பயிர் காப்பீட்டு நிறுவனங்கள்! விவசாயிகளிடம் பகல் கொள்ளையர்களாக மாறி இருப்பதை தடுத்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிக் கொள்கிறார்களே! தவிர,அந்த விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்களா? விவசாயிகள் 100 நாள் வேலை திட்டத்தால் வேலையாட்கள் கிடைக்காமல் ,எவ்வளவு இன்னல் படுகிறார்கள்? புயல் ,மழை, வெள்ளம் போன்ற பருவநிலை மாற்றங்களால், எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள்? அந்த நஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் எத்தனையோ விவசாயிகள், நிலங்களை விற்பனை செய்திருக்கிறார்கள்.இப்படிப்பட்ட ஒரு போராட்டமான வாழ்க்கை தான் விவசாயிகளின் வாழ்க்கை. இதை கருத்தில் கொண்டு ,மத்திய அரசு பயிர் காப்பீட்டு திட்டம் கொண்டு […]

Continue Reading

போலி பத்திரிகைகளை ஒழிக்க, மத்திய அரசின் நடவடிக்கை பிரிதிகளை அலுவலகத்தில் சமர்ப்பிப்பது மட்டும் தானா ?

மத்திய அரசு இன்று போலி பத்திரிகைகளை ஒழிக்க அந்தந்த பத்திரிகைகள் தங்களுடைய பிரதிகளை அவப்பொழுது அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரஸ் இன்பர்மேஷன் ப்ரோ ( pib) ல்  கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதே மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கின்ற அதே சலுகை, சாமானிய சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கும் கொடுக்க வேண்டும். அதாவது அச்சுப்பிருதிகளை சமர்ப்பிப்பதற்கு உத்தரவு போடும் அதிகாரிகளும், அமைச்சர்களும் சலுகை விளம்பரங்களுக்கு ஏன் அந்த உத்தரவை போடக்கூடாது? […]

Continue Reading

காவிரி தண்ணீருக்கு கர்நாடகம் கைவிரிப்பு ! டெல்டா மாவட்ட விவசாயிகளை தமிழக அரசு காப்பாற்றுமா ?

தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் திறந்து விடக்கூடாது என்பதில் கர்நாடக முதலமைச்சர் சித்ராமய்யா முடிவில், ஒட்டுமொத்த அங்குள்ள அரசியல் கட்சிகள் இரண்டாவது முறையாக கூட்டி, நாளை நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்க அழுத்தம் கொடுக்கிறது கர்நாடக அரசு . இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டெல்டா விவசாயிகளை காப்பாற்ற தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?  குருவைப் பயிர்களை காப்பாற்றுவதற்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் வருமா ?வராதா? அக் கிராம மக்களின் மனநிலை என்ன?

பரந்தூர் விமான நிலையம் வருமா ?அல்லது வராதா? என்ற சூழ்நிலையில் தான் இந்த திட்டம் இருந்து வருகிறது .ஒரு பக்கம் அரசு அதற்கான செயல் திட்டத்தை வகுத்து செயல்பட்டாலும், மக்களின் மனநிலை என்ன ?என்பது பற்றி இதுவரை எந்த ஒரு புள்ளி விவரமோ அல்லது கருத்து கேட்பு கூட்டமோ நடத்தவில்லை . மேலும், இது ஒன்றும் முடியாட்சி அல்ல. அரசர்கள் நினைத்தால், குடிமக்களே ஓரிடத்தில் இருந்து அப்புறப்படுத்தி அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை செயல்படுத்த முடியும். ஆனால், […]

Continue Reading

அதிமுக, பாஜக கூட்டணி முடிவு  நாடாளுமன்ற தேர்தலில் ! அது திமுகவின் வெற்றிக்கு சாதகமா ?

அதிமுக ,பாஜக கூட்டணிப் முடிவு, திமுக வெற்றிக்கு அது சாதகமாக இருக்கும் என்று பத்திரிகை விமர்சகர்கள், மற்றும் அவர்களுக்கு சாதகமான பத்திரிகைகள், தெரிவிக்கும் கருத்து .ஆனால், பிஜேபி மற்றும் அதிமுக கூட்டணி முடிவு எந்த நேரத்திலும், என்ன நடக்கும் ?என்று சொல்ல முடியாது ஒரு குழப்பத்தில் அதிமுக கட்சி இருந்து வருகிறது .மக்கள் அதிகாரத்தில் முன்னமே சொன்னது போல, இதில் அதிமுக கட்சி உடைக்க வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் கட்சி பக்கம் காலை நீட்டும் […]

Continue Reading

என்னடா இது ! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு வந்த சோதனை ?

