வன்னியர் சமுதாயம்!ராமதாசையும்,பாட்டாளி மக்கள் கட்சியும்,ஒதுக்கி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தை வன்னிய சமுதாயம் ஆதரித்தால், சி.வி.ஷண்முகம், துணை முதல்வர் ஆனால், சமூகத்திற்கு பல நன்மைகள் கிடைக்குமா? – வட தமிழக வன்னியர்கள்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அதிமுக – பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பான்மை சமூகமான வன்னியர் சமுதாய வாக்குகள் வட தமிழகத்தில் நிச்சயம் 120 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் இருக்கிறது.மேலும்,

இந்த சமுதாயத்தின் வாக்குகள் இல்லாமல் வட தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும்,வெற்றி வாய்ப்பை பெற முடியாது. இருப்பினும், ராமதாஸ் இந்த வட தமிழகத்தில் வாக்குகளை பெற்றுதான் கூட்டணிக்கு பலத்தை சேர்த்து வந்தார்.

இப்போது அவருடைய அரசியல் மற்றும் குடும்ப சண்டை,வன்னிய சமுதாயத்திற்கு எதிரானதாக தான் இருக்கிறது. இன்று வரை இந்த சமுதாயத்திற்கு அவர் செய்த எந்த ஒரு நன்மையும் இல்லை. இது அரசியல் தெரிந்த வன்னிய சமூகத்தினருக்கு தெரியும். தெரியாதவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில்,வன்னிய சமுதாயத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதை எப்போது சமுதாயம் புரிந்து கொள்ள போகிறது? என்பது அவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? இல்லை அது அவர்களின் சுயநலமா? இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி வன்னிய சமூகத்திற்கு ஒரு துரோகத்தை இந்த நாள் வரை ஏற்படுத்தி இருக்கிறது.

அதன் வலி,வேதனை, என்ன? என்பது அந்த பாட்டாளி மக்கள் கட்சியில் சமூகத்திற்காக பாடுபட்டவர்கள்,பணத்தை இழந்தவர்கள், உழைப்பை இழந்தவர்கள்,, சொத்தை இழந்தவர்கள்,வாழ்க்கை இழந்தவர்கள், அனைவருக்கும் அந்த வலி வேதனை என்ன என்று அவர்களுக்கு தெரியும்.

அதிலிருந்து மாற்றுக் கட்சிக்கு சென்று விட்டார்கள், விலகி விட்டார்கள். ஆனால், சி.வி சண்முகம் அதிமுகவில் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சமுதாயத்திற்கு செய்த பணிகளை பட்டியலிட்டு சொல்கிறார்கள். அதுபோல் ராமதாஸ் செய்தது என்ன? என்பதை பட்டியலிட்டு சொல்லட்டும்.அது மனசாட்சியுடன் இருக்க வேண்டும்.மனசாட்சி இல்லாமல் எதையாவது சொன்னால், ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள்.

மேலும்,மனசாட்சியுடன் சொன்னாலும் அது எங்களுக்கும். ராமதாஸ் என்ன பொய் சொன்னாலும் அதுவும் தெரியும். அதனால்,பொய் எது?உண்மை எது?என்பதை நோண்டி எடுக்கும் தகுதி எங்களுக்கு இருக்கிறது.

அதனால்,ராமதாஸ் எந்த பொய் சொன்னாலும்,அன்புமணி என்ன?பொய் சொன்னாலும்,அதுவும் எங்களுக்கு தெரியும்.மேலும்,சிவி சண்முகம் செய்தது என்ன?என்பதை வன்னியர் சமூகம் தெரிந்து கொள்ள அவர் செய்தது என்ன? இதோ!

வன்னிய பொது சொத்து நல வாரியம் 44/2018 நிறைவேற்றப்பட்டது.

வன்னியர் உள் இட ஒதுக்கீடு, 10.5 % சட்டம்8/2021 ல் நிறைவேற்றப்பட்டது.

ராமசாமி படையாட்சியாருக்கு கிண்டியில் அரசு விழா, கடலூரில் மணிமண்டபம், சட்டசபையில் படத்திறப்பு விழா நடத்தப்பட்டது.

மயிலாடுதுறையில் மண்ணின் மைந்தர்களின் வன்னியர்களின் நூறாண்டு கால எங்களுடைய பொது சொத்தில் வாரியம் மூலம் தியாகி நாகப்ப படையாட்சியாருக்கு சிலை வைக்க ஒரே நாளில் அனுமதி வழங்கி இரவோடு இரவாக சிலை வைத்து காலை 4.30 மணிக்கு சிலை திறக்கப்பட்டது.

மேலும்,
ராமதாசுக்கு தொடர்பு இல்லாத வன்னிய பொது சொத்தை அபகரிக்கும் வகையில் ராமதாஸின் தூண்டுதலின் பேரில் தகராறு செய்யப்பட்டதால், நாகப்ப படையாட்சி சிலையும், வைத்த இடமும் காவல் நிலையத்தால் மூடி சீல் வைக்கப்பட்டு, நான்காண்டுகள் கடந்து விட்டது.

ராமதாஸ் வன்னிய சமுதாயத்திற்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.ஆனால், தொடர்ந்து இந்த உள்ளடி அரசியலை செய்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் சமுதாயம் எப்போது தெரிந்து கொள்ள போகிறது?

மேலும், வன்னிய சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு 10.5 % யை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்பு, அதை முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் முயற்சியால் சிஆர் ராஜன் மூலம் மேல்முறையீடு செய்து, வன்னியர் களுக்கு 10. 5% புதிய தரவுகளுடன் நிறைவேற்ற 102வது &105 வது அரசியலமைப்பு சட்டப்படி,மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என தீர்ப்பு பெற்றதால், இன்றும் அந்த 10.5% இட ஒதுக்கீடு உயிரோட்டத்துடன் உள்ளது என்று சி.ஆர். ராஜன் தெரிவித்துள்ளார்.

எனவே, வன்னியர் சமுதாயம் இதனால் வரை எப்படியோ வாழ்ந்தது, ஆனால்,இப்பொழுது வருங்கால இளைய வன்னியர் சமுதாயம் கல்வியில் முன்னேற,அவர்கள் நலன் கருதி,ஒற்றுமையுடன் சமூகம் சி.வி.சண்முகத்திற்கு ஆதரவு தந்தால்,வன்னிய சமூகத்தின் முன்னேற்றம் இந்த 10.5% உள்ளது. என்பதை சமுதாயம் இனிமேலாவது புரிந்து,உணர்ந்து சிவி சண்முகத்திற்கு ஆதரவளிப்பார்களா? அளித்தால்! சமுதாயத்திற்கு உயர்வு நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *