
மக்கள் அதிகாரம் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை செய்திகளை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது. அதில் தேர்தல் ஆணையம் காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.

பெரும்பாலும் அம்பேத்கர் காலத்தில் வாழ்ந்த மக்களின் மனநிலை வேறு, தற்போது வாழ்கின்ற மக்களின் மனநிலை வேறு.,வாக்களிக்கின்ற உரிமை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை விற்பனை செய்தால்,அவர்களுடைய வாக்குகளை நீக்குங்கள்.

ஒருவர் வாக்களிக்க பணம் கொடுக்கும் போதும், பணம் வாங்கும் போதும்,அதற்கான தகுதி இருவரும் இழந்து விடுகிறார்கள். எதற்காக வாக்களிக்க வேண்டும்? ஏன் வாக்களிக்க வேண்டும்? அதைப்பற்றி தெரியாத மக்கள்,பணம் கொடுத்து அவர்களை வியாபார நோக்கத்துடன் வாக்குகளை பெறும் போது, தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூட,படித்தவர்களையும், பட்டதாரிகளையும்,விஷயம் தெரிந்தவர்களையும், வாக்காளர்களாக அவர்களுடைய ஆட்சியில் இருந்தார்கள்.இங்கே வாக்களிப்பது என்பது ஒருவருடைய தகுதிக்கா? அல்லது அவர்களுடைய இலவச பேச்சுக்கா? கட்சிக்கும் அர்த்தம் தெரியாது, ஓட்டுக்கு அர்த்தம் தெரியாது,ஆனால், பணம் வாங்கிக் கொண்டு எந்த சின்னத்தில் சொல்கிறார்களோ, அந்த சின்னத்தில் வாக்களிக்க மட்டும் தெரியுமா?

இது மக்களின் சுயநலமா? அல்லது பொது நலமா? தேர்தல் என்பது பொது நலம்,அது சுயநலமற்றது. ஆனால்,பொதுநலத்தை சுயநலமாக அரசியல் கட்சிகள் மாற்றி விட்டதால், மக்களுக்கு பொதுநலத்திற்கும்,சுயநலத்திற்கும் அர்த்தம் தெரியாமல், இன்றைய அரசியல் திணறிக் கொண்டிருக்கிறது.

ஊழல்வாதிகள் மீது வழக்கு விசாரணையில் இருந்தால் கூட,தேர்தலில் நின்று வெற்றி பெறுகிறார்கள்.அப்படி என்றால், இந்த மக்களுக்கு வாக்களிக்க தகுதி உள்ளதா? இல்லையா? எதற்காக இவர்களுக்கு வாக்களிக்க அந்த உரிமையை கொடுக்க வேண்டும்?
ஒரு தகுதியான வேட்பாளரை தேர்வு செய்ய, தகுதி இல்லாத வாக்காளர்களுக்கு, வாக்களிக்க உரிமையை கொடுப்பது, நாட்டை பலவீனப்படுத்தும் செயல்.

தேர்தல் என்பது நாட்டின் முன்னேற்றம்,மக்களின் முன்னேற்றம்,சமூகத்தின் முன்னேற்றம்,சமூகத்தின் பாதுகாப்பு,நாட்டின் பாதுகாப்பு,பொருளாதார முன்னேற்றம்,கல்வி, வேலை வாய்ப்பு, எத்தனையோ உள்ளடக்கிய ஒரு அதிகாரத்தின் எல்லை தான்,இந்த தேர்தல்.

இப்படி அதிகாரத்தை வாங்கிக் கொண்டு, மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்கள் மீது,எந்த சட்ட நடவடிக்கையும் மக்களால் எடுக்க முடியவில்லை. தவறு செய்தவர்களை,ஊழல் செய்தவர்களை மக்கள் அவர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்தால் மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

அதேபோல் தகுதி இல்லாத வாக்காளர்களை தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். அம்பேத்கர் காலத்தில் மிகவும் வறுமையில்,கஷ்டத்தில் வாழ்ந்த மக்கள் அவர்களுக்கு வாக்குரிமை இல்லை.சுதந்திரம் கிடைத்த பிறகு தான் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வந்தது.
ஆனால்,அவர்கள் வாக்களிக்க யாரிடமும் பணம் வாங்கியது இல்லை.கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள். ஆனால், இப்போது கேட்டு வாங்குகிறார்கள். இதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை.கடமைக்கு தேர்தல் என்று தேர்தல் ஆணையம் இருக்கக் கூடாது. இந்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
சமூகத்தில் ஒரு பெண்,இந்த ஊழலை பற்றியும், நாட்டின் தேர்தலை பற்றியும்,எவ்வளவு தெளிவாக புரியும் படி தெரிவிக்கிறார். மக்களுக்கு இப்போதாவது விழிப்புணர்வு ஏற்படுமா? காலத்திற்கு ஏற்ப தேர்தல் ஆணையம் இந்த சட்டங்களை எல்லாம் மாற்றுமா?