சமூக வலைத்தளத்தில் இந்து முன்னணி அமைப்பினர் பேசுகின்ற பேச்சு . ஈரோடு பகுதியில் உள்ள சென்னிமல, முருகன் கோயிலுக்கு சொந்தமானது. இதை கிருத்துவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வந்தபோது, இந்து முன்னணியினர் 25,000 மேற்பட்ட மக்கள் அங்கே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வளவு மக்கள் தொகையை குறைந்து மதிப்பிட்டு சொன்ன தினத்தந்தி தொலைக்காட்சியை, இந்து முன்னணி அமைப்பினர் வசைப்பாடி இருக்கிறார்கள். அப்படி ஒரு செய்தியை போடாமலே நீங்கள் இருக்கலாம். ஒருவரை உயர்த்தி, மற்றொருவரை தாழ்த்தி போடும் பத்திரிகை வேலை […]

Continue Reading

அரசியல் கட்சியினரின் ஊழல் செய்த பணத்திற்காக ,வாக்களிப்பதை வாக்காளர்கள், நிறுத்தாத வரை அரசியலில் நேர்மையானவர்கள்! பதவிக்கு வர முடியாது.நாட்டில் ஊழல்வாதிகள் மட்டுமே! பதவிக்கு வரமுடியும். ஊழல்! ஒழிக்க முடியாது- 

ஆசிரியர். அரசியல் கட்சிகள் ஊழல் செய்த பணத்தை தேர்தலில் செலவு செய்வதை நிறுத்தாத வரை ,நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர முடியாது . தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் கடந்த 50 ஆண்டு காலமாக அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்குவது தான் தேர்தல் ஆகிவிட்டது. அதனால்தான், அரசியல் என்பது வியாபாரம் ஆகிவிட்டது .மக்களுக்கு ஆயிரம் 2000 கொடுத்து, ஐயாயிரம் கோடி ,பத்தாயிரம் கோடி, 50 ஆயிரம் கோடி என்ற வரிசையில் ஊழல்கள் நாட்டில் தொடர்கிறது. […]

Continue Reading

தமிழ்நாட்டில் கருவேல மரங்களை அகற்ற ஆர்வம் காட்டும்  தமிழக அரசும், ,சென்னை உயர்நீதிமன்றமும் ,அதில்  கோடிக்கணக்கான வருமானம் அரசுக்கு இழப்பு ஏற்படுவத்துவது தமிழக அரசுக்கும், உயர்நீதிமன்றத்திற்கும், தெரியாதது ஏன்…….?

தமிழ்நாட்டில் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .அதன் அடிப்படையில் தமிழக அரசு தற்போது மாவட்டம் தோறும் அதற்கு கமிட்டி அமைத்து, கருவேல மரங்களை அகற்ற ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், இந்த கருவேல மரம் கோடிக்கணக்கான மதிப்புடையது என்பது தமிழக அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் இதுவரை தெரியாமல் இருப்பது தான் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கருவேல மரத்தின் மதிப்பு சுமார் ஒரு டன் 4500 ரூபாய் […]

Continue Reading

தமிழ்நாடு பனை நல வாரியத்தின் தலைவர் நாராயணனுக்கு பனையரசன் விருது .

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில், தமிழ்நாட்டில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்ட மாணவர்களையும் ,தன்னார்வலர்களையும் ,ஒருங்கிணைத்து  பாராட்டு விழா சென்னை டீலஸ் ஹோட்டலில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் பனை வாரிய தலைவருக்கு பனையரசன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் சிறப்புரையாற்றினார். மேலும், ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி […]

Continue Reading

நீதித்துறை மக்களின் கடைசி நம்பிக்கை ! இந்த நம்பிக்கையை நீதிமன்றமும், நீதிபதிகளும் அதிகார வர்க்கத்திற்கும், பணத்திற்கும், அடி பணிந்து விலை போகக்கூடாது – நீதியின் மீது நம்பிக்கை  வைத்து நேசிப்பவர்கள் .

ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக விளங்கும் நீதித்துறை! இன்று மக்கள் பிரச்சனைகளுக்கும் ,அரசியல் மற்றும் அரசு பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் நீதித்துறை இருந்து வருகிறது .இதில் நீதிமன்றம் ஆட்சியாளர்களுக்காக ,அரசியல் கட்சியினருக்காக, அரசு அதிகாரிகளுக்காக, மந்திரிகளுக்காக ,சலுகை காட்டக் கூடாது.  இங்கே சாமானியனம், அதிகார வர்க்கமும், பணக்காரனும், ஏழையும், ஒருவர் தான். நீதி என்பது மனசாட்சியின் கடவுள். அந்த கடவுளை நீதிபதிகள் யாருக்காகவும், அதன் புனிதம் கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்வது நீதிமன்றத்தின் முக்கிய மாண்பு […]

Continue Reading