பனைமரம் வெட்டி அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்த திருத்துறைப் பூண்டி வட்டாட்சியருக்கு பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து பாராட்டு.

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

ஜூன் 24, 2024 • Makkal Adhikaram

பனைமரம் இன்று இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பாதுகாப்பதில் முக்கியத்துவம் ஆனது .அதனால் டெல்டா மாவட்டங்களில் பனைமரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருவது குறித்து கவலை தெரிவித்த பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பருத்தி சேரி ராஜாஇது சம்பந்தமாக வட்டாட்சியருக்கு புகார் அளித்துள்ளார் அதன் பெயரில் நடவடிக்கை எடுத்த வட்டாட்சியர் .

 30 கொக்கலாடி கிராமத்தில் வசிக்கும் கருப்பையா மகன் மாரிமுத்து, இந்த பண மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், வட்டாட்சியர் இது சம்பந்தமாக அவர் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதை இயற்கையின் சமூக ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர் .

மேலும், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியருக்கு பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பருத்திச் சேரி ராஜா மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *