தமிழ்நாட்டில் பிஜேபி, ஆர் .எஸ் .எஸ் மோடி , இந்தியாவில் பல லட்சம் கோடி ஊழல் செய்த விட்டது போல பேசுகின்ற ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தெரியாத மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த பதவி வீணா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

பல லட்சம் கோடி ஊழல் செய்த திமுக ஆட்சில் ஸ்டாலின் நல்லது செய்து விட்டார் போல மோடியின் ஆட்சியில் இந்தியா 50 ஆண்டுகளுக்கு பின்னால் சென்று விட்டது பலர் பத்திரிகையாளர் போர்வையில் பல போலிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சொல்கின்ற பொய்க்கு ஆதாரம் இருக்கிறதா? பிஜேபி ஆர்எஸ்எஸ் இந்த நாட்டில் செய்த துரோக வரலாறு என்ன? காங்கிரஸ் 50 ஆண்டுகாலம் இந்தியாவை ஆண்டது அதன் துரோக வரலாறு என்ன அது எல்லாம் இவர்களுக்கு தெரியுமா?

ஆனால், அதையும் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் சொல்கிறார்கள். அதுதான் எங்களுக்கு ஒன்ற பத்திரிக்கையாளர்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும்,

இவர்கள் கைக்கூலிகளாக புரோக்கர் வேலை செய்யக்கூடிய கூட்டங்கள் பத்திரிக்கைக்கும், அரசியல் கட்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆக்கி விட்டார்கள்.தவிர,

தமிழ்நாட்டில் ஊடகங்கள் பெயரில் போலிகள் ,அரசியல் கட்சியினர் போல், பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ‌.இதை எல்லாம் நடவடிக்கை எடுக்க தகுதியில்லாத ஒரு நபர் தான் தகவல் ஒளிபரப்புத்துறை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். இவருக்கு செய்தித் துறையைப் பற்றி என்ன தெரியும்?

எவ்வளவோ உண்மைகளை மத்திய அரசுக்கும் ,மாநில அரசுக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிகையின் மூலம் சொல்லுகின்ற உண்மைகள், ஸ்டேட் லெவல் ஆபீசர்களும், மாவட்ட லெவல் உள்ள அதிகாரிகளுக்கும், புரியும்போது, இவர்களுக்கு ஏன் புரியவில்லை?

மேலும், பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம், பத்திரிகை என்று பேசிக் கொண்டிருக்கிறான். தமிழ்நாட்டில் ஊடகங்கள் பெயரில் பொய்களை சொல்லி, மக்களிடம் செய்திகள் என்று சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும், போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,பத்திரிக்கை என்பது பெரிய பக்கங்களாகவும் ,கோடிக்கணக்கில் முதலீடு செய்தால் தான், அது பத்திரிக்கை . ஆனால், அதன் செய்திகள் மக்களுக்கு என்ன பயன்? என்பதைப் பற்றி ஆய்வு செய்வதில்லை. அது உண்மையா? பொய்யா? அதுவும், ஆய்வு செய்வதில்லை. இது எல்லாம் தெரியாத முருகனுக்கு மோடி மத்திய இணையமைச்சர் பொறுப்பு கொடுத்தது வீணானது.மேலும்,

கோடிக்கணக்கில் முதலீடு செய்து தொலைக்காட்சி நடத்தினால் தான் அது ஊடகம் ‌.இது போன்ற பத்திரிக்கை துறைக்கும், செய்தி துறைக்கும், இது போன்ற பத்திரிகையாளர்கள் போர்வையில் இருக்கக்கூடிய போலிகளுக்கும், மக்கள் அதிகாரம் சொல்வது என்ன? என்றால், ஒருவன் பெரிய கோடீஸ்வரன், அவன் கல்யாணம் செய்கிறான் அவனுடைய பெண்ணுக்கும் ,ஒரு ஆணுக்கும் கல்யாணத்தில் ஏகப்பட்ட விருந்துகள், கச்சேரிகள் பெரிய அளவில் இருக்கிறது. அதற்காக பல கோடிகளை செலவழிக்கிறான்.

ஆனால் ,கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் கணவன், அந்த பெண்ணுக்கு ஏற்ற கணவனாக இருப்பானா? என்பது சந்தேகமாக இருக்கிறது. சமூகத்தில் பையனுக்கு நன்மதிப்பில்லை. பெண்ணுக்கும் நல்ல கேரக்டர் இல்லை. இதை யார் பேசிக் கொள்கிறார்கள்? என்றால் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள், சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், இவர்களுடைய அந்தரங்க வாழ்க்கை பூரா தெரிந்திருக்கிறது.

இதுதான் இன்றைய கார்ப்பரேட் ஊடகங்களின் நிலைமை. பெரிய அளவில் கோடிகளில் முதலீடு செய்திருக்கலாம். ஆனால், அதன் பயன்கள் சமூகத்திற்கு குறைவாகவும் , மக்கள் மத்தியில் பேசப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் ,இதையெல்லாம் யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்? மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் எதற்கு எடுத்தாலும், பாஜக ,ஆர் எஸ் எஸ் ,இதை குறை சொல்லியே ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் அரசியல் செய்கிறார்கள். சரி, இவர் யார் என்று கூட தெரியவில்லை. இருப்பினும், இவருக்கு ஒரு கேள்வி வைப்போம்.

சமூக ஊடகத்தில் பேசிக் கொண்டிருக்கின்ற இந்த நபர் ஆர்எஸ்எஸ், பாஜக சித்தாந்தத்தில் விஜய் போவது தவறு. ஆனால், இதுவரை திமுக 5 ஆண்டுகள் ஆட்சியில் மக்கள் எவ்வளவு வேதனைகள்? எவ்வளவு பிரச்சனைகள் சந்திக்கிறார்கள்? எவ்வளவு ஊழல்கள்? இது எல்லாம் நல்லாட்சி, மக்களின் கதறல்கள் தினம் தோறும் அது நல்லாட்சி.

பேசத் தெரிந்தவனா? உன் பேச்சு எல்லாம் முட்டாள்களிடம் தான் இவர்கள் பேச முடியும். இவர்கள் இவர்களெல்லாம் பத்திரிகை ஊடகவியலாளர்களா ?அல்லது அரசியல் பேச்சாளர்களா?

மேலும்,மக்களுக்காக பணியாற்ற பிஜேபினருக்கு தகுதி இல்லை என்றால், தமிழ்நாட்டில் வாய்க்கு வந்தபடி ,ஒவ்வொருவனும் பேசிக் கொண்டிருப்பான். அதற்கு செயலில் மக்கள் பணியை செய்து காட்டுவார்களா? அதை பிஜேபியால் செயல்படுத்தி காட்ட வேண்இவர்களால் அது முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *