சட்டவிரோத கல்குவாரி ,மணல் குவாரி, மலை மண் ,கிரஷர் போன்றவற்றை தடுக்க வேண்டும் என்றால், தமிழக அரசே அதை ஏற்று நடத்துமா ?

சட்டவிரோதமாக நடைபெற்று வரும் சவுடுமண், மலை மண், ஆற்று மணல், கல்குவாரிகள், போன்றவற்றை தடுக்க வேண்டும் என்றால், உடனடியாக அரசு அதை தனியாரிடம் கொடுப்பதை தவிர்த்து, அரசு ஏற்று நடத்த வேண்டும். இதனால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க ஒரே வழி ,அரசே விற்பனை செய்ய வேண்டும். அப்போதுதான் பல கோடிகள் அரசு அதிகாரிகளுக்கு ,கைமாறும் லஞ்சம் அரசுக்கு வருவாயாக வரும். இது தவிர, அளவுக்கு அதிகமாக மணல் […]

Continue Reading

மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது – அமெரிக்க பத்திரிகை ஃபாரின் பாலிசி செய்தி வெளியீடு – இது உலக நாடுகளிடையே இந்தியாவின் வலிமை என்ன என்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த பெருமை .

இஸ்ரேல் சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்தியத்தில் முக்கிய நாடுகளுடன் இந்தியா இணக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா ஒரு முக்கிய நாடாக  உருவெடுத்துள்ளதை பிராந்தியத்தின் மிகவும் சுவாரஸ்யமான புவிசார் அரசியல் முன்னேற்றங்களில் ஒன்றாக இப்ப பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நாடுகள் இந்தியாவுடன் உறவு விருப்பமும், ஆர்வமும் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. இதில் அமெரிக்க எதுவும் செய்வதற்கு இல்லை என்பதுடன் முரண்பாடான வழியில் கூட பயனடைய வாய்ப்பில்லை […]

Continue Reading

இயற்கையின் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாட்டில் வனத்துறை கனிமவளத்துறை ஆறுகள் ஏரி குளங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழக மக்கள் கோரிக்கை.

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக என மாறி மாறி ஆட்சிகளை அமைத்து கனிமவளத் துறையை சுரண்டி பல மாவட்டங்களில் கோடிக்கணக்கில் ஆட்சியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் லாபம் அடைந்திருக்கிறார்கள்.  இவர்கள் சுற்றுச்சூழல் பற்றியோ, இயற்கை வளங்களை அழிப்பது பற்றியோ கவலைப்படுவதில்லை. இதற்கு மாவட்ட ஆட்சியர்கள் முதல் மாவட்ட உயர் அதிகாரிகள் வரை ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு பணம் மட்டுமே இவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது . மேலும் இதன் விளைவு தொடர்ந்து ,இப்படியே இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் […]

Continue Reading

விவசாய விலை பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் விற்பனை செய்ய அமேசான் – கிசான் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் .

விவசாய உற்பத்தி விலை பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய இடைத்தரர்களிடம் விவசாயிகள் ஏமாந்து வருகிறார்கள் அதில் இருந்து அவர்களை மீட்க மத்திய அரசு விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்து அமேசான் கிசான் உடன் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் புரிந்து உணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து உள்ளது. மேலும்,அதிகப்பட்ச விளைச்சல் மற்றும் வருவாய்க்காக விஞ்ஞான ரீதியில் பல்வேறு பயிர்களை பயிர் செய்ய விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் அளிப்பதற்காகவும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்), அமேசான் கிசான் ஆகிய அமைப்புகளுக்கு […]

Continue Reading

கிராம (KVIC) பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஆத்ம நிர்பர் பாரத் அபியான் திட்டம் – பிரதமர் மோடி .

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதன் மூலம் வலுவான இந்தியாவின் ஒரு மகிழ்ச்சியான படத்தை உலகின் முன் வழங்கியுள்ளது. மேலும், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக, காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய தயாரிப்புகளின் விற்றுமுதல் ரூ.1.34 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த 9 நிதியாண்டுகளில், கிராமப்புறங்களில் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு காதி பொருட்களின் விற்பனையில் 332% வரலாறு காணாத […]

Continue Reading

தமிழக அரசுக்கு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தமிழ்நாடு பனை வாரியத்தை உருவாக்க கோரிக்கை.

தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரன் தலைமையில் அதன் நிர்வாகிகள் ,  தமிழ்நாடு அரசு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரித்தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணனை சென்னையில் சந்தித்து இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்துள்ளனர் . அம்மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் , பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், கயிறு வாரியம், காதி வாரியம் என தனித்தனியாக வாரியங்கள் செயல்படுகிறது. அவ்வாறு செயல்படுவதால் , பனைத் தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்குதல் மட்டுமே நலவாரியத்தால் செயல்படுத்த […]

Continue Reading

கடந்த 9 ஆண்டுகளில் மீன் வளத்துறைக்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலனுக்காக ரூ. 38,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 2015 இல் தொடங்கப்பட்ட நீலப்புரட்சி திட்டத்துக்கு ரூ. 5,000 கோடி, பிரதமந்திரி மத்சய சம்பதா திட்டத்துக்கு அதாவது தர்சாற்பு இந்தியா நடவடிக்கைகளுக்காக ரூ. 20,000 கோடி, உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 7,500 கோடி, படகுகளைப் பதிவுசெய்தல், டிஜிட்டல் மயமாக்குதலுக்கு ரூ.6,000 கோடி என இதுவரை மொத்தமாக  ரூ. 38,500 கோடி நிதி ஒதுக்கீடு […]

Continue Reading

இந்திய அஞ்சல் துறையின் மீடியா போஸ்ட் வணிகத்தின் சேவை

இந்திய தபால் துறையில் விளம்பர சேவையை வழங்கும் புதிய பொறிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையின் மீடியா போஸ்ட் மூலம் வணிக நிறுவனங்களின் வியாபார வளர்ச்சி திட்டத்தை இந்திய தபால் துறை கொண்டு வந்துள்ளது இது குறைந்த செலவில் தங்களுடைய வியாபாரத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் புதிய முறை தான் இந்திய அஞ்சல் துறை மீடியா போஸ்ட் சேவை. மேலும் இது அரசு மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை திறம்பட மேம்படுத்த உதவும் வகையில் […]

Continue Reading

ரயில் நிலையங்களில்! உள்ளூர் தயாரிப்புகளுக்கான விற்பனை நிலையங்கள்.

மத்திய அரசு 728 ரயில் நிலையங்களில் தயாரிப்பு விற்பனை நிலையங்கள்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் அதன் பயன்பாட்டு நோக்கத்தை அதிகப்படுத்துவதற்காக இந்த திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ஒரு பக்கம் உற்பத்தியை பெருக்கி விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கம் என்றாலும் அது இந்திய மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்போது சமூக பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் இதற்காக மத்திய அரசு ‘உள்ளூர் மக்களுக்கான […]

Continue Reading

கலாச்சார மையத்தின் பிரதிபலிப்பு தான் ஜனசக்தி ஒரு கூட்டு சக்தி என்ற தேசிய நவீன கலைக்கூட கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி.

புது டெல்லி உள்ள தேசிய நவீன கலைக்கூடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி ஜனசக்தி ஒரு கூட்டு சக்தி என்னும் கண்காட்சியை தேசிய நவீன கலைக்கூடத்தின் கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் பிரதமரின் வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது அத்தியாயத்தை குறிக்கும் வகையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி இந்தியாவின் கலைப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதுடன்,  மனதின் குரல் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்படும் கருப்பொருள்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. மேலும் கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமரிடம் ,  கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகள் பற்றி விளக்கிக் கூறும் வாய்ப்பைப் பெற்றனர். ஜெய்ப்பூர் இல்லத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க குவிமாடத்தில் ஜன சக்தி கண்காட்சியின் அதிவேகத் திட்டக் காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். கலைப்படைப்புகளைப் பார்த்த பிறகு, பிரதமர் ஜன சக்தி கண்காட்சி அட்டவணையில் […]

Continue Reading