரிகையின் மூலமும், இணையதளத்தின் மூலமும் தெரிவித்துக் கொள்கிறோம்.                                                                                                 இப்படிக்கு                         […]

Continue Reading

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்குமா ?

சாமானிய மக்களின் நம்பிக்கையாக உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் சார்பில் மக்கள் அதிகார பத்திரிகையின் கோரிக்கை (மக்கள் அதிகாரம் சமூக வலைதளத்தில் பெரணமல்லூர் அரிய பாடி ஊராட்சி மன்ற செயலாளர் ரவி பதிவிட்ட ஒரு செய்தி ) ஐயா அமைச்சர்கள் நிலைமையே இப்படி இருக்கும்போது, ஊராட்சி தலைவர்கள் நிலைமை எப்படி ஐயா இருக்கும்? இது தெரியாமல் பெரணமல்லூர் ஊராட்சி மன்ற செயலாளர் ரவி உண்மையை சொன்னால் நடவடிக்கை எடுப்பார்களா ? எங்கய்யா சாமானிய மக்களுக்கு நீதி […]

Continue Reading

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 6வது ஆண்டு விழா.

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் 6வது ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகளை, வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த ஆண்டு விழாவிற்கு கல்லூரியின் துணைத் தலைவர்கள்.சொக்கு வள்ளியப்பா,. தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தலைவர்.வள்ளியப்பா தலைமையேற்று சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாட்டங்களை துவக்கி வைத்தார். அனைவரையும் வரவேற்ற கல்லூரியின் முதல்வர் காதர்நாவஷ் […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பின் ஜான் வர்கீஸ் விடையூர் கிராம கரு வேல மரங்களை முழுதும் வெட்டிய பிறகே, கவர்னர் ஆர் என் ரவி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், மற்றும் ஊராட்சிகள் ஆணையர் தாரேஷ் அகமது க்கு ரிப்போர்ட் அனுப்பப் போகிறாரா ? கிராம பொதுமக்கள்.

விடையூர் கிராம பொதுமக்கள் மூலம் அனுப்பப்பட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதன் நகலை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு அனுப்ப ஊராட்சிகள் ஆணையர் தாரேஷ் அகமது, கவர்னர் ஆர் என் ரவி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோர் உத்தரவிட்டனர். ஆனால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் கருவேல மரம் முழுதும் வெட்டி எடுத்து, அந்த வேரையும் நோண்டிய பிறகு அங்கு எதுவும் இல்லை என்று ரிப்போர்ட் அனுப்பலாம் என்று காலதாமதம் செய்து கொண்டிருக்கிறார். […]

Continue Reading

தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம் – வந்தவாசி நகராட்சி.

வந்தவாசி நகராட்சியில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம் துவங்கப்பட்டுள்ளது. இதில் வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை இந்த சேமிப்பு கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதை வந்தவாசி நகராட்சி பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் உபயோகமற்ற பொருட்களை இந்த சேமிப்பு கிடங்கில் கொடுக்கலாம். அல்லது அதை எடுத்து வர இயலாதவர்கள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வரும்போது, அவர்களிடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் ஜலால், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் தூய்மை இந்தியா திட்டம், […]

Continue Reading

பெண்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவனம் மற்றும் பெண்கள் வாழ்வுரிமை துவக்க விழா .

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மேட்டூர்ணிமடம் சந்திப்பில் அமைந்துள்ள சாலோம் பெண்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவனத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியும், பெண்கள் வாழ்வுரிமை இயக்க துவக்க விழாவும் நாகர்கோவில் ஒய் எம் சி ஹாலில் நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் தாமோதரன்,( தமிழ்நாடு என் ஜி ஓ கூட்டமைப்பு தலைவர்) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு டேவிட்சன் சபை போதகர் தலைமையேற்று நடத்தினார். தவிர, விழா நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் கலந்து […]

Continue Reading

ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவ வைபவம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் வைகாசி அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ வைபவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் அர்ச்சனைகள் நடைபெற்றது. முத்துமாரி அம்மன் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இக் காட்சியை காண பெரும் திரளாக அக்கிராமத்தினர் வந்து சாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர் ” வந்தை ” நளினி

Continue Reading

விவசாயிகளையும் மண்பாண்ட தொழிலாளிகளையும் வைத்து ஏரி மண்ணை கொள்ளையடிக்கும் திமுக அரசின் திட்டமா ?

சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசும் போது விவசாய நிலத்திற்கு விவசாயிகள் ஏரிகளில் மண் எடுத்துக் கொள்ளலாம். அது வண்டல் மண்ணா? அல்லது சவுடு மண்ணா? எந்த மண் எடுப்பது? மேலும் ஒரு விவசாயி எத்தனை லோடு எடுக்கலாம்? எந்த வண்டியில் எடுக்கலாம்? எந்த விவரம் இல்லை. மேலும், எதற்காக விவசாயி அந்த மண்ணை எடுத்து, எந்த பயன்பாட்டிற்கு கொண்டு செல்கிறான்? அதன் வரைமுறை என்ன? கலெக்டர் கொடுக்கின்ற அனுமதி, அது ஊழல் முறைகேட்டுக்கு வழி வகுக்காதா? இது […]

Continue Reading

ஒரு அரசு ஊழியர் தன்னுடைய கடமையை செய்ய தவறினால் அவர் மீது வழக்கு தொடர முடியாதா?

அரசு ஊழியர் தன்னுடைய கடமையை செய்யத் தவறி விட்டார் என்றால், அவர் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுத்தர முடியும். ஆனால், அவர்கள் இந்திய தண்டனைச் சட்ட குற்றப் பிரிவு 197 காரணம் காட்டி தப்பித்துக் கொள்கிறார்கள். அது எப்படி என்றால், ஒரு அரசு ஊழியர் அவரது கடமையை செய்ய தவறி இருக்கும் பட்சத்தில் ,அவர் மீது வழக்கு தொடர அந்தந்த துறை செயலாளர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாக அனுமதி கேட்டு பதிவு தபாலில் […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரால் பொதுமக்கள் படும் அவதிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாவட்டத்திலிருந்து மாற்ற திருவள்ளூர் மாவட்ட மக்கள் கோரிக்கை.

ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி செயல்பட வேண்டும்? என்ற முறை தெரியாமல் அவருடைய பெயரில் (ஐஏஎஸ் என்கிற இந்திய ஆட்சிப் பணிக்கு மட்டும்) என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் .படித்து பட்டம் பெறுவது பெருமை அல்ல, அந்த பட்டத்திற்குரிய தகுதியை செயல்பாட்டில் பெறுவது தான் பெருமை.  அந்த வகையில் திருவள்ளூர் கலெக்டர் ஆஃபின் ஜான் வர்கீஸ் அதற்கு தகுதியானவர் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது .நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விடையூர் கிராமத்தில் இருந்து சுமார் […]

Continue Reading