தமிழ்நாட்டில் தலையாரிகளை சொந்த ஊரில் இல்லாமல், 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பணியமர்த்தி மூன்று வருடத்திற்கு ஒருமுறை தமிழக அரசு அவர்களை மாற்றுமா? – தமிழக கிராம பொதுமக்கள் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

கிராமங்களில் தலையாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் செய்யக்கூடிய திரை மறைவு வேலைகளால் இன்று ஒவ்வொரு தாலுக்கா மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் ஒரு நாளைக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

இதனால், கோட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்,தாலுகா அலுவலகத்திலும்,அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக இருப்பதில்லை. அதற்கு பொதுமக்கள் மாதக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிறது.

என்ன விஷயம் என்று ஒவ்வொன்றாக பார்ப்போம். பெரும்பாலும் பட்டா பெயர் மாற்றம்,ஒருவருடைய சொத்தில் இன்னொருவர் தள்ளி கல்லை போட்டு அனுபவித்துக் கொண்டிருப்பது, நில அளவை கோரும் மனுக்கள், வரப்பு தகராறு, வாய்க்கால் தகராறு,பாகப்பிரிவினை,சொத்து தகராறு,இப்படி இத்தனை விஷயங்களுக்கும் யார் பணத்தை கொடுப்பார்கள்?

அவர்களுக்கு சாதகமாக இவர்கள் திரை மறைவு வேலை செய்து கொண்டிருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்துக் கொண்டு,நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை நாளைக்கு அவர்களுடைய வேலையும்,வருமானத்தையும் விட்டுவிட்டு, கோட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும், நடந்து கொண்டிருப்பார்கள்?

அங்கே கோர்ட் வாய்தா போல், இந்த வாரம், அடுத்த வாரம்,என்று வாய்தா போட்டுக் கொண்டே இருப்பார்கள். யாருக்கும் பணம் கொடுக்காமல், வேலை நடக்காது. இதற்கு சில புரோக்கர்களும்,அங்கே இருப்பார்கள். இப்படி விவசாயிகளுடைய சொந்த நிலத்தில் உள்ள பிரச்சனையை ஏற்படுத்தி, கொண்டிருக்கும் முக்கிய நபர்கள் யார் என்றால்,அந்த கிராமத்தில் உள்ள தலையாரி தான் முதலாளாக இருக்கிறான்.

அது எப்படி என்றால்?அவன் சொந்த கிராமத்திலே ஒரு பத்தாண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருந்தால்,அந்த கிராமத்தில் யார்? யார்? நிலம் என்று ஏற்கனவே அவனுக்கு தெரிந்திருக்கும். இது தவிர,, அவரவர் குடும்ப வரலாறு எல்லாம் தெரிந்து இருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகள் தான் அவன் திரை மறைவு வேலைகளை ஆரம்பிக்கிறான். இவனே இந்த திரை மறைவு, வேலைகளை செய்துவிட்டு, பட்டா மாற்ற,,பெயர் மாற்ற,, நில அளவை செய்ய,,பணம் வாங்கி புரோக்கர் வேலையில் ஈடுபடுகிறான். இந்த மக்களால் தொடர்ந்து அலைய முடியாது அவன் கேட்கும் பணத்தை கொடுத்து விடுகிறார்கள். இருப்பவர்கள் கொடுப்பார்ங்கள்,

இல்லாதவர்கள் எப்படி கொடுப்பார்கள்? இந்த நிலைமை ஒவ்வொரு கிராமத்திலும், பொதுமக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒருவருடைய நிலத்தில் எந்த அளவு இருக்கணுமோ, அது இல்லாமல் காசு கொடுக்கும்போது பக்கத்தில் உள்ள நிலத்தையும் 10 சென்ட் ஏத்தி கம்ப்யூட்டரில் வைத்து விடுவார்கள். பட்டாவை மாற்ற புகார் அளிக்க வந்தால் இவர்கள் மாற்றிக் கொடுக்கிறேன் என்று அதற்கான பணத்தை வாங்குகிறார்கள். ஆக கூடி கிராம அதிகாரியும், தலையாரியும் சேர்ந்து, கிராமத்தில் இந்த வேலைகளுக்கு எல்லாம் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, இவர்கள் செய்யக்கூடிய தவறுகளை பொதுமக்கள் தட்டி கேட்டாலோ அல்லது அரசு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் இவர்கள் அரசியல் கட்சி போல் சங்கத்தை வைத்துக்கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மிரட்டல் எல்லாம் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், இவர்களுடைய பாட்சா பலிக்கவில்லை. அதனால் உடனடியாக தமிழக அரசு ஒவ்வொரு கிராமத்திலும்,அதாவது சொந்த கிராமத்தில் இருக்கக்கூடிய தலையாரிகளை 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மாற்ற வேண்டும்.

அப்போதுதான் அந்த கிராமத்தில் போய் இவர்கள் இந்த வேலையெல்லாம் செய்ய முடியாது. அதேபோல், கிராம நிர்வாக அதிகாரியும் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். மேலும், மக்கள் அதிகாரத்தில் இதேபோல் பொதுமக்கள் நலன் கருதி கிராம பஞ்சாயத்து உதவியாளர்களை சொந்த ஊரில் இருக்கக் கூடாது என்ற கோரிக்கை சில ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிடப்பட்டது.

அதற்கு உடனடியாக ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா பஞ்சாயத்து உதவியாளர்களை சொந்த கிராமத்தில் இருந்து அகற்றி 10 கிலோமீட்டர் தொலைவில் மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

அது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து, தலைவர்களுடன் கூட்டு சேர்ந்து மிகப்பெரிய அதிகார சக்தியாக இருந்ததை உடைக்கப்பட்டது.

அதேபோல் தமிழக அரசு இந்த தலையாரிகளின் ஆட்டத்தை அடக்க வேண்டும் என்றால்! அவர்கள் சொந்த ஊரிலிருந்து 10 கிலோ மீட்டருக்கு மேல் போய் வேலை செய்ய வேண்டும்.மேலும், சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட ஏரியாவில் ஒரு கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரி,தலையாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூன்று பேரையும் சேர்த்து சஸ்பெண்ட் செய்துள்ளனர். இவர்கள் எதற்காக சஸ்பென் ஆனார்கள்?என்ற விவரத்தை அதிகாரிகள் சொல்லவில்லை. ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் மட்டும் எனக்கு கிடைத்தது.

எனவே, தமிழக அரசு கிராம பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக இந்த கிராம தலையாரிகள் பணி மாற்றம் செய்ய அரசு உத்தரவு போட வேண்டும் என்பது கிராம பொதுமக்கள் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *